அன்பின் முகவரி தாய்
தாயின்
ஒரு சொட்டு கண்ணீரால்
கங்கை தூய்மையாகலாம்
தாயின்
ஒரு வார்த்தையால்
உலகம் சமாதானமாகலாம்
தாயின்
ஈர பார்வையால்
உலகில்
சம மழை பெய்யாலாம்
உள்ளத்தில் இருந்து
உதடுகள் வரை
ஊறும் இனிமை சொல்
தாய் 1
தாயை
வணங்குவதைவிட
போற்று
இல்லையேல்
சமுகம்
உன்னை தூற்றும்
காய்ச்சி
தழும் பேரிய கைகள்
உனக்கு தருவது
புண் அல்ல பொன்
ஆணி அறைந்த
அந்த பாதங்கள்
உனக்கு தருவதது
முற்அல்ல மலர்
தாயும் மெழுவர்த்தியும்
ஒன்று தான்
தன்னை அழித்து
பிறர்க்கு வெளிச்சம்
கொடுப்பார்கள்
தாயும் மழையும்
ஒன்று தான்
பலன் கருதாமல்
பலன் தருவார்கள்
,
தாயும் ஆனிச்சமும்
ஒன்று தான்
மகன் முகம் வாடினால்
அவள் வாடுவாள்
தாயும் நீரும்
ஒன்று தான்
நீர் பள்ளத்தை நோக்கி
தாய் பாசத்தை நோக்கி
தாயும் புத்தகமும்
ஒன்று தான்
எப்போதுமே
பாதுகாக்க வேண்டும்
தாயும் காதலியும்
வெவ்வேறானவர்கள்
காதலியிடம்
கெஞ்ச வேண்டும்
தாயிடம்
கொஞ்ச வேண்டும்
தாய்மையைப் பற்றி
உன் மகனுக்கு
சொல்லி கொடு
அவன் அவன் மகனுக்கு
சொல்லிக் கொடுப்பான்
மீறினால்
அறுந்து போன
வாழ்க்கை பாதையில்
மனித நேயத்தை தேடி
அலைதல் மட்டுமே
மிஞ்சும்
கவிமுகிலன் -அரூர்- தருமபுரி
No comments:
Post a Comment