TNPSC TAMIL -
இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
தேர்வில் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.
மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும்.
1. நாற்படை - தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்ப்படை
2. பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
3. ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
4. ஐஞ்சிறுங்காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம்
5. ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
6. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
7. ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
8. ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
9. ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
10. பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
11. சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
12. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
13. பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
14. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
15. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
No comments:
Post a Comment