Thursday, August 1, 2019

ஐஞ்சிறுங்காப்பியங்கள் நீலகேசி மற்றும் சூளாமணி| பொதுத்தமிழ் ஐஞ்சிறுங்காப்பியங்கள்| நீலகேசி

ஐஞ்சிறுங்காப்பியங்கள் நீலகேசி மற்றும் சூளாமணி|
பொதுத்தமிழ்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்|
நீலகேசி


💐 நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய  நூல்களுள் ஒன்றாகும். சமண சமய  நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.

💐 தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது.

💐 பௌத்த சமயத்தின் பெருமையைக்கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும்  நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.

💐 இந் நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.

💐 இந் நூல் கடவுள் வாழ்த்து தவிர, 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. 11 பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.

💐 பத்தாம்  நூற்றாண்டில் தோன்றிய நீலகேசி  நூலுக்கு, 14 ஆம்  நூற்றாண்டில் தோன்றிய உரை நூல் நீலகேசி விருத்தியுரை ஆகும்.

💐 இந்த உரை நூலின் ஆசிரியர் சமய திவாகர வாமனமுனிவர்.

💐 இதனால் இந்த உரை நூலுக்குச் சமய திவாகர விருத்தி என்னும் பெயரும் வழங்கலாயிற்று.

சு+ளாமணி

💐 ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த  நூலாகும்.

💐 சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார்.

💐 பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

💐 பெருங்காப்பியத்தின் இலக்கணம் அனைத்தும் பெற்ற குறுங்காப்பியம் இது.

💐 இக்காப்பியத்தின் தலைவன் திவிட்டன்.

💐 இந் நூல் ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும்  நூலைத்தழுவித் தமிழில் எழுதப்பட்டது.

💐 இது விருத்தப்பாவல் ஆன  நூல் ஆகும்.

💐 இந் நூல் சமண தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது.

💐 இது 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டு, 2131 பாடல்களை கொண்டது.

💐 இந் நூல் கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒத்துள்ளது.


No comments:

Post a Comment