2019-ன் வேதியியலுக்கான நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜான். வி. குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரா யோசினோ ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது,
செல்போன்கள், எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-ஐயன் பேட்டரிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மூவரும் நோபல் பரிசை பெறுகின்றனர். இதன்மூலம் மொத்த பரிசு தொகையான சுமார் ரூ.6 கோடியே 40 லட்சத்தை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்
No comments:
Post a Comment