Tuesday, November 13, 2018

17 சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 17

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 17.

மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உண்ணப்படும் ஓட்ஸ் எனும் உணவுப் பயிரில், 12 கிராம் தான் மாவுச்சத்து உள்ளது. இப்போது சிந்தித்து பாருங்கள். உணவில் வெறும் 12 கிராம் மட்டுமே உள்ள மாவுச் சத்துள்ள உணவை உட்கொள்பவருக்கும், 79 கிராம் மாவுச்சத்துள்ள அரிசியை உண்பவருக்கும் ஒரே அளவில் தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்பது சாத்தியமா? ஆனால், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறது அலோபதியின் "அறிவியல் "

மேற்கண்ட கணக்குகூட பொத்தாம் பொதுவானதுதான், உணவுப் பயிரில் உள்ள சத்துக்களை மட்டுமே வைத்து உணவின் தன்மையை அளவிடுவதும் அரைகுறையானது தான். அந்த உணவு எவ்வாறு சமைக்கப்படுகிறது, உணவு உண்ணப்படும் அளவு, உண்ணப்படும் நேரம், உண்ணும் போது சாப்பிடுபவரின் மனநிலை, உடல் நிலை, சூழல் உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் சேர்ந்து தான் உடலில் சத்தாகவும் கழிவாகவும் மாறுகின்றன.

உதாரணமாக மேல் கண்ட அதே மூன்று உணவுப் பயிர்களும் சமைத்த பின்னர் மாவுச்சத்து அளவில் மாறுபாடு அடைகின்றன.

அரிசி (சோறு)- 23
சமைத்த கம்பு-41
சமைத்த கோதுமை-26

இன்னும் துல்லியமாக கணக்கிட வேண்டுமானால் என்ன சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும், எப்படி சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும்,.அரிசியை பொறுத்தவரையில், ஒவ்வொரு வகை அரிசியும் ஒவ்வொரு தன்மை கொண்டது. எல்லா அரிசியும் ஒரே அளவிலான சத்துப் பொருட்களை கொண்டு இருப்பது இல்லை. சிகப்பரிசியில் வெறும் 42 கிராம் தான் மாவுச்சத்துள்ளது.

சில வகை உணவுப் பயிர்களிலேயே, இவ்வளவு மாறுபாடுகள் இருக்கும் போது, ஆயிரக்கனக்கான சமையல் பொருட்கள் உள்ளனவே, அவற்றில் எல்லாம் எவ்வளவு வேறு பாடுகள் இருக்கும். இயற்கையில் எதுவுமே நகல் எடுக்க படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாக படைக்கப்படுகிறது. அலோபதியோ, 12 கிராம் மாவுச்சத்து உள்ள ஓட்ஸ் மானியத்தை உண்பவர்களுக்கும், 79 கிராம் மாவுச் சத்து உள்ள அரிசியை உண்பவர்களுக்கும் ஒரே அளவில் தான் சர்க்கரை அளவு இருக்க வேண்டும் என்கிறது.

*இது அலோபதியின் அறியாமை அல்ல சூது*

*நோயளிகளின் எண்ணிக்கையை பெருக்கி, கொள்ளையடிப்பதற்கான, எளிய வழிமுறைகள் தான் இவ்வாறான '' ஆய்வு அறிக்கைகள்"எல்லாம். நடைமுறையில் சாத்தியம் குறைவான அளவீடுகளை வைத்துக் கொண்டு, சமூககத்தின் பெரும் பகுதி மக்களை நோயாளிகள் என அறிவித்து விடுவது அலோபதியின் சூது. மக்களுக்கு இது தெரியாது, மக்களை பொறுத்தவரை," இரத்த பரிசோதனையிலேயே சர்க்கரை அளவு அதிகம் என தெரிந்து விட்டது "என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள், ஆனால், அந்த அளவு தான் என்ன?, அதன் அடிப்படை என்ன? என எவரும் கேட்பதில்லை.

உண்மையின் ஒளி மட்டுமே இருளில் வழிகாட்டும். உண்மையே ஒளி, உண்மையே கடவுள், உண்மையை அறியாமல், உணராமல் எந்த தீர்வையும் அடைய முடியாது. சர்க்கரை நோய் குறித்த அச்சம், பீதி உங்கள் மனதில் இருளாக படித்திருந்தால், அந்த இருளை நீக்கும் படி அலோபதி மருத்துவர்களிடமே சரணடைந்தால் இருள் நீளுமே தவிர விலகாது. ஏனெனில், அந்த இருளை உருவாக்கி வைத்தவர்களே அவர்கள் தான். நாட்டில் பெரும் பாலான மக்கள் இவ்வாறு தான் *"சர்க்கரை நோயாளிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்"

மேலும் நாளை பார்க்கலாம்...........


ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை & யோகா ஆராய்ச்சி மையம், அனுப்பர்பாளையம் திருப்பூர்

சர்கரை நோய் குறித்த முந்தைய பதிவுகளைக்காண Www.kavimalaravan.blogspot.in என்ற இணையத்தள இனைப்பை சொடுக்கவும்  (கிளிக்).

முடக்குவாதம் ருமட்டிக் ஆர்த்ரைடிஸ் பக்கவாதம் தீர ...
என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்






No comments:

Post a Comment