Tuesday, March 12, 2019

###TNPSCஅரசு ஊழியர்களுக்கு உச்சவரம்பு பரிசுத்தொகை எவ்வளவு

அரசு ஊழியர்களுக்கு உச்சவரம்பு பரிசுத்தொகை எவ்வளவு!!


இன்றைய முக்கியச் செய்திகள்
மார்ச் 12
உலகச் செய்திகள்


கிரீஸ் நாட்டில் பாரம்பரியமிக்க மாவுச்சண்டை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நவீனப்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. 

மாநிலச் செய்திகள்

தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 7,316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தேர்தல் காரணமாக தணிக்கை கணக்காளர் என்ற சி.ஏ., தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, மே, 27 முதல், ஜூன், 12 வரை, சி.ஏ., தேர்வு நடக்கும் என, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மராட்டியத்தில், நாடாளுமன்ற தேர்தலில் வேலையில்லா பட்டதாரிகள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர்.

5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் மிகவும் பழைமையும், பாரம்பரியமும் வாய்ந்த திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 
மாவட்டச் செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

விளையாட்டுச் செய்திகள் 

5வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களுரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹhலெப் கடும் பேராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார்.

தோள்பட்டை காயத்தால் கேன் வில்லியம்சன் அவதிப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில், இது நியூஸிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment