###Police Exam 2019 : பொதுத்தழிழ் - முக்கிய வினா விடைகள் - 2019
பொதுத் தமிழ் வினா விடைகள்
##TN POLICE
1. பாரதியாரின் இயற்பெயர் என்ன? - சி.சுப்பிரமணியம் (எ) சுப்பையா
2 பாரதியாரின் பெற்றோர் பெயர் என்ன? - சின்னசாமி ஐயர்,இலக்குமி அம்மாள்
3. பாரதியார் பிறந்த ஊர் எது? - எட்டயபுரம்(தூத்துக்குடி மாவட்டம்)
4. பாரதி என்பதற்கு -------- என்று பொருள். - கலைமகள்(சரசுவதி)
5. அறிவில் சிறந்த இல்லறத்தார்க்கு கொடுக்கும் பட்டம் எது? - பாரதி பட்டம்
6. ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்கு கொடுக்கும் பட்டம் எது? - சரசுவதி பட்டம்.
தேர்வில் வெற்றி பெற வேண்டுமா ?
பாரதியார் எந்த ஆண்டு எட்டயபுரத்து அரசவைக் கவிஞர் ஆனார்? - கி.பி.1902
8. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளி எது? - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி.
9. பாரதியார் எந்த ஆண்டு "சக்கர வர்த்தினி" என்ற இதழைத் தொடங்கினார். - கி.பி.1905.
10. பாரதியார் எந்த ஆண்டு "இந்தியா" என்ற நாளேட்டினைத் தொடங்கினார். - கி.பி.1907.
11. ஜென்மபூமி என்ற தலைப்பில் 2வது கவிதை தொகுப்பு எந்த ஆண்டு வெளியானது. - கி.பி.1910.
12. பாரதியாரின் சிறப்பு பெயர்கள் : தேசியக்கவி, மகாகவி, விடுதலைக்கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி,பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் - கவிமணி, தமிழ்நாட்டின் கலில்கிப்ரான், தமிழ்நாட்டின் வால்ட் விட்மென்.
13. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியவர் யார்? - பாரதியார்.
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்று கூறியவர் யார்?கி.ஆ.பெ.விஸ்வநாதம்
Click_Here
No comments:
Post a Comment