சொரியாஸிஸ் (தோல் நோய்) ஏற்படக் காரணம் ?
சொரியாஸிஸ் என்பது ஏற்படுவதற்கான காரணம்,இரண்டு ஒன்று மலச்சிக்கல், மற்றும் அதற்காக அதிக மருந்துகளை எடுத்துக்கொள்வது.இரண்டாவது செரிமானத்தொந்தரவு.
மலச்சிக்கல் பல வருடங்களாக இருந்து,அதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, மலக்கழிவுகளுடன் இரசாயனக்கழிவும் சேர்ந்து உடலில் தேங்கி, அந்த கழிவை வெளியேற்ற உடல் முயற்சித்து, வியர்வை சுரப்பிகள் மூலம் முயற்சி செய்து வெளியேற்றுகிறது.
இவ்வாறு வெளியேறும் கழிவுகள் நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத காரணத்தினால் மீண்டும், மீண்டும் அதிகமாக தேங்கி அங்கே தேக்கமுற்ற கழிவுகளால் புண்கள் உருவாகின்றன.இதுவே சொரியாஸிஸ் ஆகும்.
செரிமான தொந்தரவு (அதாவது பசியின்மை,அல்லது அதிக பசி, எதை சாப்பிட்டாலும் வயிற்று பொருமலாகவே,கல் போல இருப்பது,சாப்பிட்டு சில மணிநேரம் கழித்துகூட ஏப்பத்தில் உணவின் வாசம் வருதல் ,மந்தமான நிலை போன்றவை).
ஏற்கனவே உடலில் அதிக கழிவுகள் தேங்கி இருப்பதால் மருந்துகள் எதை எடுத்தாலும், (வாழ்வியல் முறையை மாற்றாமல்) பயனில்லை.
இதை மிக மிக எளிமையாக சரிசெய்ய கீழ்காணும் வழிமுறையை பின்பற்றுங்கள்.
1.முதல் ஒரு வாரத்திற்கு நன்றாக பசியெடுக்கும் வரை காத்திருந்து,பசித்தபிறகு பழங்கள்,திரவ உணவுகள், வீட்டிலேயே செய்த பழச்சாறுகள் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
2.அடுத்த வாரங்களில் நன்றாக பசியெடுக்கும்வரை காத்திருந்து எளிமையாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இரவு உணவு நன்றாக பசித்தபிறகு 8மணிக்குள் எடுத்துக்கொள்ளுங்கள்.
தோசை போன்ற புளிப்பு சார்ந்த உணவுகளை இரவுநேரங்களில் தவிர்க்கவும்.
3.இரவு உறக்கம் கண்டிப்பாக 9.30மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்.
4.பால், டீ, காபி போன்ற பால் சார்ந்த பொருட்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள கூடாது.
மேற்கண்டவற்றை கடைபிடிக்கும்போது, தேக்கமுற்ற கழிவுகள் முழுமையாக நீங்கி மிகவிரைவாக குணமடையலாம்.மேலும் எந்தவொரு தொந்தரவும் வராமல் தவிர்க்கலாம்.
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள அக்குஹீலர்களை அணுகி, ஆலோசனையோ, சிகிட்சையோ பெற்றுக்கொள்ளலாம்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment