Monday, April 30, 2018

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 2

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 2


பகுதி - 1 ன் தொடர்ச்சி.

எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது?


இரத்தத்திலும், சிறுநீரிலும் இவ்வாறு சுகர் கண்டுபிடிக்கப் படுகிறது?

நீங்கள் உண்ணும் திட உணவுகளும் மற்றும் திரவ வகைகளும் சரியாகவும்,  முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜீரணிக்கப்பட்டால் தான் அந்த உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலில் சேர்ந்து உங்களுக்குத் தேவையான சக்தியை (Energy) கொடுக்கும்.

இந்த ஜீரணம் நாக்கில் உமிழ்நீ்ரில் ஆரம்பித்து வயிறு, மண்ணீரல், சிறுகுடல், பித்தப்பை வழியாக முறையாக ஜீரணிக்கப்பட்டு  கல்லீரலில் முடிவடைகிறது. நீங்கள் உண்ட உணவு ஒவ்வொரு உறுப்பிலும் நன்கு ஜீரணிக்கப்பட்டு அதிலிருந்து முறையாக  பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும்   சத்துதான் குளுகோஸ் என்னும் சர்க்கரை  ஆகும். (Glucose is the end product of digestion).

இந்த குளுகோஸ் சத்தை நமது உடல் பயன்படுத்த இன்சுலின் என்னும் ஹார்மோன் திரவம் தேவைக்கேற்ப  கணையம் என்னும் உறுப்பில் (Pancreas) சுரக்கப்பட வேண்டும்.

அந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் (Cells)  பயன்படுத்த வைக்கிறது.

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம் ஆகும்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்களாக சுரக்கப்பட்ட  இன்சுலின் திடீரென்று இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் இதுவரை கண்டுபிடிக்கபட வில்லை என்று சொல்லப்படுகிறது.

காரணம் தெறியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞான மருத்துவமாகுமா?


தேவையான அளவு இன்சுலின்  சுரக்கவில்லை என்பது மட்டும் தெறிந்துவிட்டது.  பி்ன்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும்?

நீங்கள் உண்ட  உணவுகள் முறையாக ஜீரணிக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த தரமான குளுகோஸ் என்னும் எரிபொருள்தான் நாம் அன்றாடம் வேலை செய்வதற்கும், நடப்பதற்கும், ஓடுவதற்கும், விளையாடுவதற்கும்  தேவையான இயக்கச்  சக்தியாக பயன்படுகிறது.

அதனால் தான் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுபவர்களும், உடல் சோர்வில் உள்ளவர்களும் குளுக்கோஸை சாப்பிடுவார்கள். இதுவும் தவறானதாகும். இதை சாப்பிட்டவுடன் உடனடியாக சற்று சுறுசுறுப்பு கிடைப்பது போன்று தோன்றும். ஆனால் அது நீடிக்காது. மேலும் அது பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். (இதன் விளக்கத்தை வேறு கட்டுரையில் பார்ப்போம்).

முறையாக ஜீரணிக்கபட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த தரமான குளுகோஸ்  இரத்த ஓட்டத்தின் மூலமாக நமது அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, செல்களின் இயக்கத்திற்கு தேவையான சக்தியை வழங்குகின்றன. இந்த தரம்மிக்க குளுகோஸ்  தேவைக்கேற்ப செல்களால் உபயோகப்படுத்தப்பட்ட  பின்னர், மீதம் எஞ்சியுள்ள குளுகோஸ், கிளைகோஜனாக மாற்றப்பட்டு பின்னர் நமக்கு ஏற்படும் அவசர கால உடல் தேவைகளுக்காக கல்லீரலிலும், தசைநார்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. (Stored Energy).


தரமான குளுகோஸ், தரமற்ற குளுகோஸ் என்றால் என்ன?


நாம் உண்ணும் உணவுகள் மற்றும் திரவங்கள் முறையாக ஜீரணிக்கப்பட்டு அதன் மூலம் கடைசியாக வெளிப்படும் சத்து தான் தரமான குளுகோஸ் ஆகும்.

நம் ஜீரண உறுப்புக்களில் ஏதாவது கோளாறு ஏற்படும்போது நாம் உண்ணும் உணவுகள் மற்றும் திரவங்கள் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை.

அவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாமல் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்டு கடைசியாக வெளிப்படும் குளுகோஸ் சத்துக்கள்  தரமற்ற குளுகோஸ் ஆகும்.

ஆனால் அறிவியல் மூலக்கூறு படி (Scientific Chemical Formula) தரமான மற்றும் தரமற்ற
குளுகோசும் ஒரே மாதிரியாக தான் தோன்றும். அது வேறுபடுத்திக் காட்டாது.

உதாரணமாக ஒரு முழு கரும்பை எடுத்துக் கொண்டீர்களானால் அதன் அடியில் உள்ள இனிப்பும், மேல் பகுதியில் உள்ள இனிப்பும் ஒரே மாதிரி இருக்காது. ஒரே கரும்பு, ஒரே மாதிரியான விவசாயம். பிறகு ஏன் இனிப்பு சுவையில் வித்தியாசம் உள்ளது? அந்த கரும்பு நிலத்தில் உள்ள சத்துக்களை கிரகிக்கும் தன்மையில் உள்ள வேறுபாடு தான் காரணம்.

அதுபோல் முறையற்ற ஜீரணத்தால் கிடைக்கும் சத்துக்களை நமது செல்கள் ஏற்றுக் கொள்ளாது. அல்லது  குறைவாக ஏற்றுக் கொள்ளும்.

அவ்வாறு நமது செல்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல்  நிராகரிக்கப்படும் இந்த குளுகோஸ் நமது இரத்தத்தில் கலந்து இரத்த ஓட்டத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரத்தப் பரிசோதனை செய்தால்  உங்களுக்கு சுகர் அதிகமிருப்பதாக காட்டும்.  இந்த நிலையைத்தான் டயாபிடீஸ் அல்லது சர்க்கரை நோய் வந்துவிட்டதாக  சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக  மருத்துவமணைக்கு செல்லும்போது தான் உங்களுக்கு சுகர் டெஸ்ட் செய்யப்படுகிறது. அப்போது இரத்தப் பரிசோதனையில் சுகர் இருப்பதாக கண்டுபிடிக்கப் படுகிறது. சர்க்கரை இருப்பது டெஸ்டில் கண்டுபிடிக்கப்படும் போதுதான் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக ஆக்கப் படுகின்றீர்கள்.

உங்களுக்கு இருக்கும் இந்த நீரிழிவு நோயை டெஸ்ட் மூலம் கண்டுப்பிடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்னர் அல்லது பல மாதங்களுக்கு முன் இதே  சர்க்கரை நோய் உங்களுக்கு இருந்தது. ஆனால் அது உங்களுக்குத் தெரியாது.

அது தெரியும்வரை உங்களுக்கு எந்தவித  கவலையும், பயமும் இல்லை. சாதாரணமாக இருந்தீர்கள்.  எப்போது இரத்தத்தில் சர்க்கரை இருப்பது உங்களுக்கு தெரிய வருகிறதோ அப்போது தான் பலவிதமான பயங்கள் உங்களை தொற்றிக் கொள்கிறது.

மக்களிடத்தில் நிலவும் பொதுவான பரப்புரைகளாலும், கருத்துக்களாலும்,  தினசரி சரியாக மாத்திரை மருந்துகள் சாப்பிடாவிட்டால் பல விதமான நோய்கள் வந்து விடுமென்று பயப்படுகின்றீர்கள்.

சுகர் டெஸ்ட் செய்வதற்கு முன்பு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கூட உங்களுக்கு சுகர் இருந்திருக்கலாம். அப்போது சுகருக்கான எந்த மருந்தும் எடுக்காமல் நார்மலாக தான் இருந்தீர்கள். ஆனால் சுகர் டெஸ்ட் ரிபோர்ட்டை பார்த்ததும்  இப்போது பயம் உங்களை தொற்றிக் கொண்டது.

எத்தனையோ பாமர ஏழைமக்கள், குரவர்கள், கூலித் தொழிலாளிகள், தொடர் குடிகாரர்கள்  ஆகியோர் பெரிய மருத்துவமணைக்கு செல்வதில்லை. அவர்களுக்கு சுகர் இருந்தாலும் அதை பொருட் படுத்துவதில்லை. மருந்துகள் எடுத்துக் கொள்ளுவதுமில்லை, மாதாமாதம் டெஸ்டுகள் செய்வதுமில்லை.
இது சரி அல்லது சரியல்ல என்று சொல்தை விட, அவர்கள் நோய் பயமின்றி வாழ்கின்றனர் என்பது தானே  உண்மை.

முழுமையற்ற ஜீரணத்தால் உருவான தரம் குறைவான குளுகோஸ் சத்துக்கள், நமது  செல்களால்  ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு,  இரத்தத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த அதிகப்படியான குளுகோஸை நமது சிறுநீரகம் இனம்கண்டு சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

இந்நிலையில் சிறுநீர் பரிசோதனை செய்தால் அதில் சுகர் இருப்பதாக கண்டுபிடித்து கூறுவார்கள். மேலும் உங்கள் சத்துக்கள் சிறுநீர் மூலமாக  வெளியேறுவதாக கூறி மாத்திரை மருந்துகள் கொடுத்து சுகர் சத்து சிறுநீர் மூலம் வெளியேறாமல் தடுத்து வைக்கப்படும்.

இப்போது நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது சிறுநீரகத்தின் வேலை என்ன?

இரத்ததை சுத்திகரித்து அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தானே சிறுநீரகத்தின் வேலை.

அப்படி என்றால் சிறுநீரில் வெளியேறும் சுகர் எப்படி நல்ல சத்துக்கள் ஆகும்?


நம் உடலுக்குத் தேவையில்லாத நமது செல்களால் நிராகரிக்கப்பட்டு அவசியம் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுதான் இந்த குளுகோஸ்.  அதை வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் சரியாகத்தான்  செய்கிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேற்றப் படவில்லையெனில் சிறுநீரகம் செயலிலழந்து விட்டது என்று அர்த்தமாகிவிடும்.

சர்க்கரை நோயின் ஆரம்பத்திலேயே சிறுநீரகம் செயலிழந்து விடுமா? அல்லது உங்கள் சிறுநீரகம் நன்றாக இயங்குகின்றதா? இதில் எது உண்மை?

அடுத்தது மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்தவுடன் எவ்வாறு இரத்தத்தில்  சுகர் குறைகிறது?

குறைந்த அந்த சுகர் எங்கே செல்கிறது?


போன்ற விஷயங்களை அடுத்தப் பகுதி Part - 3ல் படிக்கவும். நன்றி. தொடரும்.

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..


மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.



இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது

நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.


இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment