Friday, November 16, 2018

TNPSC | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


இந்தியாவில் முதல் முறையாக முன்னெச்சரிக்கை தகவல் பரப்பு மையம்...!!


TNPSC | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🍀 ஆந்திரப் பிரதேசம் மாநிலமானது நீதித்துறை அமைப்பிற்கு உதவுவதற்காக, மாநில தலைநகரான அமராவதியில், உலகத் தரம் வாய்ந்த, இந்தியாவின் முதலாவது நீதி நகரை கட்டமைத்து வருகிறது.

🍀 வண்ணமயமான விண்மீன் திரள்கள் கூட்டத்தின் மத்தியில் சிரித்த முகம் கொண்ட உருவத்தை, நாசா அனுப்பிய ஹப்பிள் தொலை நோக்கி படம் பிடித்து உள்ளது.

🍀 முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது. இந்தப் பொருட்காட்சி சீனாவில் இறக்குமதியை மையமாக கொண்டு நடத்தப்படும் முதலாவது தேசிய நிலை பொருட்காட்சியாகும்.

🍀 ஒன்பதரை ஆண்டுகளாக நமது சு+ரியக்குடும்பத்திற்கு வெளியில் உயிர் வாழ்வதற்கு உகந்த, ஏறத்தாழ 2600 கோள்களை கண்டறிந்த தொலைநோக்கியான 'கெப்ளர்" எரிபொருள் இன்றி செயலிழந்து உள்ளது. அதன் காரணமாக நாசாவானது கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

🍀 சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ருர்னு என்னும் நவீன தொழில் நுட்ப வீடியோவை ஒளிபரப்பி, நாசா சாதனை படைத்துள்ளது.

🍀 புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், தூய்மையான தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதற்கான, இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.

🍀 நாட்டில் முதல் முறையாக, இந்தியாவில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக, நதியில் படகு மூலம் சரக்கு எடுத்து செல்லும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

🍀 இந்தியாவில் முதன்முறையாக முன்னெச்சரிக்கை தகவல் பரப்பு மையத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

🍀 அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுமன்ற (Council of Scientific Industrial Research - CSIR) ஆராய்ச்சியாளர்கள் குறைவாக மாசு ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகளை உருவாக்கி உள்ளனர்.


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்


. அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

No comments:

Post a Comment