Friday, November 2, 2018

காபி குடிப்பது நல்லதா, கெட்டதா?

காபி குடிப்பது நல்லதா, கெட்டதா?


நீங்கள் காட்டில்
நடந்து கொண்டிருக்கிறீர்கள். 
எதிரே ஒரு சிங்கம் வருகிறது.

உங்கள் உடலில் அபாய எச்சரிக்கை மணியை
அடிக்கிறது. 

உடனே அட்ரினலின்,
கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ்
ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. 

ஏதாவது அவசர நிலை ஏற்படும் போது உடல் தன்னை தானே தற்காத்துக் கொள்ள இந்த
ஹார்மோன்கள் சுரக்கும்.

இப்போது சிங்கத்திடமிருந்து  காப்பற்றிக் கொள்ள ஓட வேண்டும் எனும் நிலைகளுக்கு இந்த
ஹார்மோன்கள் உங்களை தயார் படுத்துகின்றன. 

ஓடும்போது இதயத்துக்கு
நிறைய ரத்தம் வேண்டும். 

அதனால் உங்கள்
இதயம் அதிவேகத்தில் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. 

பிளட் பிரஷர் அதிகரிக்கிறது.
கொஞ்ச, நஞ்சம் இருந்த அசதியும் விடைபெறுகிறது. 

உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. சிங்கம்
உங்களைத்  துரத்துகிறது. 

நீங்கள் தாவி ஓடி
மரத்தின் மேல் ஏறி தப்புகி்ன்றீர்கள். 

சிங்கம் ஏமாற்றத்துடன் அகன்று விடுகிறது.

பிறகு மரத்திலிருந்து கீழே இறங்குகிறீர்கள்.

அட்ரினலின், கார்ட்டிசோல் சுரப்புகளின் அளவுகள்
குறைகின்றன. 

இதயதுடிப்பு நார்மலுக்கு வருகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது.

இப்போது காலையில் எழுந்து ஒரு கப் காப்பியை குடிக்கிறீர்கள். 

உடனே அது உங்கள் உடலில் அட்ரினலின், கார்ட்டிசோல்
எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களையும் சுரக்க வைக்கிறது. 

நீங்கள்
சிங்கத்தை கண்டு பயப்பட்டபோது உங்கள்
உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும்
இப்போதும் நிகழ்கின்றன. 

உடல் மிகபெரும்
ஓட்டம் அல்லது போருக்கு தயார் ஆகையில்
நீங்கள் இது இரண்டையும் செய்யாமல்
நியூஸ்ப்பேப்பர் படிக்கிறீர்கள் அல்லது டிவி பார்க்கின்றீர்கள்.

காபியில் உள்ள கபைனின் காரணமாக உங்கள் இதயம்
அதிவேகத்தில் ரத்ததை பம்ப் செய்கிறது.

ஆனால் அதுக்கு எந்த பலனும் இல்லை.

நீங்கள் அடுத்து மெதுவாக குளிக்க செல்கிறீர்கள்.

ஆக ஒரு சிங்கத்தை கண்டால் உருவாகும் மன அழுத்தம் ஒரு காபியை குடிப்பதால் உருவாகிறது.

அத்துடன் நிற்கிறதா? இல்லை. 

அடுத்து 10
மணிக்கு இன்னொரு காபி. உடல் மீண்டும்
சிங்கத்தை கண்ட அதிர்ச்சியில் போருக்கு
தயார் ஆகிறது. 

ஆனால் இப்பவும்
சிங்கத்தை காணோம். 

நீங்கள் ஆபிஸில்
பைலை பார்த்தபடி காபி 
குடிக்கிறீர்கள்

இப்படி ஒரு நாளைக்கு நாலைந்து தடவை
சிங்கத்தை தரிசனம் செய்யும்
அளவு அதிர்ச்சியை உடலுக்கு
கொடுத்தால் என்ன ஆகும்?

மன அழுத்தம், டிப்ரஷன், பிளட்பிரஷர், விரைவில் வயது ஆவது, உடல் உள்ளுறுப்புகள் தளர்வது, மாரடைப்பு என
அனைத்தும் மன அழுத்தத்தால் வரும். 

முடி கொட்டும், முடி விரைவில் நரைக்கும், கண் பார்வை மங்கும். இளவயதில் முதுமை
அடைவோம்.

போதாகுறைக்கு பெப்சி,கோக்கில் கூட இப்போது கபின் சேர்க்கபடுகிறது. 

காபி சுவை உள்ள மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் கூட
வருகின்றன. 

நம் உடலுக்கு பலத்த மன
அழுத்தத்தை இவைகள் அனைத்தும் உருவாக்கும்.

காபி என்பது புத்துணர்வு அளிக்கும்
பானமல்ல. உடலுக்கு
அதிர்ச்சி அளிக்கும் பானம்.

தினம் 4 காப்பி குடிப்பது, பீடி சிகரெட் பிடிப்பது போல் ஒரு அடிக்ஷன் ஆகும்.  இந்த காபி தேவையா என இப்பொழுது முடிவு செய்யுங்கள். அதை விட்டு தொலைப்பது தான் ஒரே வழி.

நோய்கள் என்றால் என்ன?
என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.


சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?....

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/blog-post_51.html?m=0


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்





No comments:

Post a Comment