Tuesday, November 13, 2018

TNPSC | எந்த துறைக்கு நோபல் பரிசு வழக்கப்பட மாட்டாது...!!


TNPSC

எந்த துறைக்கு நோபல் பரிசு வழக்கப்பட மாட்டாது...!!




  • காற்று மாசு: முதலிடம் பிடித்த உத்திரபிரதேச மாநிலம்


🍀 உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில், இந்தியாவில் லக்னோ நகரம் முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
🍀 உலக சுகாதார அமைப்பான(WHO) உலக அளவில் காற்று மாசு அதிகம் பதிவாகும் 4200 நகரங்களை கடந்த 2016-ம் ஆண்டு முதல் கண்காணித்து வருகிறது.
🍀 இந்தியாவில் லக்னோ, பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டில்லி, ஆக்ரா, முசாபபூர், ஸ்ரீநகர், குர்கான், ஜோத்பூர், பாடியாலா உள்ளிட்ட 13 பெரிய நகரங்கள் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 
🍀 உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ நகரம், அதிக பாதிப்பு உள்ள நகரமாக அறிவித்துள்ளது.


இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது - ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு.


🍀 இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.
🍀 இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
🍀 இதையடுத்து, இந்தாண்டு வழங்கப்பட இருந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தாண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.


🍀 இந்த உயரிய விருது இதற்கு முன் உலகப்போர் காரணமாக 1940 முதல் 1943 வரை வழங்கப்படாமல் இருந்தது. 


No comments:

Post a Comment