Sunday, August 12, 2018

வயிற்றுப் புண் குணமாக

வயிற்றுப் புண் குணமாக 




கீழா நெல்லி  பொடியை பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி பொடியை,  இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.

வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி பொடியை , 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும்.

தேவையான அளவு கீழா நெல்லி பொடியை நீரில் க‌ரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.

கீழா நெல்லி பொடியை எலுமிச்சம் பழ அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்.

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.

No comments:

Post a Comment