Friday, April 13, 2018

நாம் ஏன் மருத்துவ மனை செல்கிறோம்?

நாம் ஏன் மருத்துவ மனை செல்கிறோம்?


ஏற்கனவே குணமாகிக் கொண்டு வரும் நோயை குணமாகாமல் தடுக்கவே நாம் மருத்துவமனை சென்றுகொண்டிருக்கிறோம்  என்பது உங்களுக்கு தெரியுமா?.

    நமது உடலில் நோய் உருவாகி வளரும்போது எக்காரணம் கொண்டும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

 ஆனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி உருவாகி அந்நோய்க்கு எதிராக வேலை செய்யும்போது மட்டுமே நம்மால் நோய் பற்றி அறிய முடிகிறது.

   அதாவது நோய் உருவாகும் போது தெரிந்து கொள்ள முடியாது.

நோய் குணமாகும் போது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

   ஒருவருக்கு சளி, காய்ச்சல், வாந்தி, பேதி, அரிப்பு, வலி, வீக்கம், கொப்பளம், புண்கள், சோர்வு, மயக்கம் ஏற்படுகிறது எனில் மேற்சொன்ன அனைத்தும் நோய் அல்ல. நோயெதிர்ப்பு சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

   நுரையீரலில் கழிவுகள் தேங்கியிருப்பதே நோய். அங்கு நோயெதிர்ப்பு சக்தி உருவாகி அக்கழிவுகளை சளி மூலம் வெளிக்கொண்டு வரும் இயற்கையின் மருத்துவம்.

 நடக்கும்போது தான் நாம் நமக்கு நோய் வந்ததாக கருதி மருத்துவம் செய்ய முயற்சிக்குறோம்.

 மருத்துவம் என்ற பெயரில் சளியை நிறுத்த மருந்து எடுத்துக் கொண்டு உடலின் இயற்கையாக நடக்கும் மருத்துவத்தை பாழ்படுத்தி கழிவுகளை நுரையீரலிலேயே தேங்க வைத்து நோயெதிர்ப்பு சக்தியை வீணடித்து விடுகிறோம்.


    மீண்டும் எப்போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி வளர்கிறதோ அப்போது மீண்டும் சளி பிடித்து கழிவுகளை வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளும்.

அதை அறியாமல் கிளைமேட் மாறிவிட்டதால் சளி, மழையில் நனைந்ததால் சளி, ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் சளி என சொல்லிக்கொள்கிறோம். ஆனால் யாருக்கெல்லாம் நுரையீரலீல் கழிவுகள் தேங்கி உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே சளி பிடிக்கும்.

    நுரையீரல்தான் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிக துணை புரியும் உறுப்பு. அதே பலவீனம் அடைந்தால் உடலில் தோன்றும் மற்ற நோய்களும் வளர ஆரம்பிக்கும்.

   சாதாரண சளி ஆஸ்துமா , டிபி என மாறி உயிரை பறிக்கும். புற்றுநோய் வர இவ்வாறான நோயெதிர்ப்பு சக்தியை வீணடிப்பதே காரணம் ஆகும்.

  நாம் ஏற்கனவே குணமாகிக் கொண்டு இருக்கும் நோய்க்காகவே மருத்துவம் என்ற பெயரில் நோயை வளர்த்துக் கொள்கிறோம்.

 அறியாமை காரணமாக பணம் செலவழித்து நோயை வளர்க்கிறோம். பின்பு மருந்துகள் வாங்கும் தொடர் வாடிக்கையாளராக மாறி தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மருத்துவத்தில் இழப்பதோடு ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்.

உங்களுக்கு மருத்துவம் பற்றிய புரிதல் இல்லை எனில் மருத்துவம் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதை தடுக்க இயலாது.

  கழிவுகளின் தேக்கமே நோய். கழிவுகளின் வெளியேற்றமே உடல் தனக்குத் தானே செய்து கொள்ளும்  இயற்கை மருத்துவம்.

உங்களுக்கு இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

 அழைப்பு விடுத்து கேட்டு பயன் பெறலாம்,

 இல்லையேல் தவறிய அழைப்பு தாருங்கள் நாங்கள் அழைத்து பேசுகின்றோம்.

என்றும் உங்கள் அன்புடன்.
அருள்நிதி முரளீதரன்
இயற்கை மருத்துவ ஆலோசகர்,
ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை.
அனுப்பர்பாளையம்.
திருப்பூர்.
9585436122.



இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

அத்துனையிலும் அறிவுகொள் தமிழா!!!

தமிழராய் மீண்டெழுவோம்!!!


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்




No comments:

Post a Comment