தாது நஷ்டம் தீர்க்கும் திரிகடுகு சூரணம்
- சுக்கு – 100 கிராம்
- திப்பிலி – 100 கிராம்
- மிளகு – 25 கிராம்
மூன்றையும் தனித்தனியே காயவைத்து, இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இதுவே திரிகடுகு சூரணம் எனப்படுகிறது.
இதன் சூரணம் கொஞ்சம் எடுத்து பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
அதிகாலை மற்றும் இரவு உணவுக்குப்பின் வெந்நீரில் சிறிதளவு பொடியை போட்டு கலக்கி குடிக்க வயிற்று பொருமல், இரைச்சல், இருமல் இருதய நோய் குணமாகும்.
நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
தேனில் சிறிதளவு குழைத்து அதிகாலை சாப்பிட வாயு, அஜீரணம், ஏப்பம் குணமாகும்.
பசியை தூண்டும். வாந்தி பேதியை குணமாக்கும்.
இரவு உணவுக்குபின் 1 தேக்கரண்டி திரிகடுகு சூரணம் எடுத்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட தாது நஷ்டம், அக்கி, மந்த சரியாகும்.
இரைப்பைக்கும் ஈரலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
தினமும் தோப்புக்கரணம் போடுங்கள் நண்பர்களே !
என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment