கங்கைக் கரை ரகசியங்கள்
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக அணையா தீபம்
காசி - மஹா மயானம்
'மணிகர்ணிகா கட்', . 'அரிச்சந்திர கட்' என்ற இரு பெரும் சுடலைப் படிக்கட்டுகளில் ஆண்டுக்கு 25,000 முதல் 30,000 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம்!
வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன!
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது!
அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள்!
உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள்.
அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார்.
தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அணையா தீபமாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல்!
அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது.
''அவ்வளவுதான் வாழ்க்கை!'' என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.
இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை.
''யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு செல்லாது'' என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து, அதே தெருவில் சற்று தூரத்தில்...
அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம்.
தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு.
தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது!
அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்!
'காசியில் பிணங்கள் அரைகுறையாக நீரில் விடப்படும்' என்பது பொய்.
எரிந்த சாம்பலின் சிறு பகுதி உறவினருக்கு வழங்கப்பட்ட பின் மிச்சம் படகுகளில் ஏற்றி மறுகரையில் உள்ள மயானத்துக்கு செல்கிறது.
அதற்கான படகுகள் கங்கையில் அசைந்து நின்றன.
காசியில் சிதைக்கு பயங்கரம் இல்லை.
கூட்டம் கூட்டமாக நின்று சிதையை வேடிக்கை பார்கிறார்கள்.
மணிகர்ணிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட இருக்கின்ற சந்தர்பத்தில், பிணங்கள் எரிய, எரிய...
மேலும் பிணங்கள், மஞ்சள் சரிகை மூடி வரிசையில் காத்திருக்கின்றன!
வரிசையாக மிக அமைதியான முறையில் எரிக்கப்படுகிறது
உறவினர்கள் அமைதியாக பிராத்தனை செய்கிறார்கள்.
ஆன்மா இறைவடி சேர்ந்தாக நினைத்து மன நிறைவோடு வீடு திரும்புகின்றனர்.
No comments:
Post a Comment