Friday, October 18, 2019

TNPSC|GROUP-II_New Syllabus| தென்னிந்திய வரலாறுகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள் 


பொது அறிவு வினா விடைகள்


🔥 பண்டைய சோழ அரசு எந்த ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது? - காவிரி

🔥 கங்கை கொண்டான் எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்? - முதலாம் ராஜேந்திரன்

🔥 சோழ அரசின் நில வரியானது எவ்வாறு அழைக்கப்பட்டது? - காணிக்கடன்

🔥 சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? - பள்ளிச்சந்தை

🔥 'வேளாண் வகை" என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - வேளாளர்

🔥 -------- சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். - சோழர்கள்

🔥 சங்க காலத்தில் சோழ அரசு எதன் எல்லை வரை விரிந்திருந்தது? - வேங்கட மலைகள்

🔥 பண்டைக் காலத்தில் 'தானைத் தலைவன்" என அழைக்கப்பட்டவர் யார்? - படைத்தலைவர்

🔥 சங்க காலத்தில் கடற்கரையோர நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? - பட்டினம்

🔥 பண்டைக் காலத்தில் 'புகார்" என்பது எதனைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்? - துறைமுகங்கள்

🔥 'மென் புலம்"(நன்செய்) என அழைக்கப்பட்ட நிலம் எது? - மருத நிலம்

🔥 சங்க கால மக்களின் முதன்மைக் கடவுள்? - சேயோன் அல்லது முருகன்

🔥 போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக ------- நடப்பட்டன. - நடுகற்கள்

🔥 மதுரையில், 'அல்லங்காடி" எனப்படும் சந்தை எந்த நேரச்சந்தை? - மாலை நேரச்சந்தை

🔥 தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - சேரன் செங்குட்டுவன்



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment