Pages

Monday, April 23, 2018

கருப்பையில் /சினைப்பையில் நீர்க்கட்டிகள் PCOD

கருப்பையில் /சினைப்பையில்  நீர்க்கட்டிகள் PCOD



நீர்க்கட்டி என்பது பெண்களுக்கு சினைப்பையில் ஏற்படும் ஓர் கோளாறாகும்.  இது Poly Cystic Ovary Syndrome  அல்லது PCOD என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. 

நீர் நிரம்பிய பல சிறிய கட்டிகள் (Cysts) சினைப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரி சின்ரோம் எனப்படுகிறது.

இந்த நீர்க்கட்டிகள் குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது. 

எவ்வாறு இந்த குறைபாடு ஏற்படுகிறது என காரணம் கண்டுபிடிக்கப்பட வில்லை என ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தற்போது  ஏராலமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாகிவிட்டன.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு இந்த நீர்கட்டித் தான் காரணம் என்று சொல்வார்கள். அவ்வாறு இல்லை.  மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்ட பிறகுதான் நீர்க்கட்டிகள் உண்டாகும். 

பொதுவாக முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ??

மேலும் ஆன்றோஜென் ஹார்மோன் அதிகரிப்பின் காரணமாக பெண்களுக்கு மீசை, தாடி போல் முடிகள் வளர ஆரம்பிக்கும். பருக்கள் அதிகமாகும், மார்பகங்கள் சிறுத்து போகும்.

நீர்கட்டிகள் எவ்வாறு உருவாகின்றது?

பொதுவாக ஜீரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமாவது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

நாம் உண்ணும் உணவு ஜீரணமாகுவது போல், குடிக்கும் நீர்ம வகைகளும்  ஜீரணிக்கப்பட வேண்டும். (Water Metabolism).


நாம் உட்கொள்ளும் தண்ணீர் வகைகள் முறையாக ஜீரணிக்கப்பட்டு பிறகு உடல் தேவைகளுக்காகவும்,  கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும், நமது அனைத்து  செல்களுக்கும், திசுக்களுக்கும் முறையாக அனுப்பப்பட வேண்டும். (Distribution). 

நாம் குடிக்கும் நீர் முறையாக ஜீரணிப்படாததால்  அது நமது செல்களாலும், திசுக்களாலும் கிரகிக்கப்படாமல் நிராகரிக்க படுகிறது. அதனால் அந்த நீர் சிறு சிறு பைகளாக  சேகரமாகி பல உள் உறுப்புகளிலும், செல்களுக்கு இடையிலும் தேங்குகின்றன. இவைகள் தான் நீர்க்கட்டிகள் எனப்படுகிறது.

நீர்க்கட்டிகள் சினைப்பையில் மட்டும் தோன்றுவதில்லை. நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலால் முறையாக கிரகிக்கப்படாததால்
அந்த நீர்  தேங்கி சிறு சிறு பைகளாக மாறி சிறுநீரகம், நுரையீரல், போன்ற பல உள் உறுப்புக்களிலும் தங்குகின்றன. (Poly Cystic Kidneys, Poly Cystic Lungs).

வளர்ச்சிதை மாற்றத்தின்  குறைவால் இந்த நீர் உடலால் கிரகிக்கப்படாமல்  அதிக அளவில் உடலில் தேக்கம் கொள்ளும்போது  செல்கள் தளர்ந்து உடல் பருமன்  அடைந்து  ஊளை சதையுடன் தோன்றுவார்கள். (Obesity). நீர் கட்டிகள் உள்ள பெண்கள் குண்டாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

மேலும் உடலின் இந்த நீர் தேக்கத்தின் காரணமாக இரத்த நாளங்களிலும் நீர் சேர்ந்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) ஏற்படுத்தும். 
இதனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும்.

அதிகப்படியான  நீர் எவ்வாறு வெளியேறும்?


உடலில் உள்ள அதிப்படியான நீர் சிறுநீர் மூலம் தான் வெளியேற்றப்பட  வேண்டும். அதற்காக சிறுநீரகங்கள் தேவைக்கு அதிகமாக வேலை செய்ய ஆங்கில மருத்துவத்தில் இரசாயன மருந்துகள் கொடுக்கப்படும். (Diuretics).

இந்த செயல்பாடு,  நன்றாக ஆரோக்கியமாக இயங்கி கொண்டிருக்கும் சிறுநீரகங்களை  மோசமாக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். (Kidney Failure).

நாம் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவிலும் உள்ள நீர் சத்துக்கள் ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கும், ஜீரண சக்திக்கும்,  தேவைகளுக்கும் தகுந்தவாறு உடல் ஏற்றுக் கொண்டு மீதமுள்ள கழிவுகளை மட்டும் வெளியேற்றும்.

இது எப்போது நடைபெறும் என்றால், இயற்கையான, இரசாயனம் கலப்படமற்ற  விளைச்சலில் உண்டான உணவுகளை உண்ணும் போது தான் நமது உடலில் இந்த செயல்பாடுகள் நடைபெறும்.

அவ்வாறில்லாமல் வைட்டமின்ஸ், மினரல்ஸ், கால்சியம், இரும்பு சத்து, ஃவுளூரின், குளோரின், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவைகள் அடங்கியுள்ள கண்கவரும் பாக்கெட்டுகளிலும், டப்பாக்களிலும் அடைக்கப்பட்ட செயற்கை உணவுகளை ஊட்டச் சத்துக்கள் என்கிற மாயையில் வாங்கி உண்ணும் போது  அவை நோய்க் கழிவுகளாக (Toxins) உடலில் தேங்க ஆரம்பிக்கின்றன.

கழிவுகள் வெளியேறாமல் தேக்கம் கொள்வதன் காரணமாக  உடலில் ஆக்சிஜன் கிரகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். (Air Metabolism)

ஆக்சிஜன் கிரகிப்பு தன்மை குறைந்தால் மூச்சு திணறல், மூச்சு அடைத்தல்,  சிறு வேலைகள் செய்தாலும், கொஞ்சம் நடந்தாலும், மாடிப்படி ஏறினாலும் மூச்சு வாங்குதல் போன்ற சுவாச கோளாறுகள் உண்டாகும். குண்டாக உள்ளவர்களுக்கு இந்த  தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். 

இந்த குறைபாடு நீடிக்குமானால் வீஸிங், ஆஸ்துமா, டி. பி போன்ற நாட்பட்ட வியாதிகளாக உருவெடுக்கும்.

ஆக்சிஜன் குறைபாடு தொடரும் போது அது நீர் மூலகங்களை  (Kidneys and Urinary bladder) பாதிக்கும். நீர் மூலகங்கள் பாதிப்படைந்தால்  உடலில் உள்ள கழிவுகள் நீர்மூலம் வெளியேறாது.

எனவே கழிவுகள் அடங்கிய இந்த நீர் சிறு சிறு பைகளாக ஆங்காங்கே தேக்கம் கொள்ள  ஆரம்பிக்கும். இதுதான் நீர்க்கட்டிகள் உருவாக காரணமாகும்.

நாம் குடிக்கும் நீர் வகைகள் நமது உடலில் முறையாக ஜீரணமாக என்ன செய்ய வேண்டும்?


நாம் குடிக்கும் தண்ணீர்  நாக்கிலோ, தொண்டையிலோ நேரடியாக படக்கூடாது. முதலில் தண்ணீர் நமது உதடுகளை ஈரப்படுத்தி பிறகு தான் வயிற்றுக்குள்  செல்ல வேண்டும். எப்போது உதடுகளில் நீர் படுகிறதோ, அப்போது தான் அந்த நீரை ஜீரணிக்க கூடிய சக்தி வயிற்றிலும்,  மண்ணீரலிலும் உருவாகும். 

உதடுகள் நீரில் உள்ள  சக்தியை உறிஞ்சும் தன்மையை உடையது. அதனால் தான் இறைவன் படைப்பில் உதடுகள் வியர்வை சுரப்பிகள் இல்லாமல்  படைக்கபட்டிருக்கிறது. வியர்வை சுரப்பிகள் உள்ள இடங்கள் கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது. வியர்வை சுரப்பி இல்லாத இடம் சக்திகளை உறிஞ்சி உள் வாங்கும் ஆற்றலுடையது.

எப்போதெல்லாம் உதடு உலர்ந்து காய்ந்து போகிறதோ அப்போது நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துக் கொள்ளலாம். உதடுகள் உலரும் போதெல்லாம் நாக்கால் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக இரசாயனங்கள் கலந்த லிப்ஸ்டிக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

லிப்ஸ்டிகில் உள்ள அத்தனை கேடு விளைவிக்கும் இரசாயனங்களையும் உதடுகள் உறிஞ்சும். அந்த கெட்ட விஷங்கள் மண்ணீரலையும், கர்ப்பப பையையும் பாதிக்கும். லிப்ஸ்டிக் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி  அது கெடுதலைத் தான் விளைவிக்கும். 

👉  தேவைக்கு அதிகமாக நீர் அருந்தக் கூடாது.

👉  நீர்க்கட்டி உள்ளவர்கள் நன்றாக தாகம் ஏற்படும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். 

👉 போதிய தாகம் இல்லாமல் உதடு மட்டும் உலர்ந்து காய்ந்து போனால் உதட்டை  நாக்கால் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள்.

👉 மேலும் தாகம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

👉  தாகம் ஏற்படும் போது அதற்கு தக்கவாறு சிறிது சிறிதாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

👉  ஒருபோதும் தண்ணீரை அண்ணாந்து நேரடியாக தொண்டையில் இறங்கும் மாறு மடமடவென குடிக்கக் கூடாது. 

(இந்த செயல் சில  நேரங்களில் உள் தொண்டை நரம்புகளில் அதிவலையை உருவாக்கி் கட்டியை உருவாக்கி பேச்சை நிறுத்திவிடும்).

👉   தண்ணீர் குடிக்கும் போது உதடுகள் நனைய வேண்டும்.

👉  ஒவ்வொரு முறையும் நீர் அருந்தும் போது முதலில் கொஞ்சம் தண்ணீரை   நாக்கில் சிறிது நேரம் வைத்திருந்து சுவைத்து பிறகு விழுங்க வேண்டும்.

👉  அதிக குளிர்ச்சியாகவோ, அதிக சூடாகவோ எதையும் குடிக்கக் கூடாது.

👉  கடையில் விற்கும் குளிர்பானங்களை நிச்சயமாக குடிக்கக் கூடாது. எதையும் குடிக்கும் போது ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது.

👉  பழங்களை ஜூஸாக குடிக்காமல், நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இனிப்பான பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

👉  இயற்கையான  உணவுகளை மட்டுமே  உண்ண வேண்டும். 
(Veg and Non veg).
👉  வெள்ளை சர்க்கரைக் கலந்த  இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
👉  மொறு மொறு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தண்ணீர் குடிக்கும் முறையை கடைப்பிடிக்கும் போது நமது உடலுக்கு தேவையான நீரின் சக்தியை உடல் கிரகித்துக் கொண்டு கழிவுகளை வெளியேற்றும். பிறகு படிப்படியாக நீர் கட்டிகள் சுருங்கி மறைந்துவிடும்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர். இந்த நீர்கட்டியை இலகுவான முறையில் நீங்களே குணப்படுத்தி  கொள்ளப் போகின்றீர்கள். 


நீர்கட்டியை எப்படி, எவ்வாறு குணப்படுத்துவது?
 


அதை குணப்படுத்தும்  அக்குபங்சர் புள்ளி எது? போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.


கருப்பை பலமடைவது குறித்து கீழ்கண்ட பதிவில் காணலாம்.

இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது



சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



No comments:

Post a Comment