Thursday, September 20, 2018

"நோயின்றி நலமாக வாழ வழிவகுக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய்"

"நோயின்றி நலமாக வாழ வழிவகுக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய்"



காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. 90 வயதான மிடுக்கான  ஒரு முதியவர் கூறிய ரகசியம் இது...

"கலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே" என சித்தர்கள் இந்த மூன்றின் பயனைப்  பற்றிப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே  பாடியிருக்கிறார்கள்.

"இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாதம்,  பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றையும் சமன் செய்பவை."

நீங்கள் அதனை எந்த நேரத்தில் எப்படிச்  சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும்...

"இஞ்சி:-"

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

"இஞ்சி உண்ணும் முறை:-"

காலையில் இஞ்சிச்சாறு 15 மில்லி  (அதாவது  மூன்று டீஸ்பூன்) எடுத்து,  சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

"சுக்கு"

சுக்கின் மேல்புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டும் போது,  சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பைச் சுரண்டினால் சுக்கின் மேலுள்ள தோலுடன் சுண்ணாம்பும் வந்து விடும்.

"சுக்கு உண்ணும் முறை"

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும் ஆற்றல் கொண்டது...

"கடுக்காய்"

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்து விடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சதைப் பகுதியைக் காயவைத்து இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

"கடுக்காய் உண்ணும் முறை"

இரவில் படுக்கும் போது கடுக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபத்தை சமன் செய்யும். மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டிக் கூடப்பார்க்காது என்பது உறுதி...

அநேக சித்தர்கள் இந்த மூன்றின் பயனைப் பற்றியும் பல  பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

நாட்டு இலந்தை குறித்த பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



No comments:

Post a Comment