Thursday, April 5, 2018

ஸ்டெர்லைட் விவகாரம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்


ஸ்டெர்லைட் விவகாரம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்




கோப்புப்படம் சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க விவகாரத்தில் சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது.  


இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 51-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க விவகாரத்தில் சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படும் நிலையில், சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்கமாறு கூறப்பட்டுள்ளது.


சிப்காட் நிறுவனம் எந்த அடிப்படையில், சிப்காட் 2 என்ற பெயரில் புதிய தொழிற் பூங்காவை தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு 324 ஏக்கர் நிலத்தை வழங்கியது, கட்டிடம் கட்ட எப்படி அனுமதி அளிக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கு சிப்காட் நிறுவனம் பதலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


கோப்புப்படம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க விவகாரத்தில் சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது.  




இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 51-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க விவகாரத்தில் சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படும் நிலையில், சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்கமாறு கூறப்பட்டுள்ளது.
சிப்காட் நிறுவனம் எந்த அடிப்படையில், சிப்காட் 2 என்ற பெயரில் புதிய தொழிற் பூங்காவை தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு 324 ஏக்கர் நிலத்தை வழங்கியது, கட்டிடம் கட்ட எப்படி அனுமதி அளிக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கு சிப்காட் நிறுவனம் பதலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது


தமிழராய் மீண்டெழுவோம்
"அத்துணையிலும் அறிவுகொள்"


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment