Friday, April 20, 2018

ஏழு நாட்கள் பத்தியம் மரபியல்

ஏழு நாட்கள் பத்தியம் மரபியல்



வாழ்வியல் மருத்துவத்தின் அடிப்படைகளில் பத்திய உணவுக்கு முன்னுரிமை உண்டு. உடலின் தன்மைக்கேற்ப, எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துவது ஒவ்வொரு மருத்துவரின் கடமை, உடலின் ஐம்பூதச் சேர்க்கையை தீர்மானிப்பதில் உணவுக்க முக்கிய பங்கு உள்ளது. ஆகவே, உணவின் வழியாக செல்லும் ஐம்பூதங்களின் தன்மையை வரையறுப்பது மிகவும் தேவையானது. நீர்த்தன்மை மிகுதி உள்ளவர், குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டால், அவரது உடலில் நீர் அதிகரிக்கும் அல்லவா இதனால் தான் நமது மரபில் பத்திய உணவுகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன. உடல் நலக்கேடுகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு "ஏழு நாள் பத்தியம்" நல்ல முன்னேற்றம் தருகிறது. செம்மை வாழ்வியல் மருத்துவத்தில் இம்முறையை கற்று தருகிறோம்.

ஏழுநாள் பத்தியம் என்றால் என்ன?


1.      நன்கு பசிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.இளம்பசிக்கு அரிசி கஞ்சி பருகினால் போதும்.

2.      காலை பசிக்கு கஞ்சி துவையல் போதும்.

3.      பகல் பசிக்கு சோறு, குழம்பில்லா உணவுகளை உட்கொள்ள வேண்டும். அல்லது பருப்பு, புளி, இல்லா குழம்பு, இரசம் வகைகள் சேர்த்து கொள்ள வேண்டும். புலவு சோறு போன்ற கூட்டு சோறு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். இவற்றிலும் எலுமிச்சை, புளி, பருப்பு சோறு, தேங்காய் சோறு இவற்றை தவிர்க்க வேண்டும்.

4.      இதில் குழப்பம் இருந்தால் குழம்பிற்கு பதில் இரசம் வகைகளை மட்டும் பயன் படுத்துவது சிறந்த பழக்கம்.

5.      அவ்வப்போது சோர்வு ஏற்கப்பட்டால் தேவைக்கேற்ப இரசம் அருந்த வேண்டும்.

6.      இரவுப்பசிக்கு இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
பகல் உணவில் மீதமுள்ள சோற்று உணவையும் இரவில் உண்ணலாம். தோசை சப்பாத்தி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

7.      பால் சேர்த்த தேநீர், குழம்பு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

8.      குடிநீராக சீரக நீர் மட்டுமே அருந்த வேண்டும்


இவ்வாறு தொடர்ந்து ஏழுநாள் கடைபிடிக்கும் போது, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது, இருமாதங்களுக்கு ஒர் முறை இவ்வாறு பத்தியம் கடைபிடிக்கலாம், ஏழு நாட்களுக்கு பதில் மூன்று நாட்கள், ஐந்து நாட்களும் இருக்கலாம்.

பருப்பு புளி இல்லாக் குழம்பு செய்முறை விளக்கம்

விருப்பமான காய்கறிகள் ஏதேனும் ஒன்று (கத்தரி, வெண்டை, முருங்கை, கேரட், அவரை)போன்றவை ஒரு கிண்ணம்,

தக்காளி =4

பச்சை மிளகாய் =3

தேங்காய் = அரைக்கிண்ணம்,

சீரகம் =இரண்டு தேக்கரண்டி,

சின்ன வெங்காயம் =2

பூண்டு =4

எண்ணெய் தேவைக்கேற்ப

கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்க,

உப்பு தேவையான அளவு.

இருக்கும் காய்கறிகளை கழுவிச் சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள், தேங்காயுடன் பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து அரைத்துக கொள்ளுங்கள். சட்டியில் தேவையான அளவு நல்ல செக்கெண்ணயாக இரண்டு தேக்கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி பெருங்காயம், பச்சை மிளகாய், எல்லாம் நன்றாக வதக்கவும், இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு நறுக்கி வைத்து இருக்கும் காய்கறிகளை போட்டு வதக்கவும், கால்வாசி காய்கறி வெந்ததும், இதில் காரத்தின தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள், அல்லது சாம்பார் தூள் சேர்க்கவும், தேவைக்கு ஏற்ப உப்பும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வெந்த பிறகு அரைத்து வைத்து இருகும் தேங்காய் சீரக மாசலாவை சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

மரபுத் தமிழர் செந்தமிழன் அவர்கள்,
அடுக்கலை வைத்தியம்

பதிவு பகிர்வு
ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம் திருப்பூர்
9585436122, 8778832095,




இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment