Friday, March 29, 2019

8,826 Police காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு 31% யாருக்கு.! வகுப்புவாரி இடஒதுக்கீடு முழு விவரங்கள்

 Police ல் உள்ள  8826 காலிப்பணியிடங்களில், இடஒதுக்கீடு 31% யாருக்கு.! 
வகுப்புவாரி இடஒதுக்கீடு முழு விவரங்கள்! 

விண்ணப்பித்திடுங்கள்!! 
Constable  வகுப்புவாரி இடஒதுக்கீடு முக்கிய விவரங்கள்:
வகுப்புவாரி இடஒதுக்கீடு:


💥 தற்போது நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் அரசாணைகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.

💥 பொதுப்பிரிவினர்களுக்கு 31% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

💥பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 26.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

💥 பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு (இஸ்லாமியர்) 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

💥 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

💥 ஆதிதிராவிட வகுப்பினர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

💥 ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

💥 பழங்குடியின வகுப்பினர்களுக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

💥 தமிழ்நாட்டைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் வகுப்புவாரி ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படுவார்கள்.

💥 ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கான 3% இடங்கள் முன்னுரிமையில் நிரப்பப்பட்ட பின்னர், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் மிகுதியாக இருந்தால் அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான ஒதுக்கீட்டின் கீழும் தெரிவு செய்யப்படுவார்கள். 

💥 ஆதிதிராவிடர் (அருந்ததியர்) இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அப்பதவியிடங்கள் ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினரில்லாத பிற ஆதிதிராவிடர் வகுப்பினரைச் சார்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

பா வா வின் பெருங்கதையாடல் |கதை கேட்க வாங்க


பா வா வின் பெருங்கதையாடல் |கதை கேட்க வாங்க
 



TNUSRB|போலிஸ்|Police Exam 2019 : நந்தமரபின் கடைசி அரசர் யார்? - 2019 பொது அறிவு வினா விடைகள்

TNUSRB|போலிஸ்|Police Exam 2019 :  நந்தமரபின் கடைசி அரசர் யார்? - 2019


பொது அறிவு வினா விடைகள்!


1. புத்தரின் சமயக் கருத்துக்கள் ---------------- என அழைக்கப்பட்டது? - திரிபீடகம்

2. புத்தர் போதித்த மொழி எது? - போலி

3. பிம்பிசாரரின் முதல் தலைநகரம் எது? - சிராவஸ்தி

4. முதல் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - ராஜகிருகம் கி.மு.487

5. இரண்டாம் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - வைசாலி கி.மு 387

6. சிசுநாக வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? - சிசுநாகர்!!!

7. நந்தமரபைத் தோற்றுவித்தவர் யார்? - மகாபத்மநந்தர்

8. சிசுநாகரும், மகாபத்மநந்தரும் ------------ ஆவார்கள். - சூத்திரர்கள்

9. நந்தமரபின் கடைசி அரசர் யார்? - தனநந்தன்

10. தனநந்தனின் அமைச்சர் யார்? - சாணக்கியர்

11. அலெக்ஸாண்டர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? - கி.மு.326

12. அலெக்ஸாண்டரிடம் அடிபணிந்தவர் யார்? - தட்சஷீலம் மன்னன் அம்பி

13. அலெக்ஸாண்டரை எதிர்த்த முதல் இந்திய மன்னர் யார்? - போரஸ் என்ற புருஷோத்தமன்

14. அலெக்ஸாண்டரின் படைத்தளபதி யார்? - செலுக்கஸ்நிகோடர்

15. சாணக்கியர், மெகஸ்தனிஸ் எழுதிய நூல்கள் யாவை? - அர்த்தசாஸ்திரம், இண்டிகா 



Tuesday, March 26, 2019

இரவில் அதிகம் கண் விழிப்பவரா நீங்கள்? உங்களை நெருங்கும் ஆபத்து

இரவில் அதிகம் கண் விழிப்பவரா நீங்கள்? உங்களை நெருங்கும் ஆபத்து 


மணப்பாகு என்றால் என்னவென்று கேள்விப்பட்டதுண்டா?

👉இன்று மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் 'சிரப்" தான் அன்றைய தமிழர்களின் மணப்பாகு. வேர், பழம் முதலியவற்றின் சாறினை சரியான முறையில் எடுத்து உடல்நலனுக்காக தொடர்ந்து பயன்படுத்தும் முறையே மணப்பாகு எனப்பட்டது.

👉எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் பிரபலமான 'நன்னாரி வேர் சிரப்பினை" சொல்லலாம். நன்னாரி வேரின் சாற்றில் செய்யப்படுவதால் இதனை நன்னாரி மணப்பாகு என்றும் அழைக்கலாம். ஆனால், இன்று கடைகளில் பல வண்ணங்களில் கிடைக்கும் நன்னாரி சிரப் ஒரிஜினல் நன்னாரி வேர் சிரப் அல்ல.


.

நன்னாரி வேரின் சிறப்புகள் :

👉இந்த நன்னாரி வேர் சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கக்கூடியது. பொதுவாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடல் சோர்வு, சிறுநீரகப் பிரச்சனை போன்ற அனைத்து சிக்கல்களும் வரவே வராது. நியு+ஸ் 7 தொலைக்காட்சியில் உணவே அமிர்தம் நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் திரு.அருண் அவர்கள், 'காலையும், மாலையும் 10 மில்லி நன்னாரி வேர் சிரப்புடன் எலுமிச்சை சாற்றை கலந்தோ அல்லது தண்ணீர் மட்டும் கலந்தோ ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். குறிப்பாக ரத்தம் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டு நல்ல எனர்ஜி தரும். கூடவே, சிறுநீரகம் சம்மந்தமான எந்த சிக்கலும் வரவே வராது" என்று குறிப்பிட்டுள்ளார்.

👆👆👆
👉குறிப்பாக இன்றைய காலக்கட்டங்களில் நாம் இரவில் அதிகம் விழித்து இருக்கிறோம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான். எனவே, அனைவரும் இந்த நன்னாரி வேர் ஜூஸினை தினசரி எடுத்துக் கொள்வது நல்லது.

நன்றாக இருக்குமா?

👉அருமையான மணமும், சுவையும் நிறைந்தது இந்த நன்னாரி சிரப். எலுமிச்சை சாற்றை கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும்.

ஒரிஜினல் நன்னாரி சர்பத்தை எப்படி கண்டுபிடிப்பது?

👉பொதுவாக இன்று நன்னாரி வேரில் ஒரிஜினலாக செய்த சிரப் கிடைப்பதில்லை. எசென்ஸ் மூலம் செய்த நன்னாரி பானங்கள் தான் நிறைய இருக்கிறது. இதனைக் கண்டறிய ஒரு எளிய வழி இருக்கிறது. வெதுவெதுப்பான பாலில் எசென்ஸ் கலந்த நன்னாரி சிரப்பினை ஊற்றினால் பால் திரிந்து விடும். ஆனால், ஒரிஜினல் வேரில் செய்த சிரப்பினை ஊற்றினால் பால் திரியாது. இதனை எளிமையாக நமது வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

ஒரிஜினல் நன்னாரி சிரப் எங்கு கிடைக்கும்?

👉நமது பாரம்பரிய உணவு முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் நம்ம ஊர் பண்டங்களை உலகம் முழுவதும் டெலிவரி செய்யும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஒரிஜினல் நன்னாரி வேரில் செய்த சிரப் கிடைக்கிறது. 

👉ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. மிகுந்த சிரமங்களுக்கு பிறகு மிகவும் தரமான நன்னாரி வேர் சிரப்பினை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியினை துவங்கி இருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம்.


எசென்ஸ் இல்லாத ஒரிஜினல் நன்னாரி சிரப்பினை வாங்க 👈👈...

Police Exam 2019 : பொதுத்தமிழ் | பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் எது? - 2019 | 10ஆம் வகுப்பு | பொதுத்தமிழ்

Police Exam 2019 : பொதுத்தமிழ் - பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் எது? - 2019
10ஆம் வகுப்பு - 

பொதுத்தமிழ்


1. நுண்ணிய நூல் பல கற்றவர்கே அமைந்த அரிய கலை ------- - பேச்சுக்கலை.

2. தமிழ்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்? ------- திரு.வி.க.

3. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இயற்றப்பட்ட நு}ல் ------- தேவாரம்.

4. உலகம் என்னும் தமிழ்ச்சொல் --------- என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. - உலவு.

5. காந்தியடிகள் ------------ நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார். - அரிச்சந்திரன்.

6. பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் ------ பைபிள்.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?!!!
7. அறநெறியாக போற்றப்பட வேண்டியவை ---------- எளிமை, சிக்கனம்.

8. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ------------- பெரியபுராணம்.

9. வள்ளலாரின் இயற்பெயர் --------- இராமலிங்கர்.

10. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி ----------- வகுப்பு - 12-ஆம் வகுப்பு.

11. 'விரல்கள் பத்தும் மூலதனம்" எனும் பாடலின் ஆசிரியர் ------------ தாராபாரதி.

12. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ---------------- திருவாதவூர்.

13. மாணிக்கவாசகர் பாடல்கள் ------------ திருமுறையில் இடம் பெற்றுள்ளது. - எட்டாம்.

14. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் ------------------ உள்ளது. - திருப்பெருந்துறையில்.

15. மாணிக்கவாசகர் ------------------- மன்னனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார; - அரிமர்த்தனப் பாண்டியன்.

Monday, March 25, 2019

கோடை வெய்யிலில் ஒரு சேதி

கோடை வெய்யிலில் ஒரு சேதி



வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள். கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது.

Sunday, March 24, 2019

TNPSC Police Exam 2019: பொதுஅறிவு வினா விடைகள்  - 2019
பொருளாதாரம் - பொது அறிவு வினா விடைகள் 


1. மனிதன் கண்ட முதல் தொழில் என்ன? - பயிர்த்தொழில்

2. தானியங்களை உற்பத்தி செய்வது எந்த தொழிலைச் சார்ந்தது? - வேளாண்மைத் தொழில்

3. உடல் வளர்ச்சிக்குத் தேவையானது என்ன? - உணவு

4. அறிவு வளர்ச்சிக்குத் தேவையானது என்ன? - கல்வி

5. தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் எது? - தனிநபர் வருமானம்

6. அனைவரும் அவரவருக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ---------- எனப்படும் - பகிர்வு

7. பொருளாதாரத்தின் அடிப்படைகள் யாவை? - உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு

8. வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் எது? - சந்தை

9. மக்கள் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்வது எது? - நுகர்ச்சி

10. பொருட்களை வாங்கி விற்க்கும் இடம் எது? - வணிகம்

11. நாட்டு மக்கள் அனைவரும் ஈட்டுவது எது? - நாட்டு வருவாய்

12. பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது விலை -----------------. - அதிகரிக்கிறது

13. தேவை, உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு அதிகரிப்பது ---------- ஆகும் - பொருளாதார வளர்ச்சி

14. மத்திய, மாநில அரசுகளின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிக்க அவசியம் ---------- ஆகும் - பொருளாதார அறிவு

15. எல்லா துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்ன? - பொருளாதார அறிவு

மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நூல்கள் யாவை - 2019 10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்

மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நூல்கள் யாவை - 2019

10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்


1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் ----------- திருவள்ளுவமாலை

2. திருக்குறள் --------- வெண்பாக்களால் ஆன நூல் - குறள்

3. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர். - பாரதிதாசன்

4. ஏலாதி ------ நூல்களுள் ஒன்று. - பதினெண்கீழ்கணக்கு

5. கணிமேதாவியாரின் காலம் -------- கி.பி. - 5 -ஆம் நு}ற்றாண்டு

6. மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நு}ல்கள் ------------ திரிகடுகம், ஏலாதி

7. இளங்கோவடிகள் ------- நாட்டைச் சேர்ந்தவர். - சேர

8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர் யார்? - பாரதியார்

9. குடும்ப விளக்கு -------- படைத்த குறுங்காவியங்களுள் ஒன்று. - பாரதிதாசன்

10. பாரதிதாசனார் ------------ என அழைக்கப்படுகிறார். - புரட்சிக்கவிஞர்

11. கம்பராமாயணம் ------ காண்டங்களை கொண்ட நு}ல். - ஆறு

12. சரசுவதி அந்தாதி ------- இயற்றிய நு}ல்களுள் ஒன்று . - கம்பர்

13. கம்பரை ஆதரித்தவர் -------- சடையப்பவள்ளல்

14. நல் என்னும் அடைமொழி பெற்ற நு}ல் --------- நற்றிணை

15. நற்றிணையை தொகுப்பித்தவர்------- பன்னாடு தந்த மாறன் வழுதி

Police Exam 2019 : ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி உள்ள இடம் எது? - 2019 அறிவியல் வினா விடைகள்

Police Exam 2019 : ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி உள்ள இடம் எது? - 2019


அறிவியல் வினா விடைகள்

1. மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்பம் கடத்தப்படுவது --------- எனப்படும். - வெப்பக்கடத்தல்.

2. மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் கடத்தப்படுவது ---------- எனப்படும். - வெப்பச்சலனம்.

3. எந்தவித ஊடகமும் இன்றி வெப்பம் கடத்தப்பட்டால் அது ----------- எனப்படும். - வெப்பக் கதிர்வீச்சு

4. வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜீல்/கெல்வின்

5. தன்வெப்ப ஏற்புத்திறனின் அலகு என்ன? - ஜீல்/கி.கி/கெல்வின்

6. பனிகட்டியின் உருகுநிலை என்ன? - 0°c

7. வெப்பநிலை மானிகளில் பயன்படும் திரவம் எது? - பாதரசம்

8. குளிர் பிரதேசங்களில் வெப்பநிலை மானிகளில் பயன்படும் திரவம் எது? - ஆல்கஹhல்

9. பாயில் விதியை கூறியவர் யார்? - இராபர்ட் பாயில்

10 சார்லஸ் விதியின் வேறுபெயர் என்ன? - கன அளவு விதி

11. மலைப்பிரதேசங்களில் வளிமண்டல அழுத்தம் எவ்வாறு இருக்கும்? - குறைவு

12. ஒளி ---------- பாதையில் செல்லும் - நேர்கோட்டு

13. ஒளி --------- அலைகளாக செல்லும் - குறுக்கலைகளாக

14. ஒளி பரவ ---------- தேவை இல்லை. - ஊடகம்

15. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி உள்ள இடம் எது? - காவனூர்.

Saturday, March 23, 2019

REAL Neurological screening Test

REAL Neurological screening Test




From Dr Justin Jones in Melbourne:

 This is a REAL Neurological screening Test

Sit comfortably and feel calm.You should be able to complete all 3 tests within 30 seconds or even less.

1. Find the letter C from below. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO 

2. If you have already found the letter C, now find the digit 6 from below. 999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999969999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999 

3. Now find the letter N from below. It's a little more difficult. MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM 

If you are able to pass this 3 tests, you can cancel your annual visit to your neurologist. Your brain is great and you're far from having AlzheimerDisease. Congratulations !!! If you need to relook, that may be an early sign of an aging brain....... And its not a joke. . . . . . There is C, 6, and N in those crowdy lines. Keep healthy and a wishing you all a bright day ahead...🌝🌝🌝 Please take this test. You'll be  surprised how many won't be able to find it even after multiple attempts
Keep Sharing

Friday, March 22, 2019

###கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?|Backpain

கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?


எனக்கு அப்படி உட்கார்ந்து பழக்கமே இல்லை. இன்று கஷ்டப்பட்டு செல்போனில் டைமரை வைத்து எத்தனை நிமிடம் உட்கார முடிகிறது என பார்த்தேன். 15 நிமிடம் உட்கார முடிந்தது. இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் உயரத்தில் இருந்தன. கஷ்டபட்டு முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார்ந்தேன், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாது. முதுகு நேராக தான் இருக்கும்.

இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு.

நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து தான் உண்போம், உட்கார்வோம். வீட்டுக்கு யாராவது வந்தால் "ஜமுக்காளத்தை விரி, பாயை விரி" என தான் முன்பு சொல்வார்கள். இப்ப தான் சேர், சோபா.

நாற்காலி, சோபாவில் அமர்வதன் தீமைகள்

இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது.

இப்படி ஸ்பெஷல் நாற்காலி எல்லாம் வாங்கி முதுகுவலி குணமாகுமா என பார்ப்பது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். அதனால் வலி வரும் விகிதம் குறையுமே ஒழிய வலி வருவது நிற்கப்போவது கிடையாது.

ஜெரென்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழவைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு. ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு, இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணீக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.

கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழகாசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.

இம்மாதிரி கிழே உட்காருவது நாகரிககுறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம். சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்துபோன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில்தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகிவிடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரிக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.

ஓஸ்டியோபெரோஒசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத்தன்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.

அதனால் இதுநாள்வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் தசைகளை பிளெக்சிபிள் ஆக்கி போஸ்ச்ரசை சரி செய்யும்.

ஒரு நாள் உட்கார்ந்து எழுந்ததுக்கே முதுகை நன்றாக மஸாஜ் செய்தது போல இருக்கு. இந்த பதிவை தட்டச்ச நாற்காலியில் உட்கார்ந்தபின் நல்ல வித்தியாசம் தெரிகிறது.

சுகாசனம் செய்வோம்..சுகமாக இருப்போம். முயலுங்கள்...சோபா, சேர்களை தூக்கி கடாசுங்கள். Forwarded by யோகா
தம்பி ரமேஷ். www.adyaryoga.com

Thursday, March 21, 2019

###TNPSC_GENERAL_TAMIL|தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? - 2019 8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்

###TNPSC_GENERAL_TAMIL|தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? - 2019
8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் 

பொதுத்தமிழ்


1. தாழ்ச்சி என்பதன் எதிர;ச்சொல் ................. உயர்ச்சி.

2. அடிமையலன் - அச்சொல்லைப் பிரிக்கும் முறை ............... அடிமை + அலன்.

3. "மன்னிப்பு" - இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் யாது? - பொறுத்துக்கொள்க.

4. பாவாணர் எழுதிய நூல்களுள் இரண்டனைக் குறிப்பிடுக. - தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம்.

5. தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? - கால்டுவெல்.

6. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்? - தேவநேயப் பாவாணர்.

 7. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர; ---------------- குமரகுருபரர்.

8. இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சிற்றிலக்கிய வகை -------------- பிள்ளைத்தமிழ்.

9. குமரகுருபரர் வாழ்ந்த காலம் - பதினேழாம் நூற்றாண்டு.

10. பிள்ளைத்தமிழிலுள்ள பருவங்களின் எண்ணிக்கை ------------ பத்து.

11. பிள்ளைத்தமிழ் -------------- வகைப்படும். - 96.

12. இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது -------------- - நகைச்சுவை.

13. குமரகுருபரர் பிறந்த ஊர் எது? - திருவைகுண்டம்.

14. குமரகுருபரர் பெற்றோர்பெயர் என்ன ? - சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமி சுந்தரியம்மை.

15. ஐந்து வயது வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசியமையால் அவர் மீது பாடிய பாடல் எது? - கந்தர் கலிவெண்பா.

###Police Exam 2019 : பொதுத்தழிழ் - முக்கிய வினா விடைகள் - 2019 பொதுத் தமிழ் வினா விடைகள்

###Police Exam 2019 : பொதுத்தழிழ் - முக்கிய வினா விடைகள் - 2019
பொதுத் தமிழ் வினா விடைகள்

##TN POLICE

1. பாரதியாரின் இயற்பெயர் என்ன? - சி.சுப்பிரமணியம் (எ) சுப்பையா

2 பாரதியாரின் பெற்றோர் பெயர் என்ன? - சின்னசாமி ஐயர்,இலக்குமி அம்மாள்

3. பாரதியார் பிறந்த ஊர் எது? - எட்டயபுரம்(தூத்துக்குடி மாவட்டம்)

4. பாரதி என்பதற்கு -------- என்று பொருள். - கலைமகள்(சரசுவதி)

5. அறிவில் சிறந்த இல்லறத்தார்க்கு கொடுக்கும் பட்டம் எது? - பாரதி பட்டம்

6. ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்கு கொடுக்கும் பட்டம் எது? - சரசுவதி பட்டம்.

தேர்வில் வெற்றி பெற வேண்டுமா ?

பாரதியார் எந்த ஆண்டு எட்டயபுரத்து அரசவைக் கவிஞர் ஆனார்? - கி.பி.1902

8. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளி எது? - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி.

9. பாரதியார் எந்த ஆண்டு "சக்கர வர்த்தினி" என்ற இதழைத் தொடங்கினார். - கி.பி.1905.

10. பாரதியார் எந்த ஆண்டு "இந்தியா" என்ற நாளேட்டினைத் தொடங்கினார். - கி.பி.1907.

11. ஜென்மபூமி என்ற தலைப்பில் 2வது கவிதை தொகுப்பு எந்த ஆண்டு வெளியானது. - கி.பி.1910.

12. பாரதியாரின் சிறப்பு பெயர்கள் : தேசியக்கவி, மகாகவி, விடுதலைக்கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி,பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் - கவிமணி, தமிழ்நாட்டின் கலில்கிப்ரான், தமிழ்நாட்டின் வால்ட் விட்மென்.

13. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியவர் யார்? - பாரதியார்.

14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்

15. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்று கூறியவர் யார்?கி.ஆ.பெ.விஸ்வநாதம்

மேலும் இதுபோன்று, காவலர் தேர்விற்கான முக்கிய வினா விடைகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
Click_Here

###TNSURB|##POLICE|GENERAL_KNOWLEDGE|பொது அறிவு-2019

Police Exam 2019 : பொது அறிவு - முக்கிய வினா விடைகள்!!!

###TNSURB|##POLICE|GENERAL_KNOWLEDGE|பொது அறிவு-2019


வினா விடைகள்!


1. ஒவ்வொரு நாளும் தன் வடிவத்தில் மாறுகின்ற விண்மீன் எது? - சந்திரன்.

2. சிறு பிறைவடிவிலிருந்து வளர்ந்து முழு உருவம் அடையும் விண்மீன் - சந்திரன்.

3. சந்திரன் முழுவதுமாக தேய்ந்து விடும் நாள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? - அமாவாசை.

4. சீராக ஒளிர்ந்து காட்சி தருவது --------- எனப்படும் - கோள்கள்.

5. எதன் பின்னணியில் கோள்களின் நிலை மாறி மாறி அமையும்? - விண்மீன்கள்.

6. தொலைநோக்கி உதவி இல்லாமல் வெறும் கண்ணால் பார்க்க கூடிய கோள்கள் எது? - புதன் ,வெள்ளி, செவ்வாய், வியாழன் , சனி...


காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் 7. தொலைநோக்கியால் மட்டுமே காணக்கூடிய கோள்கள் யாவை? - யுரேனஸ், நெப்டியு+ன்,.

8. சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் மறைந்த பின்பும் புலப்படும் கோள்கள் யாவை? - புதன், வெள்ளி.

9. தொடுவானம் அருகே மட்டும் புலப்படும் கோள் எது? - வெள்ளிக்கோள்.

10. வெள்ளிக்கோள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? - விடிவெள்ளி.

11. இரவு நேரத்தில், வானில் கிழக்கிலும் மேற்கிலும் தலைக்கு மேலாக காணப்படும் கோள்கள் எவை? - செவ்வாய், வியாழன், சனி.

12. எத்தனை கோள்களை நாம் கண்களால் காண முடியும்? - ஐந்து.

13. தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் கோள் எது? - பூமி.

14. பூமி எந்த திசையிலிருந்து எந்த திசையை நோக்கி சுழல்கிறது? - மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி.

15. சந்திரன் எந்த கோளை சுற்றி வருகிறது? - பூமி.

மேலும் இதுபோன்று, காவலர் தேர்விற்கான முக்கிய வினா விடைகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் Click_here



Tuesday, March 19, 2019

###TNPSC_GENERAL|TAMIL|Book Back Questions: உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் யார்? 2019 8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் பொதுத்தமிழ்

###TNPSC_GENERAL|TAMIL|Book Back Questions: உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் யார்?
2019

8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்


1. திருவருட்பாவை இயற்றியவர் ------------ இராமலிங்க அடிகளார்

2. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை -------- 5818

3. தாமே ஒளிவிடக் கூடியவை -------------- எனப்பட்டன - நாள்மீன்

4. இராமலிங்க அடிகளார் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் ------ல் பிறந்தார். - 1823

5. பிரித்து எழுதுக :

🍀 கண்டபோதெல்லாம் - கண்டபோது + எல்லாம்

🍀 பசியறாது - பசி + அறாது

🍀 வீடுதோறிரந்தும் - வீடுதோறும் + இரந்தும்

🍀 கண்டுளம் - கண்டு + உளம்

6. இராமலிங்க அடிகளார் பெற்றோர் பெயர் - இராமையா - சின்னம்மை

7. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப்பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்

8. திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் நு}ல்களை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார்

9. தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ---------------- வானியல்

10. உலகம் ----------- ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது - ஐம்பு+தங்களால்

11. ′உலகம் உருண்டை வடிவமானது′ எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் ----- திருவள்ளுவர்

12. பொருள் எழுதுக :-

🍀 மாய்வது - அழிவது

🍀 நயமில - தீங்கு

🍀 மண்புக்கு - மண்ணிற்குள் புதைந்து

🍀 ஞாலம் - உலகம்

🍀 அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி

🍀 கலம் - பாத்திரம்



 அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!

வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு

வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு



அமைப்பு பெயர்: V.O.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்
வேலை வகை: மத்திய அரசு பயிற்சி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 72
வேலை இடம்: தூத்துக்குடி
பணியிடங்கள் :  Supervisor (Hospitality)
கல்வித்தகுதி : ITI, Diploma, B.E/B.Tech
சம்பளம் : 

SI NoName of PostStipend
1.Technician Apprentice (Mechanical)Rs.3542/-
2.Technician Apprentice (Electrical)Rs.3542/-
3.Graduate Apprentice (Mechanical)Rs.4984/-
4.Graduate Apprentice (Electrical)Rs.4984/-
5.ElectricianRs.7350 /-
6.Mechanic (Diesel)For 1st year Rs.6700 /-
For 2nd year Rs.7550/-
7.Mechanic (Motor Vehicle)Rs 7350/-
8.PASSARs 7350/-
9.Draughtsman (Mechanical)Rs 7350/-
10.FitterRs 7350/-
11.WelderRs.6500/-

Vgggg
தேர்வுமுறை : ்Merit List ,நேர்முகத்தேர்வு  
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் :15.04.2019
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு :

VOC Port Trust Official Website Career PageClick Here

Saturday, March 16, 2019

###TNPSC _GENERAL_TAMIL|Book Back Questions: அக்டோபர் திங்கள் நான்காம் நாள் கொண்டாடப்படும் நாள் எது?- 2019| 8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் | பொதுத்தமிழ்

###TNPSC _GENERAL_TAMIL|Book Back Questions: அக்டோபர் திங்கள் நான்காம் நாள் கொண்டாடப்படும் நாள் எது?- 2019|
8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் |
பொதுத்தமிழ்


1. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் ----------- ஆண்டில் இயற்றப்பட்டது - 1972 - ஆம்

2. ஐம்பு+தங்கள் யாவை? நிலம், நீர், தீ, காற்று, வானம்.

3. அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடப்படும் வாரம் எது? - அக்டோபர் முதல் வாரம்

4. மழை பெய்வதற்குக் --------- காரணமாய் உள்ளன. - காடுகள்.

5. அக்டோபர் திங்கள் நான்காம் நாள் கொண்டாடப்படும் நாள் எது? - உலக வனவிலங்கு நாள்

6. நமது நாட்டில் எத்தனை வனவிலங்குப் பாதுகாப்பு இடங்கள்; உள்ளன? - பதினேழு

7. எத்தனை தேசிய வனவிலங்குப் பு+ங்காக்களும் உள்ளன? - அறுபத்தாறு

8. நமது நாட்டில் எத்தனை புகலிடங்களும் உள்ளன? - முந்நு}ற்று அறுபத்தெட்டு

9. அரிதான பழம்பொருள்களைத் தொகுத்து வைத்துள்ள இடம் ----------- ஆகும். - அருங்காட்சியகம்

10. சென்னை எழும்பு+ரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? - கி.பி.1851

11. இரண்டாம் வேற்றுமை உருபு -------------- எனவும் அழைக்கப்பெறும். - செயப்படுபொருள் வேற்றுமை

12. கருவி, கருத்தா ஆகிய பொருள்களில் ------------- உருபு வரும். - ஆல், ஆன்

13. ஐந்தாம் வேற்றுமையில் வரும் 'இல்" உருபு --------------- பொருளில் வரும். - ஏதுப்

14. எட்டாம் வேற்றுமை --------------- பொருளில் வரும். - விளிப்

15. வாலிக்குப் பகைவன் சுக்ரீவன் இத்தொடரில் உள்ள 'கு" உருபு -------- என்னும் பொருளில் வந்துள்ளது. - பகை

Friday, March 15, 2019

###TET&POST OFFICE|இன்று முதல் ஆரம்பம்! - 5,500+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்திடுங்கள் !!! இன்று முதல் ஆரம்பம்

###TET&POST OFFICE|இன்று முதல் ஆரம்பம்! -  5,500+ காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்திடுங்கள் !!!
இன்று முதல் ஆரம்பம்!


ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் POST OFFICE பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

TET தேர்வு

கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ், இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியம் என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு முக்கியத்துவம் மிகுந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் முதல்கட்டமாக, 814 கணினி ஆசிரியர் பணிகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்தவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

TET தேர்வுக்கு இன்று(மார்ச் 15) இரவு 11 மணி முதல் ஏப்ரல் 05 வரை விண்ணப்பிக்கலாம்.

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்


தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிள் கிளையின் கீழ் போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் என மொத்தம் 4,442 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post office தேர்வுக்கு இன்று(மார்ச் 15) முதல் ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

POST OFFICE தேர்வுக்கு விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக அறிந்து கொள்ளுங்கள். 

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!.

Www.kavimalaravan.blogspot.com

7 ஆண்டுகள் சிறை : மத்திய அரசு எச்சரிக்கை !! இன்றைய முக்கியச் செய்திகள் மார்ச் 13

7 ஆண்டுகள் சிறை : மத்திய அரசு எச்சரிக்கை !!
இன்றைய முக்கியச் செய்திகள்
மார்ச் 13


உலகச் செய்திகள்

எத்தியோப்பிய விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து வாக்கெடுப்பை நடத்த உள்ளது.
மாநிலச் செய்திகள்
மக்களவைத் தேர்தல் எதிரொலியாக, அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

ட்விட்டரில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள், மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதன் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா கட்சி 40 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்துவரும் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாவட்டச் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 90 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது. வருகிற 17ஆம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்கள+ரு எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.

இலங்கை தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.


Specific Absorption Rate (SAR) Value | கதிர்வீச்சின் அளவு

Specific Absorption Rate (SAR) Value | 
கதிர்வீச்சின் அளவு 
Type *#07# in dial pad
If SAR > 1.6 may affect our health


------------------------------------------------------------------

Specific Absorption Rate (SAR) Value என்றால் கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு ஆகும்.

கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சினால் பல வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். 

மனிதனின் தலைப்பகுதி மண்டை ஓட்டினால் ஆக்கப்பட்டிருப்பதால், SAR  Value தலைப்பகுதிக்கு குறைந்த பாதிப்பையும், மற்றைய உடலின் பாகங்களிற்கு அதிகமான பாதிப்பையும் ஏற்படுத்தும். 

இதனால் தலைப்பகுதிக்கு வேறாகவும், உடற்பகுதிக்கு வேறாகவும் SAR Value கணிக்கப்படுகின்றது. இந்த SAR  Value ஆனது ஐரோப்பிய நாடுகளுக்கு வேறாகவும அமெரிக்கா நாடுகளுக்கு கணிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக கொடுத்தல் கூடாது. ஏனென்றால் குழந்தைகளின் உடல் அமைப்பானது வயது வந்தவர்களைவிட மிகவும் மென்மையானது, அதனால் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும்.

கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளுக்கு ஈடானவர்கள். ஏனென்றால் அவர்களின் வயிற்றில் உள்ள சிசுவும் குழந்தைகளை விட மிகவும் மென்மையானது.

WiFi, Network இணைப்புகள் துண்டிக்கப்பட்ட Airplane Mode இல் உள்ள தொலைபேசிகள் கதிர்வீச்சினை வெளியிடாது. அதனால் Airplane mode இல் உள்ள தொலைபேசிகள் பாதிப்பற்றவை.  

குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக, கொடுக்கும் பொழுது தொலைபேசிகளை Airplane Mode இல் மாற்றுதல் அவசியமாகும். Airplane Mode இல் ஒன்லைன் Online வேலைகள் எதையும் செய்யமுடியாது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் -இன்று (11/3 திங்களன்று காலை சென்னை எழும்பூரில் நடந்த சம்பவம் :

தேஜஸ் எக்ஸ்பிரஸ் -இன்று (11/3 திங்களன்று காலை சென்னை எழும்பூரில் நடந்த சம்பவம் 


நானும் சில நண்பர்களும் வெளியூர் சென்று இன்று காலை எழும்பூரில் இறங்கிய போது, வேறொரு நண்பர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவரும் அவரது Teen age-பெண்ணும் காலை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் திருச்சிக்கு செல்ல வண்டி ஏறி விட்டார்கள்.
ஏறி, சீட்டில் அமர்ந்த பிறகு, தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டி Just -நேரெதிரே கடை இருந்ததால்( வண்டி கிளம்ப 7 -நிமிடங்கள் இருந்ததாம்) அவர் மட்டும் வண்டியை விட்டு இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கும்போது, அந்த தேஜஸ் வண்டியின் எல்லா கதவுகளும் Automatic-ஆக மூடி Lock -ஆகி விட்டது. பதற்றத்தில் அந்த பிளாட்பாமில் உள்ளவர்கள் சிலர் TTE, மற்றும் Guard-ல் சொல்ல ஓட, வண்டிக்குள் கண்ணாடி ஜன்னலுக்குள் இருந்த அவரது பெண் கத்த, கூட இருந்தவர்களுக்கும் அது எதிர்பாராததொன்றாய் இருந்ததால் கதவுகள் திறக்க எல்லோரும் உதவக்கூடிய மனநிலையில் இருந்தாலும், அந்த Technology மற்றும் பயிற்சி இல்லாததாலும் , தெளிவு மக்களுக்குத் தெரியாததாலும், கிளம்பிய வண்டி சற்று வேகம் குறைந்ததைப்போல இருந்தாலும், சில நொடிகளிலேயே ஒன்றுமே நடக்காதது போல வேகமெடுத்து வண்டி போயே போய் விட்டது - அந்தப் பெண்ணின் தகப்பனை Platform-ல் விட்டு விட்டு !

அதன் பின், அவர் அந்த பெண்ணிடம் Mobile Phone -ல் மூலம் பேசி, பின்னர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடனும் பேசி, தன் பெண்ணைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு, பின்னர் இவர் அடுத்த Train-ல், குருவாயூர் எக்ஸ்பிரஸில் செல்ல இருக்கிறார்.

மேற்கொண்ட இந்த சம்பவத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் -

1) தேஜஸ் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு 5 -நிமிடங்கள் முன்பு அதன் எல்லா கதவுகளும் Automatic -ஆக மூடிக்கொள்ளும்.

2) அந்த Train-ல் டிக்கட் வாங்கும்போதே, டிக்கட்டில் வண்டி கிளம்ப 5- நிமிடங்களுக்கு முன்பாக கண்டிப்பாக இருக்கையில் அமர வேண்டும் என்று Instruction சொல்லப்பட்டிருக்கிறதாம்.

3) இந்த மாதிரி Critical -ஆன நேரத்திலும் கதவு திறக்குமாம். ஆனால், உள்ளிருந்துதான் திறக்க முடியும்- அதுவும் ஒரு சில Railway staff மூலமாக -ஏனென்றால், அவர்களுக்குத்தான் அதன் Password தெரியுமாம்.

( ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ) நாம் இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய நேர்ந்தால், அந்த வண்டி கிளம்ப( 5 நிமிடங்கள் என்ன) 10 நிமிடங்கள் முன்பாகவே தேவையான எல்லாப் பொருள்களுடன் இருக்கையில் கண்டிப்பாக அமர்ந்து விட வேண்டும்.

Forwarded post..

Thursday, March 14, 2019

வல்லரசு வான்வெளியில் இல்லை, வயல்வெளிகளில் உள்ளது|சகாயம் IAS


வல்லரசு வான்வெளியில் இல்லை, வயல்வெளிகளில் உள்ளது|சகாயம் IAS


ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு

ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு 


அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.

காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.

‘காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.

பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.

காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.

‘பசித்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்கள். பசி வந்தால் நமக்கே எதுவும் புரியாது. அவ்வாறெனில் குழந்தைகளை கேட்கவேண்டுமா? மூளையின் செயல்பாடுகளுக்கு பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளோ வகுப்பில் தூங்கி வழிகின்றனர். குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால் அதற்கு காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.

குழந்தைகளுக்கு காலை உணவு சரியில்லை என்றால்…

வகுப்பில் தூங்கி வழிவார்கள்

படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள்

உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்

படிப்பது எதுவும் உள்ளத்தில் பதியாது

படிப்பு ஒரு சுமையாக மாறும்

படித்தவற்றை நினைவூட்டுவது கடினமாகும்.

ஆனால், குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த குழப்பமான மனோநிலையில் உள்ளனர். ஏன் குழந்தைகள் காலை உணவை சாப்பிடமால் பள்ளிக்கூடம் செல்கின்றார்கள்? பல காரணங்கள் உள்ளன.

பசியில்லை, பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் காலை உணவில் அக்கறை இல்லை, ஸ்கூல் வேன் வந்துவிடுமே என்ற பதட்டம், எப்பொழுதும் ஒரே காலை உணவு என்பதால் அதில் ஏற்படும் வெறுப்பு, ருசியின்மை, இரவில் தாமதமாகும் உணவு பழக்கம், பெற்றோரிடம் நேர மேலாண்மை இல்லாமை, சரியான திட்டமிடல் இன்மை, போதிய உறக்கம் இல்லாமை, அளவுக்கதிகமான பாட சுமை, பெற்றோரின் அவசரமான வாழ்க்கை முறை, அசிரத்தை என கூறலாம்.

மேலேக் கூறப்பட்ட ஏதேனும் ஒரு காரணமே உங்கள் குழந்தைகளின் காலை உணவு இழப்பதன் பின்னணியில் அடங்கியிருக்கும். காலையில் பசி அவ்வளவாக இருக்காது. இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு காலை முதல் பெல் அடித்தவுடன் பசி வயிற்றை கிள்ளத் துவங்கும். ஆனால் என்ன செய்ய? மதியம் வரை அடக்கிக் கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை. இத்தகையதொரு சூழலில் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா?
ஆகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை அளிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணரவேண்டும்.

யூனிஃபார்ம் உடுத்தி, ஷூவும், ஷாக்சும் அணிந்து, டை கட்டினால் எந்த குழந்தையும் டிப்-டாப்பாக மாறிவிடும். ஆனால், வெளி அலங்காரத்தில் காரியமில்லை. நல்ல ஆடை அணிவதில் இருக்கும் கவனத்தையும், ஆர்வத்தையும் சத்தான உணவை குழந்தைக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். அப்பொழுதே அக்குழந்தை சமர்த்தாக படிப்பில் கவனம் செலுத்தும்.

இவ்விஷயத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள்:

1.குழந்தைக்கு 7 மணிக்கே இரவு உணவை தயார் செய்து கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்கவேண்டும்.

2.இரவு 9 மணிக்கு குழந்தையை தூங்க அனுமதியுங்கள்.

3.காலை ஃபஜ்ர் வேளையில்(5 to 6) குழந்தையை எழச் செய்யுங்கள்.

4.காலையில் சற்று நேரம் ஏதேனும் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள்.

5.குழந்தை குளித்து முடித்து காலை உணவை முடிக்கும் வரை ஜோக்குகள், கதைகள், பாடல்கள் சொல்லலாம். இதனால் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

6.காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? என்பதை கவனியுங்கள்.

7.காலை உணவு குறித்து முந்தைய இரவே திட்டமிடுங்கள்.

8.வாரத்தில் 7 தினங்களும் 7 வகையான காலை உணவை தயாரியுங்கள்.

9.நேர மேலாண்மையை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

10.காலை எழுந்தவுடன் காலைக் கடன்கள், மார்க்க கடமைகள், ஆடை அணிவது, சாப்பிடுவது ஆகியவற்றிற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக மாறுவார்கள். அதேவேளையில் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். சொல்வதை விட நாம் செய்து காட்டும் பொழுதுதான் குழந்தைகள் அதில் இருந்து பாடம் படிப்பார்கள்.

காலை உணவு என்ன ஜோக்கா?

காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். ‘சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்’ என்று கூறுவதுண்டு.

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன் காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.

எல்லாம் அடங்கிய பால் ‘மில்க் ஈஸ் எ கம்ப்ளீட் ஃபுட்’ என பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தை பால் குடிப்பதற்கு தயங்கும். ஆகையால் முற்றிலும் பால் குடிக்காவிட்டால் வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்படும். நோய்களை உருவாக்கும். இதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

ஐஸ்க்ரீம் பிடிக்காத குழந்தைகள் இல்லை எனலாம். ஆகவே பாலில் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையான பவுடரை சேர்த்து புட்டிங் தயாரித்து கொடுக்கலாம். சில நாட்கள் பால் பாயசம் தயாரித்து கொடுங்கள். பாலுடன் ஆப்பிள் அல்லது இதர பழவகைகளை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொடுங்கள்.

பழ வகைகள்

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.

காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும்

மதிய உணவு

காலை உணவைப் போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு தயாரிப்பதற்கு எளிதான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரியுங்கள். மதிய உணவில் குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதை கவனிக்கவேண்டும். மதிய உணவுடன் பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்புங்கள்.

எளிதான வேலை என கருதி பலரும் குழந்தைகளுக்கு நூடில்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் அக்குழந்தை நூடில்ஸ் குழந்தையாக மாறிவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள்.

ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களது காலை உணவில் அதிக கவனம் செலுத்துவோம். சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு. ரசித்து சமைத்து அதனை அன்புடன் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். அவர்கள் சிறந்த பிள்ளைகளாக வளர கைக்கொடுங்கள்!

நன்றி...

"கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்"

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 

இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம்..!

பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம்..!

இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!

Wednesday, March 13, 2019

###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions: தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்? - 2019|8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்

###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions: தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்?
 - 2019|8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் 

  • பொதுத்தமிழ்


1. நாடகமேத்தும் நாடகக்கணிகை எனக் குறிப்பிடப்படுபவர் ------------------- - மாதவி

2. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ------------------- - அடியார்க்கு நல்லார்

4. மறைமலையடிகள் எழுதிய நாடகம் ------------------- - சாகுந்தலம்

5. தமிழின் முப்பெரும் பாகுபாடுகள் : ------------------- - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன தமிழின் முப்பெரும் பாகுபாடுகள்!

6. நாடகத்திற்கு இலக்கணம் வகுத்த நு}ல்கள் யாவை? - முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நு}ல், விளக்கத்தார் கூத்து, குணநு}ல், கூத்துநு}ல்

7. நொண்டி நாடகம் என்பது - பதினேழாம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின

8. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை ------------------- என்று குறிப்பிடுகிறார் - நாடகமேத்தும் நாடகக்கணிகை

9. தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை ------------------- எனவும், ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதை ------------------- எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர் - நாட்டியம், நாடகம்

10. நாடகவியல் என்னும் நு}லினைக் செய்யுள் வடிவில் இயற்றியவர்? - பரிதிமாற்கலைஞர்

11. மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891 ஆம் ஆண்டில் வெளியிட்டவர் ------------------- - பேராசிரியர் சுந்தரனார்

12. 'தமிழ் நாடகத் தந்தை" என்று போற்றப்பட்டவர் ------------------- ஆவார் - பம்மல் சம்பந்தனார்.

13. ஊர் உறங்கியது என்பது ------------------- ஆகுபெயர் - இட

14. நீலம் சு+டினாள் ------------------- ஆகுபெயர். - பண்பு

15. வறுவல் தின்றான் என்பது ------------------- - தொழிலாகுபெயர்



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

உழைக்கும் வர்க்கத்திற்கு மூலதனம் யார்?

உழைக்கும் வர்க்கத்திற்கு மூலதனம் யார்??



பாமரனின் உரை|கோணம்

பாமரனின் உரை|கோணம்



##TNPSC|GENERAL TAMIL|ஆறுமுக நாவலரை, வசனநடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டியவர் யார்?| 8ஆம் வகுப்பு - முதல் பருவம்| பொதுத்தமிழ்

ஆறுமுக நாவலரை, வசனநடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டியவர் யார்?|

8ஆம் வகுப்பு - முதல் பருவம்|
பொதுத்தமிழ்


1. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் ————— - பாரதியார்

2. வீரமாமுனிவரின் இயற்பெயர் ————— - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

3. ஆறுமுக நாவலரை, 'வசனநடை கைவந்த வல்லாளர்" எனப் பாராட்டியவர் ————— - பரிதிமாற்கலைஞர்

4. குற்றியலுகரத்திற்கு ————— மாத்திரை. - அரை

5. குற்றியலிகரத்திற்கு ————— மாத்திரை. - அரை

6. முற்றியலுகரத்திற்கு ————— மாத்திரை. - ஒரு

7. கீழ்க்காணும் தொடர்களை செயப்பாட்டு வினையாக்குக.

அ) கலையரசி துணியைத் தைத்தாள். - துணி கலையரசியால் தைக்கப்பட்டது.

ஆ) ஆசிரியர் பாடத்தை நடத்தினார். - பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.

இ) பூங்குழலி உணவைச் சமைத்தாள். - உணவு பு+ங்குழலியால் சமைக்கப்பட்டது.

8. ′கேண்மை′ - பொருள் எழுதுக. - நட்பு

9. ′உடுக்கை′ - பொருள் எழுதுக. - ஆடை

10. ′அல்லல்′ - பொருள் எழுதுக. - துன்பம்

11. ′கிழமை′ - பொருள் எழுதுக. - உரிமை

12. ′நகுதல்′ - பொருள் எழுதுக. - சிரித்தல்

13. ′இடுக்கண்′ - பொருள் எழுதுக. - துன்பம்

14. ′செந்தமிழ்′ - பிரித்து எழுதுக. - செம்மை + தமிழ்

15. ′பேச்சுக்கலை′ - பிரித்து எழுதுக. - பேச்சு + கலை