Friday, January 31, 2020

பொது அறிவு வினா விடைகள்!!! | சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? GROUP 1&2 - 2020| பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


பொது அறிவு வினா விடைகள்! | சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
GROUP 1&2 - 2020!


பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍ உலகம் முழுமைக்குமான வாழ்வியல் நெறிகளை ---------- கூறுகிறது . - வள்ளுவம்

✍ அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து மனிதரின் மனக்கோலை நீக்குவதையே நூலின் மாண்பாகக் கருதுபவர்? - நன்னூலார்

✍ ஒருமுறைக்குப் பலமுறை படித்தாலே முழு அறிவு கிடைக்கும் என்பது எந்த நூலின் கருத்தாகும்? - நன்னூல்

✍ கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் எத்தனை தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது? - மூன்று

✍ இல்லத்தார்க்கு உரியக் கடமைகளில் முதன்மையானது எது? - விருந்தோம்பல்

✍ சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? - கி.பி.இரண்டாம் நு}ற்றாண்டு

✍ தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - சேரன் செங்குட்டுவன்!!


✍ தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பிரதேசம் வரையிலான பகுதி சங்ககாலத்தில் ---------- எனப்பட்டது. - சோழ நாடு

✍ தஞ்சாவூர் நகரைக் கட்டமைத்து சோழ அரசு நிறுவப்பட்ட ஆண்டு? - பொ.ஆ. 859

✍ தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழ் இருந்த ஆட்சிப்பகுதி சோழநாடு அல்லது ---------- எனப்பட்டது. - சோனாடு

✍ முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ----------- என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. - மாநகரம்

✍ சோழர் காலத்தில் பிரம்மதேயங்கள் நீங்கலாகப் பல ஊர்களின் தொகுப்பு ------------ எனப்பட்டது. - நாடு

✍ சோழர் காலத்தில் வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ------ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. - களம்

✍ ஒரு களம் என்பது எத்தனை கிலோ ஆகும்? - 28 கிலோ

✍ சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக்குளங்களைப் பழுதுபார்க்க --------- என்ற வரி வசூலிக்கப்பட்டது. - ஏரி ஆயம்


  அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


No comments:

Post a Comment