சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 1.
சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது.
உதாரணமாக பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான் போன்ற கசப்பானவைகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்றும், சில மூலிகைகள், நாட்டு மருந்துகள் எடுத்துக்கொண்டால் டயாபிடீஸ் சரியாகிவிடும் என்றும், தினந்தோறும் மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும் என்றmm பல தகவல்கள், WhatsApp, Facebook போன்ற சோஸியல் மீடியாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகின்றன.
பாமர மக்களும், படித்தவர்களும் இதை நம்பி தங்கள் பணத்தை இழக்கின்றனர், நோயை வளர்த்துக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் சர்க்கரை நோய் என்றால் என்னவென்று புரிதல் இல்லாமைதான் காரணம்.
சர்க்கரை என்பது ஒரு நோயல்ல. அது ஜீரண மண்டலங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகலால் உருவாகும் குறைபாடாகும்.
தலைவலி, ஜூரம், மற்றும் வைரஸ் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோயாக இருந்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் சில நாட்களில் நோய் சரியாகிவிடும். ஆனால் குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. உடனே அது சரியாகாது.
சுமார் 6 மணி நேரம் எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உங்கள் இரத்தை பரிசோதனை செய்து அதில் 120 என்கிற அளவுக்கு மேல் குளுகோஸ் இருந்தாலும், உணவு உண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு 170 க்கு மேல் இரத்தத்தில் சுகர் இருந்தாலும் நீங்கள் சர்க்கரை நோயாளியாக கருத்தப்படுகின்றீர்கள். அன்றிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப் படுகி்ன்றீர்கள். (அடிப்படையில் இந்த ரீடிங் அளவே தவறானது. அது அடிக்கடி மாறக்கூடியது).
சர்க்கரை நோய்க்காக சரியாக, முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பலவிதமான பயங்கர வியாதிகள் வந்துவிடுமென்று பயமுறுத்தப் படுகின்றீர்கள்.
நீங்கள் எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அது உங்கள் இரத்ததில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை மட்டுமே குறைகின்றது. பொதுவாக அனைத்து மருத்துவங்களும் நோயாளியை திருப்திப் படுத்துவதற்காக இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் குறைத்தால் போதுமென்று கருதுகின்றன.
அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட நேரிடுகிறது.
இந்நோயைப் பற்றி ஓரளவு தெரிந்த கல்வி கற்ற பலர் கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும், அதை குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதில் பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் மருந்துகளை நிருத்திவிட வேண்டும் அல்லவா?
உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டப் பிறகும் கூட ஏன் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்? டெஸ்ட் ரிபோர்ட்களின் அளவுகள் சரியாக இருந்தால் உங்களால் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட முடியுமா?
பத்தியமில்லாமல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியுமா?
மருந்துகளால் சுகர் கட்டுப்பாட்டில் வந்து விட்ட பிறகு சுமார் ஒருவாரம் மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தீர்கள் என்றால் திரும்பவும் சுகர் கூடுவிடுகிறதே ஏன்?
எனவே சுகர் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது ஒரு பொய்யான செய்தி தானே? ஆனால் நீங்கள் அடிக்கடி சுகர் டெஸ்ட் செய்து ரீடிங் அளவுகளைப் பார்த்து சுகர் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றீர்கள்.
ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமென்றால், அதை குணப்படுத்தவும் முடியும் அல்லவா?.
கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயை ஏன் குணப்படுத்த முடியவில்லை?
முறையாக மருந்துகள் சாப்பிடாவிட்டால் இந்த சர்க்கரை நோயால் பலவிதமான வியாதிகள் வந்துவிடும் என்று டாக்டர்களின் அட்வைஸ்படி (பயமுறுத்தலின்படி) சுகர் வந்த நாள்முதல் தினந்தோறும் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள். பிற்காலத்தில் எந்தெந்த வியாதிகள் வந்துவிடக்கூடாது என்று தவறாமல் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டீர்களோ, அதன் பிறகு சுமார் 4, 5 வருடங்கள் கழித்து அந்த வியாதிகள் உங்களை சூழ்ந்துள்ளது என்பதை அப்போது உணர ஆரம்பிக்கின்றீர்கள்.
பொதுவாக அந்த நேரத்தில் வாயுக்கோளாறு, அஜீரனம், பசியின்மை, மலச்சிக்கல், உடல் அசதி, பாத எரிச்சல், தோல்களில் அரிப்பு, பார்வை குறைபாடு, கைக்கால்கள் மரத்துப்போதல், மூட்டுவலி, கொலஸ்டிரால், BP, ஆண்மை -பெண்தன்மைக் குறைபாடு, சிறுநீரக கோளாறுகள் போன்ற பல விதமான வியாதிகள் உங்களுடன் இருக்கும்.
நீண்ட நாட்கள் பலவிதமான மருந்துகள் உட்கொண்ட பின்னரும் அந்த மருந்துகள் உங்கள் சர்க்கரை நோயையும், அதை சார்ந்த நோய்களையும் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று அப்போது ஓரளவு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கின்றது. வேறு வழி தெரியாமல் திரும்பவும் அதே மருந்துகளைத் தான் தொடர்ந்து சாப்பிடுகின்றீர்கள்.
ஆரம்பத்தில் ஓரிரு மாத்திரைகள் எடுத்திருப்பீர்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இப்போது நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையும், இன்சுலின் அளவும் கூடியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டும் குறைத்தது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
உங்கள் இரத்தத்தில் அதிகப்படியாக சேரும் குளுகோஸை தடுப்பதற்கான அடிப்படை காரணம் உங்கள் உடலிலிருந்து இன்னும் நீக்கப்பட வில்லை. அதனால் தான் தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
சரி எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது, மருந்துகள் எடுக்கும்போது மட்டும் எவ்வாறு சுகர் குறைகிறது, குறைந்த அந்த குளுகோஸ் எங்கே செல்கின்றது? போன்ற விஷயங்களை அடுத்தப் பகுதி - 2. வில் படிக்கவும். நன்றி. தொடரும்.
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூடன் இணையுங்கள்.
நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவி-டமிருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment