Tuesday, March 5, 2019

நித்ரா  TNPSC Tamil இலவச அப்ளிகேசன் வழியாக பகிரப்பட்டது. இலவசமாக தரவிறக்கம் செய்ய  https://goo.gl/YhTxwB லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இன்று முதல் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம்...!!
வுNPளுஊ தேர்வுக்கு, திறனாய்வுப் பகுதியில் முழு மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை காண 👇👇
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்றைய முக்கிய செய்திகள்
மார்ச் 04
உலகச் செய்திகள்
உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
மாநிலச் செய்திகள்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கோவையில் இன்று நடைபெறும் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்று காலை சு+லு}ர் விமானப்படை தளத்தில் நடைபெறும் கலர் பிரசண்டேசன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் இன்று மாலை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலுள்ள அங்கு நடைபெறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான, மத்திய அரசின் அவசர சட்டத்திற்க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில், ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளா மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவடைகிறது.

பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் ஒரே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். போக்குவரத்துத் துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்த முடியும்.

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டச் செய்திகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிவாலய ஓட்டத்தின் போது காவி உடையணிந்த பக்தர்கள், கைகளில் விசிறிகளை ஏந்தியவாறு, திருமலைக்கோவிலில் தொடங்கி திருநட்டாலம் வரையுள்ள 12 சிவாலயங்களை தரிசிக்கின்றனர்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்காத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் பரதக் கலைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
விளையாட்டுச் செய்திகள்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டு பிளசிஸ், டி காக் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

சதமடித்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச பேட்ஸ்மேன்கள் சவுமியா சர்கார், மெஹ்முதுல்லா போராடியும், நியு+ஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று மோத உள்ளன.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment