கருப்பையில்/சிணைபையில்
நீர்க்கட்டிகள் PCOD - பகுதி - 2.
நீர்கட்டிகள் என்கிற பாலிசிஸ்டிக் ஓவரிஸ் (PCOS) பற்றிய விளக்கங்களையும், அதற்கான காரணங்களையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
நீர்கட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில நோய்க்குறிகள் இருக்கும்.
1. முறையற்ற மாதவிடாய் மற்றும் கருமுட்டை கோளாறுகள்.
2. கருப்பை நார் கட்டிகள் மற்றும் சினைப்பை நீர்கட்டிகள்.
3. இன்சுலின் சுரப்பில் குறைபாடு மற்றும் உடல் பருமன்.
4. உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சி.
5. தோல் வியாதிகள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறைபாடுகளை சீன மருத்துவம் எவ்வாறு அணுகுகிறது மற்றும் அதற்கான சிகிச்சை முறை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மேலே குறிப்பி்டப்பட்டுள்ள
குறைபாடுகள் அனைத்தும் சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல் ஆகிய மூன்று உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது.
1. சிறுநீரகம்.
முறையற்ற மாதவிடாய் மற்றும் கருமுட்டை கோளாறு, கர்ப்பப்பை நார் கட்டிகள், சினைப்பை நீர்கட்டிகள், மரபனு கோளாறு ஆகியவை சிறுநீரகத்தின் சக்தி குறைபாடால் உருவாகும் நோய்களாகும்.
2. மண்ணீரல்.
மண்ணீரல் இயக்க சக்தியில் கோளாறு ஏற்படும் போது உணவில் உள்ள வைட்டமின், மினரல் சத்துக்களை ஜீரணிப்பதில் தடை ஏற்பட்டு் இன்சுலின் சுரப்பில் குறைபாடு உண்டாகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏற்றத்தாழ்வில் இருக்கும். அதனால் தான் ஆங்கில மருத்துவத்தில் நீர்கட்டிகள் கோளாறுகளுக்கு நீரிழிவு நோயளிகளுக்கு கொடுக்கப்படும் Metformin மாத்திரை கொடுப்படுகிறது.
மேலும் மண்ணீரல் இயக்க சக்தியில் குறைபாடு உண்டாகும் போது உடலில் நீர் சத்துக்கள் ஜீரணிப்பதிலும் கோளாறுகள் ஏற்படும். (Water Metabolism).
இதனால் கெட்ட நீர் தேங்கி உடல் குண்டாகும். நீர்கட்டி உள்ள பெரும்பாலான பெண்கள் உடல் பருமனாக தோன்றுவதற்கு இதுதான் காரணமாகும்.
3. கல்லீரல்.
கல்லீரல் இயக்க குறைவில் கோளாறுகள் ஏற்படும் போது உடலில் ஹார்மோன்கள் ஏற்தத் தாழ்வுகளையும், இரத்த ஓட்டத்தில் தடையையும், இரத்தத்தில் உஷ்ணத்தையும் உண்டாக்குகிறது. இரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்படும் போது அரிப்பு, எரிச்சல், தோல் நிறம் மாறுதல் போன்ற தோல் வியாதிகளை தோற்றுவிக்கின்றது. மேலும் ஆங்காங்கு ஏற்படும் இரத்த தேக்கமானது தோல்களுக்கு அடியில் உள்ள மயிர்கால்களை (Hair Follicles) அதிகமாக தூண்டி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் தான் நீர்கட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் அதிக முடி வளர்ச்சியும், ஆண்களைப் போல் முகத்தில் மீசை தாடியும் வளர்கிறது.
எனவே சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல் ஆகிய உருப்புக்களின் முறையற்ற இயக்கமே நீர்கட்டிகள் தோன்றுவதற்கும் மற்றும் அது சார்ந்த நோய்கள் உண்டாவதற்கும் காரணமாகிறது என்று பார்த்தோம்.
இந்த மூன்று உருப்புகளும் சரியாக இயக்கம் கொள்ளும் போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக சரியாகிவிடும்.
அந்த மூன்று உறுப்புக்களையும் எவ்வாறு மருந்து, மாத்திரை இல்லாமல் சீன அக்குங்சர் முறையில் சிகிச்சையளித்து நன்முறையில் இயங்கவைப்பது என்று கற்றுக் கொள்ள இருக்கின்றீர்கள்.
இரண்டே அக்குபங்சர் புள்ளிகளைக் கொண்டு சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புக்களையும் நன்முறையில் இயங்க வைக்கலாம். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லாமல் உங்களுக்கு நீங்களே மருத்துவராக குணப்படுத்துத்திக் கொள்ள போகின்றீர்கள்.
அந்த இரண்டு புள்ளிகள் எது? அதை எவ்வாறு தூண்டி அந்த உருப்புகளுக்கு சக்தியளித்து நன்முறையில் செயல்பட வைப்பது என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நன்றி.
Dr. Gouse, MD (Acu.,Tcm)., Singapore.
https://kavimalaravan.blogspot.com/2018/04/pcod.html?m=1
கருப்பையில்/சிணைபையில்
நீர்க்கட்டிகள் PCOD - பகுதி - 1
என்னும் பதிவைக்கான கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்)
No comments:
Post a Comment