மாடுகளை தார்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களை கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களை பார்ப்போம்.
ஆயுள் காப்பீடு செய்து கொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டு காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்கு குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர் பார்க்கப்பட்டதை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது.
ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும் போது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள் காலம் குறித்து ஒரு கணக்கு இருக்கும் அல்லவா?, அந்த கணக்கை காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டது.
"இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்து பட்டை நரம்பு நோய்கள் மிக அதிக அளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்கா மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும், இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும், இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததை காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸலின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது பாலினம் (ஆண் /பெண்) ஆகிய வற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
அதாவது இந்த க்ளினிக் ல் இருந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு.
சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே , 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களை பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தை விட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்து போனார்கள்.
அதாவது 10 பேர் இறந்து போவார்கள் எனக்கணக்கிட்டால் ஏறத்தாழ 38 பேர் இறந்து போனார்கள். என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் "ட்ரிவர் ஆர்சர்ட்" ஆகியோர்.
இங்கேயுள்ள அலோபதி மருத்துவர்களில் எத்தனை பேர் இந்த ஆய்வு அறிக்கையை வாசித்து இருப்பார்கள், என சிந்தித்து பாருங்கள். மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் நீட்டும் விளம்பர படிவங்களை வாசித்து, அம்மருந்துகளை எழுதித் தள்ளினால் கிடைக்கும் "அன்பளிப்புகளை பற்றி சிந்திக்கும் மருத்துவர்கள் தான் அதிகம். மக்களை காப்பாற்ற தேவையான ஆய்வுகளை படித்து, அவற்றுக்கேற்றவாறு மருந்துகளின் அளவையும் தன்மைளையும் மாற்றி பரிந்துரைக்கும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதியை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன, ஒன்று அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும், அல்லது நோயால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில் அவர் நோயை குணப்படுத்துவதும் இல்லை, எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகளை பரிந்துரைப்பதும் இல்லை.
சர்க்கரை "நோயை அமைதியான கொலைகாரன் (silent killer) என்கிறது அலோபதி மருத்துவம், உண்மையில்" அமைதியாக கொலை" செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை வீணடிக்கிறோம் எனப் பொருள்.
இனிப்பாக நாளை தொடரும்...........
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment