Friday, August 9, 2019

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்..!! பொதுத்தமிழ்

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்.
பொதுத்தமிழ் 


பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்!!
💢 ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று. இது, நுண்ணிய நு}ல்பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை.

💢 இது, மக்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையது.

💢 மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர் ஆவர்.

பேச்சும் மேடைப்பேச்சும்

💢 பேச்சு வேறு, மேடைப்பேச்சு வேறு. வெறும்பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.

💢 பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது, ஆனால் மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்

💢 மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி என்றாலும் அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.

💢 பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல் வேண்டும்.

💢 அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்தமொழி நடை ஆகும்.

முக்கூறுகள்

💢 பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவதனையே பேச்சுமுறை என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம்.

எடுத்தல்

💢 பேச்சைத் தொடங்குவது எடுப்பு ஆகும்.

💢 மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தான் விதைக்க முடியும் என்பதனைப் போலக் கேட்போரைத் தன்வயப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இடத்திற்கும் சு+ழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.

தொடுத்தல் முறை

💢 தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும்.

💢 பேச எடுத்துக்கொண்ட செய்தியின் நுட்பங்களையும் கருத்துக்களையும் பல தலைப்புகளின்கீழ் வரிசைப்படுத்தி, ஓர் ஓவியன் பல வண்ணம் தீட்டி, இயற்கை வனப்பை உருவாக்கிக் காட்டுதல்போலப் பேசுதலே ஒரு பேச்சாளரின் கடமையாகும்.

முடித்தல்

💢 பேச்சைத் தொடங்குவதிலும் பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும்.

💢 நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு என்பது தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம்.

No comments:

Post a Comment