TNPSC New Syllabus| ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள் பற்றிய பொது அறிவுக் குறிப்புகள்|
ஐந்தாண்டுத் திட்ட மாதிர்கள்
👉 முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் (1951 - 1956)
உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
👉 இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956 - 1961)
கிராமப் புற இந்தியாவைச் சீரமைத்தல், தொழில்துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்குதல்.
👉 மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (1961 - 1966)
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது.
👉 நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969 - 1974)
மக்களின் வாழ்க்கைத் தரம், குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
👉 ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1974 - 1979)
உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன, 1974 - 75-ன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
👉 ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980 - 1985)
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத்திட்டத்தில் முதலிடம் பெற்றன.
👉 ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985 - 1989)
உணவு தானிய உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.
👉 எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992 - 1997)
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றும் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல், மக்கள் தொகை கட்டுப்பாடு.
👉 ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997 - 2002)
பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை இத்திட்டம் அங்கீகரித்தது, மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்.
👉 பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002 - 2007)
பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல்.
👉 பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007 - 2012)
மொத்த உள்நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல், ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்.
👉 பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (2012 - 2017)
இந்திய அரசு இதற்கான கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
No comments:
Post a Comment