Sunday, August 5, 2018

மரபணு மாற்றம் எச்சரிக்கை...!!.....

மரபணு மாற்றம் எச்சரிக்கை...!!.....


இதுபோன்ற தவிர்க்க வேண்டிய விஷயங்களை கட்டாயம்  தவிருங்கள்...

ஐரோப்பிய நாடுகளில் அங்கம் வகிக்கும் ஹங்கேரி நாட்டில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மான்சாண்டோ நிறுவனத்தின் விதைகளைக் கொண்டு விளைவிக்கப்பட்ட மக்காசோளம் பயிர் சமீபத்தில் முற்றிலுமாக தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.... ( Can confirm this in the Net).....

 பெரு நாட்டில் மரபணு மற்றம் செய்யப்பட்ட விதைகளைப்  பயன்படுத்த பத்து ஆண்டுகளுக்குத் தடையாணை பிறப்பிக்கபட்டுள்ளது.. ஏனெனில் பல்வேறு கொடும் நோய்களுக்கு அவை காரணிகளாக இருக்கின்றன.....

இந்தியாவிலோ அதே மான்சாண்டோ நிறுவனம் பங்குச்  சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்தியர்களின் பணத்தைக் கொண்டே,,  நமது பாரம்பரிய விவசாயத்தின் மீது  தாக்குதல் நடத்துகிறது........இவை நிறுத்தப்பட்டால் நமக்கு நல்லது.....

 இன்று இங்கு கடைகளில் மிகுதியாக, விலை குறைவாகக்  கிடைக்கும் கார்ன் ப்ளேக்ஸ் (CORNFLAKES) அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தின் மணிகளே..... விலை குறைவாகக்  கிடைக்கிறது என்றும் சுவையாக உள்ளது என்றும் குழந்தைகளுக்கு வாங்கிக்  கொடுக்கும் பெற்றொர்களைக் காணும் பொழுது மனம் கனக்கிறது ........

முக்கியமாக இப்போதைய இளம் தலைமுறை தாய்மார்களுக்கு விரைவுச்  சாப்பாடுதான் பிடிக்கும்.....

பிள்ளைகளும் கட்டாயமாக மாற்றப் பட்டு பழகி விடுகின்றனர்.

பழையசோறு,  சுடு கஞ்சி, நீராகாரம், கேப்பைக் கூழ், உளுந்துக் களி, சோளக் கஞ்சி, பனியாரம் இவையெல்லாம் என்னவென்றே இன்றைய தலைமுறைகளுக்குத்  தெரிவதே  இல்லை.

நிறைய வீடுகளில் காலை இட்டிலி , பொங்கல், தோசையே இப்போதெல்லாம் வீட்டில் இல்லை போல, இதெல்லாம் நம்ம சத்துள்ள உணவுகள் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்...

 இனிமேல் இதைப் போன்ற இயந்திரங்களாலேயே முற்றிலும் தயாரிக்கப்படும் செயற்கை உணவுகளை  வாங்குவதைத்  தவிருங்கள்.

ஏனெனில் இது குழந்தைகளைப் பற்றிய விஷயம் அவர்களின் உடல்நலன் அக்கறை மிக  முக்கியம்.

Corn Oil என்பதும் இதே ரக விளம்பரப் பொய்தான்..நம் பாரம்பரிய நல்லெண்ணெய்,கடலெண்ணெய்  பலமடங்கு நன்மை உள்ளது.

நம் பாரம்பரிய உண்மைகளை உணருவோம் ....மாறுவோம்...................!...

மாற்றம் நம்மிடம் இருந்தே துவங்கட்டும்......................!!...


No comments:

Post a Comment