Wednesday, November 28, 2018

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம்...!

🌟 இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே நடைபெற உள்ளது.

🌟 இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சு+ரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் 'INS ராணா" என்ற கப்பல் பங்குபெற்றது.

🌟 சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (sinhuva) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, றுரணாநn மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

🌟 இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.

🌟 இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி, 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.


🌟 நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லு}சி திட்டத்தின் மூலம் வியாழனின் 'ட்ரோஜன்" என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

🌟 புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது. இது சென்னையில் உள்ள தேசிய காற்று சக்திக்கான நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

🌟 ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா - ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா - 2018 (Exercise INDRA-2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் (Babina Military Station) நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி, இந்த்ரா பயிற்சி, வரிசையில் பத்தாவது பயிற்சி இதுவாகும். இரஷ்யா கூட்டமைப்பின் ஐந்தாவது இராணுவப் படைப் பிரிவும், இந்தியாவின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

🌟 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற kavimalaravan.blogspot.com




  • த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

No comments:

Post a Comment