முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 சமீபத்தில் புதுதில்லியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உலகச் சுற்றுச்சூழல் வசதி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் சிறு மானியங்கள் திட்டம் Small Grants Programme) ஆகியவற்றின் மீது ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
🍀 ′Undaunted: Saving the Idea of India′ என்ற தலைப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் (P. Chidambaram) எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
🍀 பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக, ′இன்ஃபோஸிஸ்′ (infosis) நிறுவனம் ′′ என்று பெயரிடப்பட்டுள்ள மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
🍀 தென் கொரியாவில் உள்ள சியோல் அமைதி விருது, கலாச்சார அமைப்பு சார்பில், பிரதமர் மோடிக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டன.
🍀 ராஜஸ்தான் மாநில அரசு சட்டப்பேரவையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதா - 2019 என்ற மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.
🍀 இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்மார்ட் குப்பைத்தொட்டி, Smart Dustbin (Reverse Vending Machine) பயன்பாட்டினை, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
🍀 எல்.ஐ.சியின் 'மைக்ரோ பச்சத்" (Micro bachat) என்னும், புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
🍀 புதுதில்லியில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால், உலக நீடித்த வளர்ச்சி மாநாடு துவக்கி வைக்கப்பட்டது.
🍀 இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவராக, கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம் துணைத் தலைவர்களாக, தினேஷ் பட்டீல், ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
🍀 செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சு+ழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, நாசா 2003-ம் ஆண்டு அனுப்பிய ஆபர்ச்சுனிட்டி ரோவர் முழுமையாக செயலிழந்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment