'விதைகளே இனி பேராயுதம்
'விதைகளே இனி பேராயுதம்' என்று அன்றே முழக்கமிட்டவர் நம் இயற்கை சூழல் ஆய்வாளர் திரு.கோ..நம்மாழ்வார் ஐயா அவர்கள்.
ஏன் அவர் அப்படி முழக்கமிட்டார் என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிய வருகிறது. நாம் காலையில் எழுந்து முகம் துடைக்கும் துண்டு முதல் பல் துலக்குவதில், குளிப்பதில், உண்பதில், பயணிப்பதில் என்று தொடர்ந்து இரவு படுக்கை வரை பெரும்பாலும் அனைத்திலும் கலப்படம் இல்லாமல் இல்லை.
முன்பெல்லாம் நமக்கு தேவைப்படும் விதைகளையோ/நாற்றுகளையோ நாமே உருவாக்கி செயல் பட முடியும். ஆனால் இன்று சூழ்நிலை வேறு. பணம் இருந்தால் கடையில் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற மனோபாவம் வந்தபின், நாம் தற்சார்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இப்போது விதைகளுக்கே ஒரு பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.
சரி புரிதல் உள்ளவர்கள் அவ்விதைகளை ஒருமுறை வாங்கி அடுத்தடுத்து பயிர்களை உருவாக்கலாம் என்றாலும் வாய்ப்பில்லை. காரணம் அனைத்துமே மீண்டும் முளைக்காத விதைகள். அதனால் அடுத்தடுத்து பருவங்களுக்கும் நாம் அவனிடமே கையேந்த வேண்டிய நிலை உள்ளது. காரணம், விதைகளுக்கு பின் ஒரு பெரும் வணிகம் கட்டமைக்கப்பட்டு உலா வருகிறது என்பதே!
சரி உண்மையான பொருளை நாம் அடைய வேண்டும் என்றால் என்ன செய்வது என யோசித்து நேரடியாக உற்பத்தியாளரிடம் சென்றால் அங்கும் போலிகள் வலம் வருகின்றன. காரணம் , போலி என்பது அவர்களுக்கே தெரியாமல் உள்ளது.
சரி என்ன செய்ய முடியும்?
புரிதல் உள்ள நபர்களிடம் ஒவ்வொரு வகை விதைகளாக சேகரித்து, நாமே பண்டைமாற்றம் செய்து தற்சார்பாய் வாழ்வது தான். இதனால் நம் விதைகள் நம் கைக்குள்ளே உலா வரும். இதனால் மரபணு மாற்றப்பட்ட விதைகளோ அல்லது முளைக்காத விதைகளையோ, கடைகளையோ நாடி செல்ல தேவை இருக்காது.
இதற்காக 'செங்கோல் வளர்ச்சிக் கழகம்' அமைப்பில் ஒரு துணை குழுவை உருவாக்கி அதற்கு 'முளை' என்று பெயரிட்டு விதை வங்கியில் விதைகளை பண்டமாற்றம் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல வகையான விதைகளை முறையாக பண்டமாற்றம் செய்து வளர்த்திட 'முளை விதையகம்' ஒரு தளமாக இயங்கும்.
ஆதலால், தங்களிடம் இருக்கும் நாட்டு இரக விதைகளை பகிருங்கள், இல்லாதவர்களிடம் சேர்ப்போம்.
நம்மிடம் கீழ்கண்ட விதைகள்/நாற்றுகளின் தரவுகள் உள்ளன. தேவைப்படுபவர்கள் கூறுங்கள் தகவல் கொடுக்கிறோம். தங்களிடம் உள்ள விதைகள்/நாற்றுகளை கூறுங்கள் பரவலாக்குவோம்.
அ) காய்கறி விதைகள்:
௧.வெண்டை
௨.பீர்க்கன்
௩.சுரை
௪கொலுமிச்சை
௫.எலுமிச்சை
௬.அவரை
௭.மொச்சை
௮.பூசணி
௯.முருங்கை
௧௰.தம்மட்டவரை
௧௨.நுரைபீர்க்கன்
௧௩.பாகற்காய்
௧௪.புடலை
௧௫.கத்தரி
ஆ) கீரை விதைகள்:
௧.புளிச்சகீரை
௨.சர்க்கரை வர்த்தினி
௩.அகத்தி
இ) பழவிதைகள்/நாற்றுகள்:
௧.தேன் வாழை
௨.மொந்தன் வாழை
௩.பூ வாழை
௪.விளாம்பழம்
௫.பப்பாளி
௬.நாவல்
ஈ) பூஞ்செடி விதைகள்/நாற்றுகள்:
௧.செம்பருத்தி
௨.மல்லிகை
௩.பவளமல்லி
௪.மரமல்லி
உ) மூலிகை செடி விதைகள்/நாற்றுகள்:
௧.கற்றாழை
௨.ரணக்கள்ளி
௩.கள்ளி முள்ளியான்
௪.தூதுவளை
௫.பிரண்டை
௬.கற்பூரவல்லி
௭.திருநீற்றுப்பச்சை
௮.மருதாணி
௯.துளசி
௧௰.நொச்சி
௧௧.சிறியாநங்கை(நிலவேம்பு)
௧௨.அமுக்கிரா
௧௩.முடக்கத்தான்
௧௪.துத்தி
ஊ) பயிறு விதைகள்:
௧.நரிப்பயறு
௨.கருப்பு கொள்ளு
எ) அரிசி நெல் விதைகள்:
௧.திருச்செங்கோடு சம்பா
௨.மாப்பிள்ளை சம்பா
ஏ) மர விதைகள்:
௧.நீர்மருது
௨.வில்வம்
௩.யானைக்குண்டு மணி
௪.பெருங்கொன்றை
௫.மலைவேம்பு
௬.புங்கன்
௧௰.பூவரசு
௧௨.தேக்கு
௧௩.பாதாம்
௧௪.கொடுக்காப்புளி
௧௫.மந்தாரை
௧௬.சொர்க்கம்
ஐ) விதைகள்:
௧.மரபருத்தி
௨.கருங்கண்ணி பருத்தி
௩.ஆமணக்கு
வாருங்கள்
'இழந்த மரபை மீட்போம்'
குறிப்பு: தங்களுக்கு வேண்டிய விதைகளை நேரடியாக /அஞ்சல் மூலமாக பெறமுடியும். *எந்தவொரு விதைகளுக்கும் கட்டணமில்லை. மாறாக அடுத்த சிறிது காலத்தில் இரு மடங்காக முளை விதையகத்திற்கு விதைகளை திருப்பி கொடுக்க வேண்டும். தற்போது, நம்மிடம் உள்ள தரவுகளின் படி திருச்செங்கோடு, நாமக்கல் பகுதியில் மேலே குறிப்பிட்ட விதைகள் கிடைக்கும்.
தொடர்புக்கு:
+919345928585
+919842978556
இப்படிக்கு,
முளை விதையகம்,
செங்கோல் வளர்ச்சிக் கழகம்
'மாறுவோம் மாற்றுவோம்'
www.Facebook.com/sengolvalarchikazhagam/
Forwarding 👆🏽👆🏽
No comments:
Post a Comment