Sunday, December 16, 2018

முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018 நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு முதலிடம்..!! முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

முக்கிய நடப்பு நிகழ்வுகள் -  2018
நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு முதலிடம்..!! 
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



💥 உலக சாதனை முயற்சியாக விருதுநகரில், தவில் வித்வான் எம்.ராமசாமி (வயது 58) தொடர்ந்து 7 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனை படைத்தார்.

💥 ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், மாவா கோஹ்லான் என்ற கிராமத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து வீடுகளின் நுழைவாயிலில், பெண்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளன.

💥 ஆஸ்திரேலியாவிலேயே முதன் முறையாக மெல்பர்னில் அனேலியா மைபர்க் எனும் பெண்ணுக்கு, 3டி எனும் முப்பரிமாண முறையில் தாடை உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

💥 தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.

💥 இந்தியாஸ்பெண்ட் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள், நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக இருப்பதாக ஆய்வில் கூறுகிறது.


💥 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 - ஆம் ஆண்டுக்கான, அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலில், நடிகை தீபிகா படுகோன் சென்ற ஆண்டு 11ம் இடத்தில் இருந்தவர், இந்த ஆண்டு ஏழு இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இதில் தொடர்ந்து முதலிடத்தில் சல்மான் கான் உள்ளார்.

💥 கென்யாவைச் சேர்ந்த யாசின் நு}ரானி மற்றும் சிலியைச் சேர்ந்த நிக்கோலஸ் ஒரிலானா ஆகியோர் 2018 ஆம் ஆண்டின் சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருதை வென்றுள்ளார்.

💥 தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

💥 'கஜா" புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப்பிரிவுக்கு, 'கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல்" என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இயக்குநராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

💥 மியான்மரில் வாழும் ரோஹிங்கிய சிறுபான்மையினரின் மீதான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதில் தோல்லியடைந்ததால், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாதைக்குரிய தலைவர் ஆங் சான் சு+கீயிடமிருந்து பாரிஸ் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment