பொது அறிவு வினா விடைகள்| பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
TNPSC-GROUP-I&II - 2020
பொது அறிவு வினா விடைகள்!!
✍ அறவியலில் மிக முக்கிய இடத்தைப் பெறுவது எது? - செயலாற்றல்
✍ இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார்? - இல்லறம்
✍ சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவது ---------- ஆகும். - பண்பாடு
✍ பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் ------- முறையாகும் - வாழ்க்கை
✍ பண்படு என்பதன் பொருள்? - சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல்
✍ பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்? - டி.கே சிதம்பரநாதனார்
✍ 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்று கூறும் நூல்? - தொல்காப்பியம்
✍ நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதைப் பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று குறிப்பிடும் நு}ல்? - கலித்தொகை
✍ மனிதரின் புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது எது? - நாகரிகம்
✍ சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் பற்றி விரிவாகக் கூறும் நு}ல்? - பதிற்றுப்பத்து
✍ சோழநாடு, தரைவழி வணிகத்தாலும் கடல் வழி வணிகத்தாலும் வளம் பெற்றிருந்ததனை 'முட்டாச் சிறப்பின் பட்டினம்" என்று குறிப்பிடும் நு}ல்? - பட்டினப்பாலை
✍ பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது எந்த நு}லின் மையக் கருத்து? -மணிமேகலை
✍ சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான முசிறியை ரோமர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்? - முஸிரிஸ்
✍ ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர், 'இந்திய மருந்து" என்று எதைக் குறிப்பிட்டுள்ளார்? - மிளகு
✍ சோழர்கால கிராம ஆட்சிமுறையைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கல்வெட்டு? - பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு
No comments:
Post a Comment