ஐஞ்சிறுங்காப்பியங்கள் நீலகேசி மற்றும் சூளாமணி|
பொதுத்தமிழ்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்|
நீலகேசி
💐 நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.
💐 தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது.
💐 பௌத்த சமயத்தின் பெருமையைக்கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.
💐 இந் நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.
💐 இந் நூல் கடவுள் வாழ்த்து தவிர, 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. 11 பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.
💐 பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய நீலகேசி நூலுக்கு, 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை நூல் நீலகேசி விருத்தியுரை ஆகும்.
💐 இந்த உரை நூலின் ஆசிரியர் சமய திவாகர வாமனமுனிவர்.
💐 இதனால் இந்த உரை நூலுக்குச் சமய திவாகர விருத்தி என்னும் பெயரும் வழங்கலாயிற்று.
சு+ளாமணி
💐 ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
💐 சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார்.
💐 பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
💐 பெருங்காப்பியத்தின் இலக்கணம் அனைத்தும் பெற்ற குறுங்காப்பியம் இது.
💐 இக்காப்பியத்தின் தலைவன் திவிட்டன்.
💐 இந் நூல் ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் எழுதப்பட்டது.
💐 இது விருத்தப்பாவல் ஆன நூல் ஆகும்.
💐 இந் நூல் சமண தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது.
💐 இது 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டு, 2131 பாடல்களை கொண்டது.
💐 இந் நூல் கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒத்துள்ளது.
No comments:
Post a Comment