7 ஆண்டுகள் சிறை : மத்திய அரசு எச்சரிக்கை !!
இன்றைய முக்கியச் செய்திகள்
மார்ச் 13
உலகச் செய்திகள்
எத்தியோப்பிய விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பை நடத்த உள்ளது.
மாநிலச் செய்திகள்
மக்களவைத் தேர்தல் எதிரொலியாக, அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
ட்விட்டரில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள், மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதன் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா கட்சி 40 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்துவரும் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாவட்டச் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 90 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது. வருகிற 17ஆம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்கள+ரு எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.
இலங்கை தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.
No comments:
Post a Comment