சர்க்கரை நோய் இனிப்பு - தொடர் - 8 (7 ன் தொடர்ச்சி)

அலோபதி முறையை பாருங்கள், இந்த முறையின் மருத்துவர்கள் படிப்பதெல்லாம் அயல்நாட்டு பாடங்களை தான். இவர்கள் வைத்திருக்கும் பரிசோதனை கருவிகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு தயாரிப்புக்கள். இவர்களது சோதனை முறைகள் எல்லாமே நமக்கு பொருத்தமே இல்லாதவை. இவற்றை காட்டிலும் கொடுமை என்னவெனில், இவர்கள் எழுதிக்குவிக்கும் மருந்துகளில் பெரும் பகுதி அந்நிய நிறுவனங்கள் தயாரிப்பவை. எல்லா நாடுகளுக்கும் ஒரே மருந்து, எல்லா மக்களுக்கும் ஒரே நோய், எல்லா மக்களுக்கும் ஒரே விதமான பரிசோதனை முறைகள். என்பதே அலோபதியின் அடிப்படை.
"மனிதர்கள்" எல்லாருக்கும் ஒரே விதமான உடற்கூறியல் இருக்கிறது. ஆகவே, எல்லா மனிதர்களும் ஒரே விதமானவர்களே "என்பது இம்முறையின் மந்திரம். உற்கூறுகள் ஒன்று தான், அவை இயங்கும் முறைகளில் தான் வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிரிட்டன் வாசியை தினமும் நெல்லிக்காய் உண்ணக் சொன்னால், குளிர் காய்ச்சல் வந்து அவதிப்படுபவர். நமது கிராமத்து வாசிகளுக்கு தினமும் ஹாட் டாக் (Hot Dog) எனும் எனும் மேற்கத்திய உணவு மட்டுமே கொடுத்தால், அவர்களால் உடல் உழைப்பில் ஈடுபட முடியாது.ஒரேவிதமான வயிறு தானே ஏன் இந்த வேறுபாடு எழுகிறது என்றால், உடற்கூறு இயங்கும் முறை, நிலத்தின் இயல்புக்கு தக்கவாறு மாறுபடுகிறது என்பது தான் விடை.
ஒரு மலைவாழ் மனிதருக்கு அரிசி சோறு மட்டுமே கொடுத்தால், அவர் மிகவும் சோர்வடைந்து போவார். அவரால் காடுகளில் அலைந்து திரிய முடியாது. மரங்களில் ஏறி மலை இடுக்குகளில் தொங்கி தேன் எடுக்க இயலாது. வன விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள கூட சிரமப்படுவார். அவருக்கு கேழ்வரகு, கம்பு, தினை, சாமை ஆகியவை வேண்டும். இத்தனைக்கும் நாம் வாழும் ஊரில் இருந்து சில கிலோமீட்டர்களில் உள்ள மனிதர்கள் இவர்கள், அதுபோல், மீனவர்களை வெறும் காய்கறிகளை உண்ணக் சொல்லி பாரூங்களேன். அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இது வெறும் பழக்கம் அல்ல, அவர்கள் செய்யும் பணிகளுக்கு தேவையான உடலின் ஆற்றலுக்கு காய்கறிகள் போதாது, மீன் உணவு தேவை.
ஆக, உணவு எனும் ஒரே ஒரு காரணியைகூட நம்மால் எல்லா இடங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடியவில்லை. அலோபதியோ பூமியின் எல்லா மனிதர்களையும் ஒரே கணக்கில் அடக்கி "சராசரி" அவளால் எடை போட முயற்சிக்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவு மாறுபடும் போது,அந்த உணவில் உள்ள உட்கூறுகள் எல்லாமே மாறுபடும் போது, அந்த மனிதர்கள் செய்யும் வேலை வேறு வேறாக இருக்கும் போது, இவர்கள் எல்லாருக்கும் ஒரே அளவில் தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்பது கற்பனையில் தான் நடக்கும்.
இந்த பட்டியலை பாரூங்கள், மூன்று வகை உணவுப் பயிர்களில் எந்த அளவுக்கு புரத சத்தும், மாவுச்சத்தும் உள்ளது எனக் காணலாம். (100 கிராம் பயிரில் உள்ள அளவுகள்)
உணவுப பயிர்,
- அரிசி
- வரகு
- கோதுமை
புரதச் சத்து,
- 6. 4 கிராம்
- 8.511 கிராம்,
- 11 கிராம்,
மாவுச்சத்து
- 79 கிராம்
- 65.67 கிராம்
- 73.9 கிராம்
இந்த மூன்று பயிர்களையும் மூன்று வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தான் அதிகமாக உட்கொள்கிறார்கள். சர்க்கரைக்கு காரணமாக அலோபதியால் கூறப்படும் மாவுச் சத்தை எடுத்துக் கொள்வோம். அரிசியில் 79 கிராம் உள்ளது வரகில் 65. 67 கிராம் உள்ளது. ஒரு மனிதர் தனது அன்றாட உணவில் அரிசியை அதிகமாக சேர்த்துக் கொள்கிறார். மற்றவர், வரகு அதிகமாக உண்கிறார்.
இவர்கள் இருவரும் உணவு உட்கொண்ட பின்னர் இவர்களது இரத்தத்தைப் பரிசோதித்தால், இயல்பாகவே அரிசி உண்பவர் உடலில் குளுக்கோஸ் அதிகமாகத் தான் இருக்கும். நிச்சயமாக, இருவருக்கும் ஒரே அளவில் குளுக்கோஸ் இருக்க வாய்ப்பில்லை அல்லவா, கோதுமை உண்பவருக்கும் அரிசி உண்பவருக்குமான குளுக்கோஸ் அளவில் பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், இந்த மூவரும் தொடர்ந்து இதேவிதமான உணவுப் பழக்கங்களில் இருப்பவர்களானால், இவர்கள் மூவருக்கும் மூன்று விதமான குளுக்கோஸ் அளவு தான் இருக்கும்.
இவர்கள் இருவரும் உணவு உட்கொண்ட பின்னர் இவர்களது இரத்தத்தைப் பரிசோதித்தால், இயல்பாகவே அரிசி உண்பவர் உடலில் குளுக்கோஸ் அதிகமாகத் தான் இருக்கும். நிச்சயமாக, இருவருக்கும் ஒரே அளவில் குளுக்கோஸ் இருக்க வாய்ப்பில்லை அல்லவா, கோதுமை உண்பவருக்கும் அரிசி உண்பவருக்குமான குளுக்கோஸ் அளவில் பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், இந்த மூவரும் தொடர்ந்து இதேவிதமான உணவுப் பழக்கங்களில் இருப்பவர்களானால், இவர்கள் மூவருக்கும் மூன்று விதமான குளுக்கோஸ் அளவு தான் இருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உண்ணப்படும் ஓட்ஸ் எனும் உணவுப் பயிரில், 12 கிராம் தான் மாவுச்சத்து உள்ளது. இப்போது சிந்தித்து பாருங்கள். உணவில் வெறும் 12 கிராம் மட்டுமே உள்ள மாவுச் சத்துள்ள உணவை உட்கொள்பவருக்கும், 79 கிராம் மாவுச்சத்துள்ள அரிசியை உண்பவருக்கும் ஒரே அளவில் தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்பது சாத்தியமா? ஆனால், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறது அலோபதியின் "அறிவியல் "
மேற்கண்ட கணக்குகூட பொத்தாம் பொதுவானதுதான், உணவுப் பயிரில் உள்ள சத்துக்களை மட்டுமே வைத்து உணவின் தன்மையை அளவிடுவதும் அரைகுறையானது தான். அந்த உணவு எவ்வாறு சமைக்கப்படுகிறது, உணவு உண்ணப்படும் அளவு, உண்ணப்படும் நேரம், உண்ணும் போது சாப்பிடுபவரின் மனநிலை, உடல் நிலை, சூழல் உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் சேர்ந்து தான் உடலில் சத்தாகவும் கழிவாகவும் மாறுகின்றன.
உதாரணமாக மேல் கண்ட அதே மூன்று உணவுப் பயிர்களும் சமைத்த பின்னர் மாவுச்சத்து அளவில் மாறுபாடு அடைகின்றன.
- அரிசி (சோறு) - 23
- சமைத்த கம்பு - 41
- சமைத்த கோதுமை - 26
இன்னும் துல்லியமாக கணக்கிட வேண்டுமானால் என்ன சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும், எப்படி சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும்,. அரிசியை பொறுத்தவரையில், ஒவ்வொரு வகை அரிசியும் ஒவ்வொரு தன்மை கொண்டது. எல்லா அரிசியும் ஒரே அளவிலான சத்துப் பொருட்களை கொண்டு இருப்பது இல்லை. சிகப்பரிசியில் வெறும் 42 கிராம் தான் மாவுச்சத்துள்ளது.
சில வகை உணவுப் பயிர்களிலேயே, இவ்வளவு மாறுபாடுகள் இருக்கும் போது, ஆயிரக்கனக்கான சமையல் பொருட்கள் உள்ளனவே, அவற்றில் எல்லாம் எவ்வளவு வேறு பாடுகள் இருக்கும். இயற்கையில் எதுவுமே நகல் எடுக்க படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாக படைக்கப்படுகிறது. அலோபதியோ, 12 கிராம் மாவுச்சத்து உள்ள ஓட்ஸ் மானியத்தை உண்பவர்களுக்கும், 79 கிராம் மாவுச் சத்து உள்ள அரிசியை உண்பவர்களுக்கும் ஒரே அளவில் தான் சர்க்கரை அளவு இருக்க வேண்டும் என்கிறது.
"இது அலோபதியின் அறியாமை அல்ல அலோபதியின் சூது"
நோயளிகளின் எண்ணிக்கையை பெருக்கி, கொள்ளையடிப்பதற்கான, எளிய வழிமுறைகள் தான் இவ்வாறான '' ஆய்வு அறிக்கைகள்"எல்லாம். நடைமுறையில் சாத்தியம் குறைவான அளவீடுகளை வைத்துக் கொண்டு, சமூககத்தின் பெரும் பகுதி மக்களை நோயாளிகள் என அறிவித்து விடுவது அலோபதியின் சூது. மக்களுக்கு இது தெரியாது, மக்களை பொறுத்தவரை," இரத்த பரிசோதனையிலேயே சர்க்கரை அளவு அதிகம் என தெரிந்து விட்டது "என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள், ஆனால், அந்த அளவு தான் என்ன?, அதன் அடிப்படை என்ன? என எவரும் கேட்பதில்லை.
உண்மையின் ஒளி மட்டுமே இருளில் வழிகாட்டும். உண்மையே ஒளி, உண்மையே கடவுள், உண்மையை அறியாமல், உணராமல் எந்த தீர்வையும் அடைய முடியாது. சர்க்கரை நோய் குறித்த அச்சம், பீதி உங்கள் மனதில் இருளாக படித்திருந்தால், அந்த இருளை நீக்கும் படி அலோபதி மருத்துவர்களிடமே சரணடைந்தால் இருள் நீளுமே தவிர விலகாது. ஏனெனில், அந்த இருளை உருவாக்கி வைத்தவர்களே அவர்கள் தான். நாட்டில் பெரும் பாலான மக்கள் இவ்வாறு தான் *"சர்க்கரை நோயாளிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்"*
இந்த அலோபதி முறை மருந்து மாத்திரைகளை எடுத்து உடலில் பல நோய்களும் உருவாகாமல் தடுத்து அந்த மாத்திரை மருந்துகளை நிறுத்தி நமக்கு சகவாழ்வு தரும் ஒரு அற்புத துணை உணவு தான் "நமது *சித்த சக்தி பொடி"*
தொடர்பு கொள்வீர்
ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம், திருப்பூர்,
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
தொடரும் -
ம. செந்தமிழன் அவர்கள் இனிப்பு நூல் பதிவு.
இனிப்பு தொடர் - பகுதி - 7 ஐ கீழ்காணும் இணைவில் காணலாம்
https://kavimalaravan.blogspot.in/2018/05/7.html?m=0
இனிப்பு தொடர் - பகுதி - 7 ஐ கீழ்காணும் இணைவில் காணலாம்
https://kavimalaravan.blogspot.in/2018/05/7.html?m=0
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூடன் இணையுங்கள்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவி-டமிருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment