######TNPSC_CURRENT_AFFAIRS|அருந்ததி எனப்படும் புதிய திட்டம் அறிமுகம்!! - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 நாடு முழுவதுக்கும் பொதுவான, ′112′ என்ற, அவசர உதவி தொலைபேசி சேவை, தமிழகம் உட்பட, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டுக்கு வந்தன.
🍀 மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக இருந்த, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 இஸ்ரேலின் மிகப்பெருமை வாய்ந்த, டான் டேவிட் பரிசினை, இந்த வருடம் மிகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியரான, சஞ்சய் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.
🍀 ஐந்தாவது, சர்வதேச அணைகள் பாதுகாப்பு மாநாடு, (International Dam Safety Conference) ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது.
🍀 ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கஜாபதி மாவட்டத்தில் ஜிராங் எனுமிடத்தில் திபெத்திய புத்தமதத்தை நிறுவியவரான, குரு பத்மசம்பாவாவின், 19 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
🍀 தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரிகளின் பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
🍀 'சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் - நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை" (Law, Justice and Judicial Power - Justice P.N. Bhagwatis Approach) என்ற புத்தகத்தை பேராசிரியர் 'மூல் சந்த் சர்மா" (Mool Chand Sharma) எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.
🍀 மணப் பெண்களுக்கு இலவசமாக தங்கத்தை வழங்கும் வகையில், அசாம் மாநில அரசானது, 'அருந்ததி" எனப்படும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
🍀 ஒடிசா மாநில அரசு, திருப்பூரில் புலம் பெயர்ந்தவர்களுக்கான உதவி மையத்தை ஆரம்பித்துள்ளது.
🍀 உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில், ரஷ்யாவுடன் இணைந்து, நவீன ரக துப்பாக்கிகள் தயாரிக்க, ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
No comments:
Post a Comment