Friday, September 28, 2018

இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.

 இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.



என் சகோதரியின் மகள் என்னிடம் கதை சொல்லுன்னு கொஞ்சுனா. எனக்கு ஒன்னுமே நியாபகம் வரல. சரின்னு வாரணம் அறுபதாயிரம் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதற்கு பிறகு நடந்தது.
நான்: ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்
குட்டி: வேற யாருமே இல்லியா?
நான்: இருந்தாங்க அம்மு.. ஆனா இப்போ    ராஜா பத்தி தான் சொல்ல போறேன்.
குட்டி: சரி சொல்லு.. 
நான்: அந்த ராஜாகிட்ட sixty thousand elephant இருந்துச்சாம்.
குட்டி: வால்பாறைல காட்டுனியே அது மாதிரியா?
நான்: ஆமா டா.
குட்டி: அவ்ளோ பெருசா இருக்குமே அதுவா? அதுக்கு கூட சோறு செஞ்சு வச்சு இருந்தாங்களே? (Top slips la wild car ட்ரெக்கிங் போனபோது அங்க கும்கி யானைக்கு பயிற்சி குடுக்குறது சாப்பாடு குடுக்குறது எல்லாம் பார்த்தா)
நான்: அதே தான். சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்காத கதை கேளு
குட்டி: சரி சொல்லு
நான்: அவரு 60000 யானையும் ஒரே ship ல ஏதிக்கிட்டு 
குட்டி: ship ல யா.  ஓடஞ்சு கடல்ல விழுந்து செத்து போய்ராதா
நான்: இல்லை பாப்பு போனாராம்
கூட்டு: லூசு லூசு one elephant eh அவ்ளோ பெருசு இருக்கும். இதுல அவ்ளோ elephants கண்டிப்பா ship ஓடஞ்சு விழுந்து செத்து போயிரும். 
நான்: அம்மு கதை சொல்லவா வேனாவா?
குட்டி: சீ போ.. பொய் புழுகுனி. 
அடுத்தது நான் எதிர் பார்க்காதது  பாட்டி இந்த லூச எங்க ஸ்கூல்ல சேர்த்துவிடு. இதுக்கு கதை சொல்லவே தெரில. பொய்யா சொல்லுதுன்னு சொல்லுறா. 
  • எனக்கு சிரிப்பு ஒரு பக்கம் பெருமிதம் ஒரு பக்கம். என் அடுத்த தலைமுறையை கேள்வி கேட்க பழக்கிவிட்டேன். இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.

No comments:

Post a Comment