Friday, November 30, 2018

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!


👏🏼பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.

👏🏼சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

👏🏼கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.

👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

👏🏼ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

👏🏼இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

👏🏼அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

👏🏼தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

👏🏼வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.

👏🏼ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

👏🏼குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
நன்றி:
ம.கிருஷ்ணமூர்த்தி,
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்,
கல்பாக்கம்.

தமிழ் சொல்லறிவோம்

தமிழ் சொல்லறிவோம்


1. உடன்று- வருந்தி
2.முனியாது- வெறுக்காது
3.முளி இலை- காய்ந்த இலை
4.கோடு- கொம்பு
5. துய்- பஞ்சு

1.ஞெமுங்க-அழுந்த
2.கையற-செயலற
3.நிவப்பு- உயர்வு
4.வெதிரம்-மூங்கில்
5.அள்ளல்-சேறு


1.கரப்ப- மறைய
2.மதர்வு- செம்மாப்பு
3.செயிர்-குற்றம்
4.பைதல்- வருத்தம்
5.விறல்- வெற்றி


1.அர்த்தம்- பொருள்
2.அபிமானம்- பற்று
3.அர்ப்பணம்-காணிக்கை
4.அவசரம்- விரைவு
5.அனுசரித்தல்- பின்பற்றல்


1.பிணி- மொட்டு
2.தாதுண் பறவை-வண்டு
3.பேதுறல்- மயக்கமுறல்
4.அவல்-பள்ளம்
5.பிணையல்-மாலை
கவிஞர் சொ.கலைச்செல்வி

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER - 29 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER -  29

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!




கூல் என பெயரிடப்பட்டுள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டம்...!!
...!! 

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆசிரியர்களுக்கு இணையதளத்தில் தொழில்சார் மேம்பாட்டை அளிப்பதற்காக 'கல்வியாளர்களுக்கான தலைமைத்துவத் திட்டம்" மற்றும் 'உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் வருடாந்திரப் புத்துணர்ச்சிவூட்டல்" ஆகிய இரண்டு புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

🍀 1943ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிடப்போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

🍀 ஆந்திராவில் நகரி பகுதியில் ரூ. 4-க்கு உணவளிக்கும் 'நடமாடும் ஒய் எஸ் அண்ணா" உணவகத்தை, நடிகை ரோஜா துவக்கி வைத்தார்.

🍀 தெலுங்கானாவின் ஐதராபாத்தில், ராமானுஜருக்கு உயரம் 302 அடி, சிலை உயரம் 216 அடியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

🍀 இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (IITF - India International Trade Fair) 38வது பதிப்பு புதுடெல்லியில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவால் தொடங்கப்பட்டுள்ளது.!


🍀 ஆசிரியர் பயிற்சியை, 'ஆன் லைன்" எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், 'கூல்" என பெயரிடப்பட்டுள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

🍀 உலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட, ஆடம்பர ஓட்டல் இயங்க தொடங்கியுள்ளது.

🍀 சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன், 100 மில்லியன் டிகிரி வெப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

🍀 குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையை, விண்ணில் இருந்து புகைப்படம் எடுத்து அமெரிக்க நிறுவனம் 'ஸ்கை லேப்" வெளியிட்டுள்ளது.

🍀 நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லூசி திட்டத்தின் மூலம், வியாழனின் 'ட்ரோஜன்" என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil தகல்களைப்பெற Kavimalaravan.blogspot.com 
வலைப்பூவை தொடரவும்...

Thursday, November 29, 2018

TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் -2018

TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் -2018



இந்த ஆண்டிற்கான சிறந்த சொல் எது?

🍀 இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை (ஐளுகு - ஐகெழளலள ளுஉநைnஉந குழரனெயவழைn) தனது 10-வது ஆண்டு விழாவில், இன்போசிஸ் பரிசு 2018-க்கான ஆறு வெற்றியாளர்களை வெவ்வேறு பிரிவுகளில் அறிவித்துள்ளது.

🍀 பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் சர்வதேச வேளாண் கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

🍀 புது டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச (ஐபுஐ ஐனெசைய புயனொi ஐவெநசயெவழையெட) விமான நிலையத்தில், சுற்றுலா எளிதாக்கல் மற்றும் தகவல் மையத்தை மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மு.து. அல்போன்ஸ் திறந்து வைத்தார்.

🍀 உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.

🍀 விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.

வுNPளுஊ குரூப்-2 தேர்விற்கு முழு நேரமும் பயிற்சி செய்பவரா நீங்கள்?

பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை, கிராம நிர்வாகம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் படி மிக துல்லியமாக தொகுக்கப்பட்ட 10 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!

ரூ. 289 மதிப்புள்ள ஏயுழு மற்றும் குரூப் 4
தேர்வுக்கான பயிற்சிப் புத்தகம்
50மூ சலுகை விலையில் ரூ. 145 மட்டுமே
+ ளுர்ஐPPஐNபு ஊர்யுசுபுநு நுஓவுசுயு.
இந்த புத்தகங்களை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

🍀 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

🍀 சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (Nஊனுஊ - யேவழையெட ஊழழிநசயவiஎந னுநஎநடழிஅநவெ ஊழசிழசயவழைn) 'யுவ சஹhகர்" என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது.

🍀 பிரிட்டன் நாட்டு மந்திரிசபையில் கருத்து வேற்றுமையால் பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராக் ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு ஸ்டீபன் பார்க்லே-வை பிரதமர் தெரசா மே தேர்வு செய்துள்ளார். 

🍀 பாலியல் வல்லுறவு வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக, நிர்பயா நிதியைக் கொண்டு 1023 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

Wednesday, November 28, 2018

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27, 2018


  1. TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27, 2018



🍀 இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம்!!
🍀 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரிதர் மால்வியா நியமனம்!!!
🍀 நிலக்கரி துறை செயலராக சுமந்தா சௌத்ரி!!!
🍀 விமான நிலையத்தில் நவீன காவல் நிலையம்!!
🍀 காசநோயாளிகளுக்கான புதிய செயலி அறிமுகம்!!
🍀 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சூரிய ஒளி திட்டம்!!!
🍀

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

TNPSC - CURRENT AFFAIRS 2018/NOVEMBER

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம்...!

🌟 இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே நடைபெற உள்ளது.

🌟 இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சு+ரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் 'INS ராணா" என்ற கப்பல் பங்குபெற்றது.

🌟 சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (sinhuva) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, றுரணாநn மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

🌟 இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.

🌟 இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி, 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.


🌟 நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லு}சி திட்டத்தின் மூலம் வியாழனின் 'ட்ரோஜன்" என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

🌟 புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது. இது சென்னையில் உள்ள தேசிய காற்று சக்திக்கான நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

🌟 ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா - ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா - 2018 (Exercise INDRA-2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் (Babina Military Station) நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி, இந்த்ரா பயிற்சி, வரிசையில் பத்தாவது பயிற்சி இதுவாகும். இரஷ்யா கூட்டமைப்பின் ஐந்தாவது இராணுவப் படைப் பிரிவும், இந்தியாவின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

🌟 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற kavimalaravan.blogspot.com




  • த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

Tuesday, November 27, 2018

இரும்புத்திரை படத்தில் வரும் தகவல் திருட்டு என்பது சாத்தியமா?

இரும்புத்திரை படத்தில் வரும்
தகவல் திருட்டு என்பது சாத்தியமா?

##HACKING/ETHICAL HACKING/


####UGC-NET ADMIT CARD-2018/DECEMBER

#UGC-NET #ADMIT CARD-2018/DECEMBER




Click here to Download UGC NET Hall-ticket 











த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


Monday, November 26, 2018

##News-7 ன் கதைகளின் கதை | #இஸ்ரோவின் கதை

#News-7 ன் கதைகளின் கதை |#இஸ்ரோவின் கதை



பூசணிக்காய் மருத்துவ தன்மை

பூசணிக்காய் மருத்துவ தன்மை






#வெற்றியின் #இரகசியம் என்ன? #ஒரு குட்டிக்கதை

#வெற்றியின் #இரகசியம் என்ன? #ஒரு குட்டிக்கதை


x

Sunday, November 25, 2018

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...


 நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

 மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 இயற்கையின் மருத்துவம்:

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

 முடி உதிர்தல்:

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

 நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

 காது வலி:

 காது வலிக்கு  வில்வ  இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.

உடல் சோர்வு:

வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.

 வாய் புற்றுநோய்:

இந்த வில்வ இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள வேதி பொருட்கள் நம் வாயில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது வாய் நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.

மேலும் சில நன்மைகள்:

வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.
இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.
மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

###முதுகு வலியும், மருத்துவமும்!! மருத்துவ டிப்ஸ...

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்







Friday, November 23, 2018

###முதுகு வலியும், மருத்துவமும்!! மருத்துவ டிப்ஸ்,|#Back_Pain and Natural_Medicine

###முதுகு_வலியும், மருத்துவமும்!!
 மருத்துவ டிப்ஸ்,|#Back_Pain and Natural Medicine


இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப்  வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.
அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.

காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.

• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.

• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.

• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேத அனுபவம்

முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.

முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.

ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:

1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.



#மருந்துகளின் பக்கவிளைவுகளை அறிய வேண்டுமா? |#Side_effects of #Science_Medicine


என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.


#மகளிர்_மருத்துவம் | #WOMENS | திருமணத்துக்குப்பின் வரூம் பிரச்சினை 


பிளட் பிரசர் பிளட் சுகர் தீர மருத்துவம் -2

இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


TNPSC முக்கிய நடப்பு நிகழ்வுள் (CURRENT AFFAIRS முக்கிய நடப்பு நிகழ்வுகள்


TNPSC முக்கிய நடப்பு நிகழ்வுள் 
(CURRENT AFFAIRS)
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கடந்த ஓராண்டில் மட்டும், 25 ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

🍀 இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில், ரஷியா, சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இணைய கிரிமினல்கள், இந்தியாவில் உள்ள பயனாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை 4.36 லட்சமாக இருக்கிறது என்று இணைய பாதுகாப்பை மையப்படுத்தி செயல்படும் நிறுவனமான எஃப் செக்யு+ர் அறிவித்துள்ளது.

🍀 மனித மூளை செயல்படுவதைப் போன்றே செயலாற்றக் கூடிய, உலகின் மிகப்பெரிய சு+ப்பர் கம்ப்யு+ட்டர் பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.

🍀 ஜோன்னஸ் ஜேன்க் என்ற இளைஞர், ஆஸ்திரியாவில் இரு மலைகளுக்கு நடுவே ஏணி மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

🍀 சீனாவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, சிங்கிள்ஸ் டே விற்பனை மூலம், ஒரே நாளில், 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது.

வுNPளுஊ குரூப்-2 தேர்விற்கு முழு நேரமும் பயிற்சி செய்பவரா நீங்கள்?

பொது தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை, கிராம நிர்வாகம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் படி மிக துல்லியமாக தொகுக்கப்பட்ட 10 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!

ரூ. 289 மதிப்புள்ள ஏயுழு மற்றும் குரூப் 4
தேர்வுக்கான பயிற்சிப் புத்தகம்

50மூ சலுகை விலையில் ரூ. 145 மட்டுமே
+ ளுர்ஐPPஐNபு ஊர்யுசுபுநு நுஓவுசுயு.
இந்த புத்தகங்களை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

🍀 ஆப்பிரிக்காவின் மலாவியில் 'ஜெய்ப்பு+ர் காலணி" முகாமை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

🍀 முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் குமார் குப்தா, இந்திய போட்டி ஆணையத்தின்(ஊஊஐ)தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 ஆந்திரப் பிரதேசத்தில் விஜயநகர மாவட்டத்தின், ரல்லி கிராமத்தில், பழங்குடி பல்கலைக்கழகம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🍀 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பக காவல் நிலையத்தில், கிரைம் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் என்ற பிரிவில், தலைமை காவலராக பணியாற்றி வரும் டெய்ஸி என்பவருக்கு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறப்பு புலனாய்வு காவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

🍀 எல்ரூடியின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் புதிய ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் வராஹோ அறிமுகப்படுத்தப்பட்டது.

Thursday, November 22, 2018

மருந்துகளின் பக்கவிளைவுகளை அறிய வேண்டுமா?

மருந்துகளின் பக்கவிளைவுகளை அறிய வேண்டுமா?



TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018

TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018


பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு...!!
தமிழக வனத்துறை தேர்வு, 2018

🍀 ஆங்கில உச்சரிப்பில் இருந்து வந்த ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பில் அழைக்கும் வகையில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

🍀 புதுதில்லி மாநகராட்சி கழகம் நுகர்வோர்கள், தங்கள் பயன்பாட்டு கட்டண ரசீதுகளின் எண்ணியல் செலுத்து வசதியை எளிதாக்கிட, உடனடி பதில் குறியீடு பொருத்தப்பட்ட ஸ்மைலி குளிர்சாதன வசதி கொண்ட காந்தங்களை விநியோகம் செய்ய இருக்கின்றது.

🍀 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு, பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU- International Telecommunications Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

🍀 ஒடிசாவில் மகாநதி, ப்ரஹ்மானி, பாய்தாரிணி மற்றும் ருசியகுலா ஆகிய நதிகளின் இரு கரைகளிலும், பசுமைத் தோட்டங்கள் அமைப்பதற்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

🍀 நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளில், வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

🍀 சுற்றுச்சு+ழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கூறுகளைக் கொண்ட சு+ரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்குத் தடை விதித்த (sunscreen products, உலகின் முதலாவது நாடாக, தென் பசிபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.

🍀 ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த, ஹிஜிகி இக்குயாமா என்ற ஸ்கிப்பிங் வீரர், 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து, உலக சாதனை படைத்தார். அத்துடன் அவர் முந்தைய ஸ்கிப்பிங் (22) சாதனையை முறியடித்தார்.

🍀 இங்கிலாந்தின் மேற்கு நிலப் பகுதியில் உள்ள ஸ்மெத்விக் நகரத்தில், முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய சிப்பாய்களை கௌரவப்படுத்துவதற்காக, மிகப்பெரும் யுத்தச் சிங்கங்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

🍀 கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கும், காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதி அலோக் அராதே கர்நாடக ஐகோர்ட்டுக்கும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிந்தால், காஷ்மீர் மாநில ஐகோர்ட்டுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

🍀 சீனா தனது சொந்த புவிக்கோள இருப்பறியும் அமைப்பை கட்டமைப்பதன் ஒரு படியாக, இரண்டு கள இயக்க செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.


Wednesday, November 21, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி-19 | Ways to Invite someone

ஆங்கிலமும் கற்போம் பகுதி-19|

Ways to Invite someone



Ways to Invite someone:

1. Do you want to grab coffee/a drink some time?

2. Do you want to go for a bike ride one day?

3. We should go check out that new store some time.

4. Do you want to meet up to work out together one day?

5. What days are you usually free? Want to hang out sometime?

6. We should get together outside of this class some time.

7. My friends and I are going out on Saturday. We'd be happy to have you along.

8. We've both been busy this month. I'm free next week. Want to come over to my place?

9. Want to carpool to the party? You can leave your car at my place, we can share a cab.

10. Oh no, I forgot the book you lent me at home! Want to stop by this weekend to get it?

11. Oh, you'd love my dog. You should come over and meet him sometime.


ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் ! | ஷஷ்டி விரதம்

ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !

ஷஷ்டி விரதம்
(08.11.18 முதல் 13.11.18)


வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

1 - செரிமான சக்தி
2 - இயக்க சக்தி
3 - நோய் எதிர்ப்பு சக்தி


இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?*
-------------------------------------------------------

1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
2 - சமய முறைப்படி இருக்கலாம்.
3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.

பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.

இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.

திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.

வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம் ?
----------------------------------------------

ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.

1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.2 - மலம் கருப்பாக வெளியேறலாம்.3 - சளி வெளியேறலாம்.4 - உடல் ஓய்வு கேட்கலாம்.5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)6 - வலிகளை உணரலாம்.


என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?
------------------------------------------

1 - அதிக உடல் எடை சீராகும்
2 - முகம் பொழிவு பெறும்
3 - கண்ணில் ஒளி வீசும்
4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்
5 - இரத்தம் தூய்மை பெறும்
6 - தோலின் நிறம் சீராகும்
7 - மன உளைச்சல் குறையும்
8 - கவலை, பயம், கோபம் குறையும்
9 - புத்துணர்வு கிடைக்கும்
10 - உடல் பலம் பெறும்
11 - மன அமைதி பெறும்
12 - ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில்

  • உடலில் ஆரோக்கியமும் !
  • எண்ணத்தில் அழகும் !
  • மனதில் நிம்மதியும்

கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.

கந்தன், அரக்கனை அழிப்பது போல்
உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

நமppது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
..
உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.

உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்னாநோன்பு.

உண்ணாநோன்பு இருப்போம்
ஆரோக்கியமாக வாழ்வோம்...


மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்...

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
பிளட் பிரசர் பிளட் சுகர் தீர மருத்துவம் -2


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்