Tuesday, May 22, 2018

மருத்துவம் நிறைந்த மாசற்ற குடிநீர்

மண் பானை குடிநீர்!!! மனதை தூய்மையாக்குமே!!!

மருத்துவம் நிறைந்த மாசற்ற குடிநீர்!!!



பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது, உலகமையமாக்கள் கொள்கையால் குடி நீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. 

இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர், கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது. இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது.

RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப் படுகிறது. இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க, இதை முயற்சி சொய்யலாம்.


  1. மிளகு 25 கிராம் 
  2. சீரகம் 25 கிராம் 
  3. தேத்தாங் கொட்டை 1
  4. வெற்றி வேர் தேவைபடும் அளவு
  5. வெந்தயம் 20 கிராம்

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம், மண் பானை உடலுக்கு மிகவும் நல்லது.


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

அத்துனையிலும் அறிவுகொள் தமிழா!!!

தமிழராய் மீண்டெழுவோம்!!!


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


No comments:

Post a Comment