Wednesday, January 22, 2020

வானியல் துறையில் முத்திரை பதித்தவர்.. இவரை கண்டு வியக்காதவர் யார்?

வானியல் துறையில் முத்திரை பதித்தவர்.. இவரை கண்டு வியக்காதவர் யார்?


ஆரியபட்டாவின் ஆரியபட்டியம்..!!
ஆரியபட்டியம் :

📘ஆரியபட்டியம் அல்லது ஆரியபட்டியா என்பது இந்திய கணிதவியலாளர், ஆரியபட்டர் எழுதிய இந்திய வானியல் ஆய்வு நூலாகும்.

📘தற்காலத்திற்கு கிடைக்கப்பெற்ற 5ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே இந்திய கணிதவியல் நூல் இதுவாகும். செங்கிருத நூலான இது நான்கு பகுதிகளும், 121 பாடல்களும் கொண்டுள்ளது.

நூல் அமைப்பு :

1. கிடிகபதம் (13 பாடல்கள்) : அண்டவியலைப் பற்றிக் கூறுகின்றன. மேலும் சைன் (முக்கோணவியல்) பற்றியும் ஒரு பாடல் உள்ளது.

2. கணிதபதம் (33 பாடல்கள்) : அளவையியல், கூட்டல் மற்றும் பெருக்கல் தொடரியல், சூரிய மணிக்காட்டியிலுள்ள கோல்ஃநிழல் முறை, ஒருபடி, இருபடி, ஒருங்கமை மற்றும் தேரப்பெறாத(குட்டக) சமன்பாடுகள் பற்றிக் கூறுகிறது.

3. காலக்ரியப்பதம் (25 பாடல்கள்) : காலத்தின் வௌ;வேறு அளவுகோல்கள், குறிப்பிட்ட நாளில் கோள்களின் இருப்பிட நிலை, இடைச்சேர்வுகள் கொள்ளும் மிகை மாதங்களைக் கணிக்கும் முறைகள், க்ஷய-திதி மற்றும் வாரத்தின் ஏழு கிழமைகளின் பெயர்கள் பற்றி விவரிக்கிறது.

4. கோலபதம் (50 பாடல்கள் ) : விண்வெளிக் கோள்களின் வடிவஃமுக்கோண கணித இயல்புகள், நீள்வட்டப் பாதை, வானநடுவரை, கணு, புவியின் வடிவம், பகல் மற்றும் இரவின் காரணங்கள், கீழ்வானத்தில் தோன்றும் ராசி, நட்சத்திரங்கள் போன்றவைகளை விவரிக்கிறது. மேலும் படைப்பின் மேற்கோள்கள் மேலும் வலுசேர்க்கும் விதமாக உள்ளன.

 கணிதவியல் மற்றும் வானியல் பற்றி கவிதை வடிவில் எழுதப்பட்ட ஆரியபட்டியம் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்து வருகிறது.




📘நவீன காலத்து கணிதம், அறிவியல் மற்றும் வணிகவியலின்றி பதின்ம இலக்கம் முறையைப் பற்றி கூறியதே இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாகும். வியாழனின் துணைக்கோள்களை கண்டறிந்தவர்...!!

வெள்ளி, நிலவுபோல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும், மறைவதையும் கண்டவர்...!!

சனிக்கோளை சுற்றியுள்ள வளையத்தை கண்டறிந்தவர்...!!

நெப்டியூன் கோளை கண்டறிந்தவர்..!!

சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தவர்...!!

பொருட்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்...!!

இவர் நம் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர்தான்...

இவர் யார்?

யோசித்துக்கொண்டே இருங்கள் நாளை வரை..!!


No comments:

Post a Comment