ஐஞ்சிறுங்காப்பியங்கள்|
பொதுத்தமிழ்
ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடர்பான குறிப்புகள்!!
💐 அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று தண்டியலங்காரம் என்ற நூல் விளக்குகிறது. ஐஞ்சிறுங்காப்பியங்கள் அனைத்துமே சமணக்காப்பியங்கள் ஆகும்.
💐 ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற சொல்லை ஏற்படுத்தியவர் சி.வை தாமோதரம் பிள்ளை.
ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாககுமார காவியம்
உதயண குமார காவியம்
யசோதர காவியம்
நீலகேசி
சு+ளாமணி
நாககுமார காவியம்
💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
💐 நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல் தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.
💐 சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது.
💐 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
💐 இந்நூலை 'சொத்தை நூல்" என்கிறார் மது.ச.விமலானந்தம்.
💐 இது சமணநூல் ஆகும்.
💐 இக்கதையின் நாயகன் 519 பெண்களை மணம் செய்கிறார்.
💐 இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.
உதயகுமார காவியம்.
💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
💐 இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்தது.
💐 இந்நூல் மொத்தம் 369 பாடல்களையும், 6 சருக்கங்களையும் கொண்டது.
💐 இதன் பாவகை விருத்தப்பாவால் ஆனது.
💐 இந்நூல் உதயணன் என்பவனின் கதையைக் கூறுகிறது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.
💐 உ.வே சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.
யசோதர காவியம்
💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
💐 இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்தது.
💐 இதில் 320 பாடல்களையும், 5 சருக்கங்களையும் கொண்டது.
💐 இதன் பாவகை விருத்தப்பாவால் ஆனது.
💐 இந்நூல் வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்தும், யசோதர சரிதத்திலிருந்தும் எடுக்கப்பட்டது என்றும் கூறுவர்.
No comments:
Post a Comment