இயற்கை மருத்துவம் முடக்கு+அறுத்தான்
👇
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
வாத நோய், நரம்பு நோய் சிகிச்சையில் இந்த கீரை பயன்படுவதாக சமஸ்கிருத எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கீரையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து கூழ்ம நிலையில், தேய்த்துவந்தால் வலி, வீக்கம், மற்றும் பல்வேறு கட்டிகள் குறைகின்றன.
கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன்மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
இதன் சிறப்பு குணம், நமது மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து, சிறுநீராக வெளியேற்றுகிறது.
தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.
முடக்கற்றான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
முடக்கற்றான் காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரை சூப்
முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
4. வாத நாராயணன்
வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை, வாதமடக்கி என்றும் அழைப்பர். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.
கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவற்றிற்கும் நல்ல மருந்து. மலச்சிக்கல் குணமாக்கும்.
இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி குறையும். இதன் இலையை எண்ணெயில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் குறையும்.
இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குறையும்.
சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.
நகச்சுத்தி ஏற்பட்டு கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் ஏற்பட்டால் இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மசித்து வைத்துக் கட்ட இரு நாளில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வைத்து மூட்டுகளில் தொக்கணம் செய்வதால் வயதானவர்களுக்கு விரைவில் வலி குறைகிறது.
முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.
முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டுவந்தால், வலி, வீக்கம் குறைந்து, நோய் குணமாகும்.
முடக்கத்தான் இலையைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், சித்திர மூல வேர்ப்பட்டைப்பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும். முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், உதிரப்போக்கை ஒழுங்குபடுத்தும்.
முடக்கத்தான் கீரையைத் தனியாகவோ அதன் வேருடன் சேர்த்தோ நீரில் கலந்து குடித்துவந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் நீங்கும்.
🍊🍋🍇🍓🍑🍍🍎::
No comments:
Post a Comment