Saturday, May 12, 2018

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 3

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 3


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். 


வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""


 "ஐந்து ரூபாய்"


ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.


மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"


"இல்லம்மா வராதும்மா"


அதெல்லாம் முடியாது.


 மூன்று ரூபாய் தான்


பேரம் பேசுகிறாள் அந்த தாய்.


பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு 


"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"


முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.


கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு


"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.


"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"


இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"


"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..


திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"


என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.


எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..


"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு 
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?


என்று கேட்கஅதற்கு அந்த தாய்,


"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.


இது தான் உண்மையில் மனித நேயம் ......



இவ்விடம்

த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

No comments:

Post a Comment