உடலின் அடிப்படையை அறிவோம்
1. உடலுக்கு உணவு தேவை என்பதை உணர்த்தும் உணர்வு தான் பசியாகும் அப்போது சாப்பிடுவது தான் ஆரோக்கியம்.
2. உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் மூலம் உணர்த்தும். அப்போது தண்ணீர் அருந்தினால் உடல் தேவைகள் பூர்தியாகி கழிவுகள் நீக்கப்படும்.
3. உங்களுக்கு சோர்வு, அசதி ஏற்படும் போது உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்துகிறது. அப்போது அவசியம் ஓய்வு எடுக்க வேண்டும். மீறி உழைத்தால் உடலுக்கு ஜுரத்தை ஏற்படுத்தி இயற்கையே உங்களை படுக்க வைத்து விடும்.
4. உணவு, நீர், சீதோஷ்ண நிலை காரணமாக உடலில் கழிவுகள் சேரும் போது அது தும்மல், சளி, இருமல் போன்றவைகளாக வெளிப்படுகிறது.
5. உங்களுக்கு ஏற்படும் வாய் கசப்பு, பசியின்மை நமது கல்லீரலுக்கும் வயிற்றுக்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்துவதாகும். அப்போது உணவையும், நீரையும் தற்காலிகமாக நிறுத்துவதன் மூலம் வயிறும், கல்லீரலும் ஆரோக்கியமடையும்.
6. உனக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் தேவையற்ற உணவை உண்ணாதே என்று உடல் வாந்தியை ஏற்படுத்தி எச்சரிக்கிறது. இதை கவனிக்கத் தவறும் போது மேலும் அது பேதியின் மூலம் புரியவைக்கிறது.
7. இரத்தத்தில உள்ள நச்சுகள் தோல்கலின் மூலம் வெளியேற்றப் படுகின்றன என்பதை குறிப்பது தான் தோல்கலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், சிவப்பு திட்டுகள் ஆகும்.
8. உடல் செல்கள் அனைத்துக்கும் தற்காலிக ஓய்வும், புதுபித்தலும் தேவை என்பதை உணர்தும் செயல்பாடுதான் தூக்கம்.
9. உடலில் உள்ள அனைத்து செல்களிலிருந்தும் நீக்கப்பட்ட கழிவுகள் மற்றும் தேவைக்கு அதிகமான சத்துக்கள் வெளியேற்றப்படும் செயல்பாடு தான் சிறுநீர் கழித்தலாகும்.
10. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்து பிரிந்து இரத்தத்தில் கலக்கப்பட்டு எஞ்சியுள்ள சக்கை வெளியேறுவது தான் மலம் கழித்தல் ஆகும்.
நன்றி:-
Dr. Gouse MD (Acu.,Tcm)., Singapore..
மேலும் பல மருத்துவ தகவல்களை அறிய www.kavimalaravan.blogspot.in இணையுங்கள்.
இரத்தத் தட்டுக்கள்
குறித்த பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
அக்கு பிரஷரில் தூக்கமின்மைக்கு தீர்வு
என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment