சொறிசிரங்கு, கரப்பான், தவளைச்சொறி, தோல்நோய்.(scabies,eczema,phrynoderma)
ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.
தோலைப் பற்றிய 18வகை சொரிப்படைகளைக் கூறுவது கிரந்தி என்று அறிக.
கருங்கிரந்திகுணம்: தேகத்தில் எரிவு தினவு கண்டு கறுப்பாய் தடித்ததில் அடிக்கடி செம்முளை போல் தோன்றி நீர்கட்டி வெடித்து வற்றி கறுமையான அசருண்டாகி உதிரும் தழும்பு கருப்பாயிருக்கும் சிலவேளை ரணமாய் இருக்கும்
செங்கிரந்திக்குணம்: தேகத்தில் செம்மை நிறமாய் வட்டவட்டமாய் தடித்துப் படர்ந்து இவற்றின் மத்தியில் வெண்மையாய் சுற்று ஓரங்களில் முளைமுளையாய்ச் சீழ்கட்டி வற்றிச் சிவந்து சருகுபோல் உதிர்ந்து தழும்பு சிவப்பாய் இருக்கும்
அரிகிரந்திகுனம்: தேகத்தில் சிறுசிரங்குபோல் தோன்றி படர்ந்து மாறாத்தினவு அரிப்பு காணும்.
ஆலங்காய்கிரந்திகுணம்:
தேகாதியந்தமும் கழற்காய்போல் தோன்றி ஒவ்வொன்றாய் வெடித்துப் புண்ணாகும்.
தேகாதியந்தமும் கழற்காய்போல் தோன்றி ஒவ்வொன்றாய் வெடித்துப் புண்ணாகும்.
கள்ளிப்பூகிரந்திகுணம்:
கள்ளிப்பூபோல் தடித்து அரித்து இரணமாகும்.
கள்ளிப்பூபோல் தடித்து அரித்து இரணமாகும்.
பேய்ச்சொறியின் குணம்:
அடிக்கடி தேகத்தில் தினவு கண்டு காசுபோல் தடித்துச் சிவந்து மறையும்.
அடிக்கடி தேகத்தில் தினவு கண்டு காசுபோல் தடித்துச் சிவந்து மறையும்.
நம் உடலில் உள்தோல்(enterdermis) வெளிதோல்(epidermis) களில் வீக்கம்,எரிச்சல்,வலி உண்டு பண்ணுவதற்கு டெர்மட்டிட்டிஸ்(dermatitis) என்று பெயர்.
படர்தாமரை(eczema);பலவகை உண்டு. அழுகின்றஎக்ஸிமா (weeping eczema):
சொறிந்த இடங்களிலிருந்து நீர் வடியும் .
சொறிந்த இடங்களிலிருந்து நீர் வடியும் .
குடியேறும் எக்ஸிமா (migrating eczema):
ஓர் இடத்தில் குணமாகி மற்றோரிடத்தில் தோன்றும்.
ஓர் இடத்தில் குணமாகி மற்றோரிடத்தில் தோன்றும்.
எரிஸிப்பிலஸ்(erysipelas):
தோலுக்கு அடியில் உள்ள நிணநீர்க்குழாய் பாதிக்கப்படுவதால் உடலில் எந்த இடத்திலும் தோன்றும். தோன்றிய இடத்தில் நமைச்சல்,எரிச்சல்,வலி மூன்றும் இருக்கும்.தோன்றும் முன் குளிர், காய்ச்சல், தோலில் தடிப்பு விறைப்பு. தோல் சிவத்தல்,வீக்கம், கொப்புளம் காணும்
தோலுக்கு அடியில் உள்ள நிணநீர்க்குழாய் பாதிக்கப்படுவதால் உடலில் எந்த இடத்திலும் தோன்றும். தோன்றிய இடத்தில் நமைச்சல்,எரிச்சல்,வலி மூன்றும் இருக்கும்.தோன்றும் முன் குளிர், காய்ச்சல், தோலில் தடிப்பு விறைப்பு. தோல் சிவத்தல்,வீக்கம், கொப்புளம் காணும்
எரீத்தமா(erythema):
தோல் சிவந்து காணும். அளவுக்கு மிஞ்சிய மது,அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும்.
தோல் சிவந்து காணும். அளவுக்கு மிஞ்சிய மது,அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும்.
இக்தியோசிஸ் (ichthyosis ): தடிக்கச்செய்து பாம்பு,மீன் போன்றவற்றிற்கு இருப்பது போல் செதில்களை தோற்றுவிப்பது.
இம்பெட்டிகோ(Impetigo):
முகம்,கழுத்து,கைகள் இவற்றில் கொப்புளங்களாக வெடித்து பொருக்குகளாக உதிரும். போஷாக்குக் குறைவினால் தோன்றும்.
முகம்,கழுத்து,கைகள் இவற்றில் கொப்புளங்களாக வெடித்து பொருக்குகளாக உதிரும். போஷாக்குக் குறைவினால் தோன்றும்.
எச்சில்தழும்பு(Ringworm/tinea):
வட்டமாக தோல் மஞ்சள் நிறமாய் தோன்றி,நமைச்சல் உண்டாக்கி சொறிந்தால் உதிரும்.
வட்டமாக தோல் மஞ்சள் நிறமாய் தோன்றி,நமைச்சல் உண்டாக்கி சொறிந்தால் உதிரும்.
ஸைக்கோஸிஸ் (sycosis/Barber's rash )
முகவாய்க்கட்டையில் தோன்றும். நமைச்சல், எரிச்சல், வீக்கம்,வலி எல்லாம் கலந்திருக்கும்.
ஷிங்கிள்ஸ் (Shingles/herpes zoster):
பெருங்குடலில் உள்ள நச்சுநீர்கள் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் உண்டாகும்.4 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். இறங்கும் போது வயிறு,முகம், நெஞ்சு,கைகளில் மொச்சை அல்லது பட்டானியளவு கொப்புளங்கள் 10-20 தோன்றும். கொப்புளங்களைச்சுற்றி வீக்கம்,எரிச்சல் காணும். தாமாகவே உடைந்து சீழ் வடியும்.
என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
பெருங்குடலில் உள்ள நச்சுநீர்கள் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் உண்டாகும்.4 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். இறங்கும் போது வயிறு,முகம், நெஞ்சு,கைகளில் மொச்சை அல்லது பட்டானியளவு கொப்புளங்கள் 10-20 தோன்றும். கொப்புளங்களைச்சுற்றி வீக்கம்,எரிச்சல் காணும். தாமாகவே உடைந்து சீழ் வடியும்.
இரத்தத் தட்டுக்கள்
குறித்த பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
அக்கு பிரஷரில் தூக்கமின்மைக்கு தீர்வு
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment