Tuesday, October 30, 2018

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 8

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 13


குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள் அடங்கிய மிக நீண்ட... வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று, வைரலாகி வருகிறது. இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.


🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள். தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம்.

🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக்கொள்வார்கள்;

🌼அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள். அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை... இப்படிச் செல்கிறது அந்த வாட்ஸ்அப் மெசேஜ்
'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்? பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல...

🌼 இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

🌼 அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

🌼சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா? சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

🌼பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

🌼குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

🌼ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது,

🌼அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது,

🌼தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது,

🌼 மற்றவர்களை மன்னிப்பது,

🌼தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம்.

🌼 இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை.

🌼அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.



த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்


1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.
3. ஆயிஷா – இரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடற – பாரதி தம்பி
11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.
14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்
20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ் – இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலை – பிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறை – மதி
47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்
53. சுடர் விளக்காயினும்- தர்ஷிணிமாயா
இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட  நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு  உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. 
வாசிப்பை சுவாசிப்போம்…
நன்றி!


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

Monday, October 29, 2018

பன்றிக்காய்ச்சல் (SWINE FLU) "அ"முதல் "ஃ"வரை

பன்றிக்காய்ச்சல் (SWINE FLU)  
"அ"முதல் "ஃ"வரை 



தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது 

பன்றிக்காய்ச்சல் குறித்த பீதி மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது 

இந்த பதிவு பன்றிக்காய்ச்சல் குறித்த தெளிவை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி 

இந்த பன்றி காய்ச்சல் பிரபலமானது 2009 இல் இருந்து தான். அப்போது தான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. 
இதை swine flu pandemic 2009 என்கிறோம் 

பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது??

பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோய் 

இது பன்றிகளை தாக்கும் வைரஸ் கிருமியாகும் 

இந்த கிருமியானது எப்படி நமக்கு வைரஸ் சளி காய்ச்சல் வரவழைக்கிறதோ அதே போன்று பன்றிகளுக்கு சளி காய்ச்சல் வரவழைக்கும் கிருமி 

அது எப்படி மனிதனுக்கு வந்தது??

பன்றிகளுடன் நெருக்கத்தில் இருக்கும் பன்றி வளர்ப்போர், கால்நடை ஊழியர்கள் போன்றவர்களுக்கு அரிதாக பன்றிகளின் இந்த நோய் பரவிவிட்டது. 

இதை zoonotic swine flu என்கிறோம். 

மனிதனுக்கு பரவியதில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த வைரஸுக்கு ஒரு வினோத சக்தி இருக்கிறது 

அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மற்றொரு மூன்றாவது புதிய வைரசாக உருமாறும். 
இதை antigenic shift என்கிறோம்

மனிதனிடமிருந்து மீண்டும்  பன்றிகளுக்குள் இந்த வைரஸ் செல்லும் போது reassortment எனும் மறுதகவமைப்புக்கு உள்ளாகி புது வைரசை தோற்றுவிக்கிறது

இப்படி புதிதாக உருவான வைரஸ்கள் 
H1N1 ,H3N2 ,H2N1 ,H2N3,H1N2 
H3N1 
என்று விஷ்வரூபம் எடுக்கிறது . 

இந்த நோயின் அறிகுறிகள் யாது? 

நமக்கு மழை பனிக்காலங்களில் வரும் வைரஸ் ஜுரத்தைப் போலவே 
குளிர் நடுக்கம் , காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, கடும் தலை வலி, உடல் சோர்வு அசதி, வாந்தி , பேதி போன்றவை ஏற்படலாம். 

இந்த நோயின் நிலைகள் யாவை??

இந்த நோய்க்கு மூன்று நிலைகள் உள்ளன 

முதல் நிலை 
Category A 

மெல்லிய உடல் உஷ்ணம் 
லேசான தொண்டை வலி 
வயிற்றுப்போக்கு 
வாந்தி 
உடல் சோர்வு 

இரண்டாம் நிலை 
Category B 
கடும் காய்ச்சல் 
கடும் தொண்டை வலி 
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ இந்த அறிகுறிகள் தென்படுவது

மூன்றாம் நிலை 
Category C 
முதல் மற்றும் இரண்டாம் நிலை அறிகுறிகளுடன் 
மூச்சு திணறல்
நெஞ்சு வலி 
குறைவான ரத்த அழுத்தம் 
தலை சுற்றல் 
மயக்கம்
மந்த நிலை 
கை கால்கள் நீல நிறமாகுதல் 
போன்ற அறிகுறிகள் தென்படுதல்

சரி.. இந்த நோய் இருப்பதை எப்படி அறிவது?

இந்த நோயின் அறிகுறிகள் தென்படின் உடனே தங்களின் குடும்ப மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை சோதித்தால் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்கலாம் . இதை throat swab என்று கூறுகிறோம்.

இந்த பரிசோதனை category C நோயாளிகளுக்கு மட்டுமே அவசியம். 
Category A மற்றும் B நோயாளிகளுக்கு தேவையில்லை 

பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லையே. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா???

உண்டு . 
இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்து நம்மிடம் இருக்கிறது. இதன் பெயர் "ஒசல்டாமிவிர்" oselatamivir எனும் மாத்திரை இருக்கிறது. 
ஆகவே நமக்கு அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். 

மேலும், இந்த இன்ப்ளூயன்சா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியும் நம்மிடம் இருக்கிறது. 

இந்த தடுப்பூசி வருடம் ஒருமுறை high risk group என்று சொல்லப்படும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு போடப்படுகிறது.

தனியாரில் இந்த ஊசி தேவையின் பேரில் போடப்படுகிறது. 

இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் அவதாரம் மாறி மாறி எடுப்பதால் வருடா வருடம் புது தடுப்பூசி போட வேண்டும். 

1918 இல் முதன்முதலில் இந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று H1N1 எனும் வைரஸ் கிருமியால் உலகம் முழுவதும் பரவி 5 முதல் 10 கோடி மக்களை காவு வாங்கியது. 
மீதி உள்ள மக்களுக்கு இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி தோன்றியிருந்தது

20 ஆம் நூற்றாண்டு முழுதும் அந்த வைரஸ் மனிதர்களிடயே சாதாரண காய்ச்சலை உருவாக்கும் ஃப்ளூ வைரசாகத்தான் சுற்றி வந்தது.

திடீரென கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு பின் 1998 இல் இந்த வைரஸ் மூன்று புது வைரஸ்களாக உருமாறியிருந்தது. 

இதில் வருந்தத்தக்க அம்சம் யாதெனில் 1918 இல் உருவான அதே வைரஸ் தற்போது 2009 இல் உலகத்தை ஆட்டுவிக்க மறுஜென்மம் எடுத்திருப்பது தான். 

2015 இல் இந்தியாவை தாக்கிய இந்த வைரஸ், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தாக்கி 600 க்கும் அதிகமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வைரஸ் இன்றளவும் நமது நாட்டில் பரவலாக சுற்றி வருகிறது 

காரணம் 
நமது நாட்டின் ஜன நெருக்கடி 
சுற்றுப்புறத்தூய்மையின்மை
தன்சுத்தம் பேணுவதில் இருக்கும் இடற்பாடுகள் 

எப்படி இந்த நோயில் இருந்து பாதுகாப்பாக வாழ்வது??

மிக மிக எளிது.

1.தினமும் மலம் கழித்த பின்பும் 
உணவு உண்ணும் முன்பும் சோப் போட்டு முறையாக கை கழுவ வேண்டும் 

2. சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது  கை குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும் 

3. வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம்.

4. சளி இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

5. நம் வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்கலாம்

6. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் முறையான மருத்துவரை அணுக வேண்டும் 

இது போன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம். 

பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது 

வீண் பீதி தேவையில்லை 

வருமுன் காப்பதே நலம்

தன்சுத்தம் பேணுவோம்

பன்றிக்காய்ச்சலை தடுப்போம் .

"மது அருந்தும் பழக்கம் குறைய"
என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/blog-post_84.html?m=0


சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?....

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/blog-post_51.html?m=0


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



மது அருந்தும் பழக்கம் குறைய

மது அருந்தும் பழக்கம் குறைய



கீழாநெல்லி – 1 கைப்பிடி

அதிமதுரம் – 2

சோம்பு – 2 தேக்கரண்டி

புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காலை வெறும் வயிற்றில் இவற்றை எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும். தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்.

"மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..."

"மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..."


இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.

 இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.  

அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.  

பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. 

 பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம்,
பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்," என்றார்.

"நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது."

Sunday, October 28, 2018

TNPSC Current Affairs

TNPSC Current Affairs 

எவருடைய வரலாறு காமிக் புத்தகம் என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது?


2018-ஆம் ஆண்டின் ஜனவரி மாத சிறப்புத் தொகுப்புகள் !

விளையாட்டு - பகுதி-1

💥 பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிhpவில் 'எலினா ஸ்விடோலினா" சாம்பியன் பட்டம் வென்றார்.

💥 மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லைட் ஃப்ளைவெயிட் பிhpவில் 'தமிழகத்தின் கலைவாணி" வெற்றி பெற்றுள்ளார்.

💥 சர்வதேச செஸ் ஜுனியர் பிhpவில் இந்திய கேன்டிடேட் மாஸ்டர் 'குகேஷ்" சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

💥 ஆப்கானிஸ்தான் கிhpக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பில் சிமன்ஸ்(மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

💥 துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை 'அன்சால் தாகூர்" வெண்கலம் வென்றுள்ளார்.



💥 தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலு}ர் மாணவன் விஷ்ணு தங்கப் பதக்கம் வென்றார்.

💥 அரபு நாடுகளில் 2017ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணி வீரர் முகமது சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

💥 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜீனியர் உலக கோப்பை கிhpக்கெட் போட்டியில் இந்திய கிhpக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது.

💥 ரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிhpக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்hPம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பீகார் கிhpக்கெட் அணி தேசிய போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

💥 நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓப்பனில் இருந்து ஆன்டி முர்ரே(பிhpட்டன்) விலகுவதாக அறிவித்துள்ளார்.

💥 'இந்திய கிhpக்கெட் அணியின் சுவர்" என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் 'ராகுல் டிராவிட்" கிhpக்கெட் வாழ்க்கை 'காமிக் புத்தகம்" என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது.




Saturday, October 27, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 16| FRUSTRATED | எரிச்சல் சம்பந்தமான வார்த்தைகள்

ஆங்கிலமும் கற்போம்-பகுதி - 16|

FRUSTRATED | எரிச்சல் சம்பந்தமான வார்த்தைகள்


Frustrated related words: (எரிச்சல் சம்பந்தமான வார்த்தைகள்)

1. Defeated (தோற்கடிக்கப்பட்ட)
2. Foiled (தகர்ந்த)
3. Dashed (இடைவெளியான)
4. Maddened (பைத்தியமான)
5. Embittered (வெறுப்பூட்டப்பட்ட)
6. Dispirited (சோர்வடைந்த)
7. Baffled (திணறுகின்ற)
8. Bugged (எரிச்சலான)
9. Provoked (கோபமூட்டுகின்ற)
10. Miffed (சச்சரவான)
11. Inflamed  (வீக்கமான)

சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?....

சைனஸ் தலைவலி ஏற்படுவது ஏன்?....



மார்கழி தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டி வந்துவிடும். அதிலும் பனிப்பொழிவால் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், அது சைனஸ் பிரச்சினையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.

‘சைனஸ்’ என்றால் என்ன?

நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ் - பீனாய்டு

சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்சினைதான்.

நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்குத் திரவம் தேங்கும்போது சைனஸ் பிரச்சினை (Sinusitis) ஏற்படுகிறது.

சைனஸ் பாதிப்பு ஏன்?

ஆரோக்கியக் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படை

மாசடைந்த காற்றில் கலந்துவரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள ‘சளி சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை, வாசனைத் திரவியம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.

சைனஸ் அறையில் அழற்சி அதிகரிக்கும்போதும், மூக்கில் சதை வளரும்போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.

அறிகுறிகள் என்ன?

அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது; ருசியை உணர முடியாது.

என்ன சிகிச்சை?

இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது நல்லதல்ல. சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது.

இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்திக் காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகிச் சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம்.

எண்டாஸ்கோப்பி உதவும்!

முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். இந்த நிலைமை இப்போது இல்லை. எண்டாஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாகச் சிகிச்சை அளித்து முழு நிவாரணம் அளிக்கமுடியும். மூக்கின் நடு எலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றுக்கும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை தர முடியும்.

தடுப்பது எப்படி?

சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். தூசு, புகைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதவை

குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது. பனியில் அலையக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது. மூக்குப்பொடி போடக் கூடாது. அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி, அழற்சி தீவிரமடையுமே தவிர, குறையாது. இதுபோல் ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவினால், மூக்கில் உள்ள ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மூக்கு புண்ணாகிவிடும்.


★★★★★★★★★
★★★★★
★★★

"வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை"
என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.




ஒரே ஒரு புள்ளி | பல நோய்களுக்கு தீர்வு

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/httpsyoutubegs92utfu3r8.html?m=0

இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



எப்படி நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்வது?


எப்படி நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்வது?



How to become a unhealthy Diabetic?
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

தமிழில் கீழே ஸ்க்ரோல் செய்யவும் 

A 45yr old male came to my clinic this week. His height is 173cm and weight is 53kg. I was shocked after hearing his story.

He had some symptoms of Diabetes in 2002, but he ignored. In 2005 he had severe tiredness, so he checked sugar and found out it was more than 400. He was immediately started on Insulin and within six months his sugar level became normal.

He got bad advices from others and visited a unskilled acupuncture practioner and stopped insulin. The patient lost 30 kgs of weight due to uncontrolled diabetes in next 4 years. His sugar level was more than 500.

He visited an allopathic doctor in 2010 and restarted insulin, controlled his sugar levels and gained 10 kgs of weight and looked healthy.

Again he had change in mind and he stopped insulin and started with herbal medicines and continued acupuncture and his sugar level started climbing sky high. His acupuncture guide advised not to check sugar, Diabetes will control itself.

In 2015, his vision got affected, and doctors diagnosed it as diabetic retinopathy and restarted insulin. After that he stopped insulin and started paleo diet. Sugar was in moderate control. Then he altered his diet with millets and followed improper paleo, then sugar started elevated and in 2018, a blood vessel in his eye got burst and he lost 25% of vision. Doctors advised him to under go eye surgery in two days. otherwise he will lose complete vision. His age is 45.

He came to me today, as his surgery was planned tomorrow.

He had diabetes for 16 years, took medicines only for 6 months properly, 30 kg weight loss, Retinopathy. If he continues this style of self management he may end up in heart failure in 2019 and kidney failure in 2020.

Who is guilty here? We can give thousands of advices to others? But we should make our body as a research lab.

I asked him that, "you knew about diet in 2016 itself. Why didn't you came to me at that time itself". He replied, "I knew about you sir. But didn't have your address". I was deeply saddened to see how ignorant the patient was.

I gave him 2 weeks time. First week medicines + paleo. Sometimes 15 years of very high sugar would have damaged his pancreas and his body cannot produce insulin. Then tablets won't work and he has to start insulin injection again. So if sugar is not controlled in a week, we have start medicines + insulin + Paleo. Even after that sugar levels are not reducing, he has to undergo eye surgery. And he has to take paleo + insulin lifelong. He must check his sugar daily and he has to do master health check up every three months.

Let's pray for his quicker recovery.

What is the moral of his life story? Diabetic patients must check sugar everyday. Keep it under 100/110 using any means.


எப்படி நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்வது?


இந்த வாரம் என்னிடம் ஒரு 45வயது நபர் பேலியோ டயட்டுக்காக வந்தார். உயரம் 173செமீ, எடை வெறும் 53கிலோ. என்ன பிரச்சினை எனக் கேட்ட போது, அவர் சொன்ன கதை எனக்கு தலை சுற்றியது.
2002ல் சுகருக்கான சில சிம்ப்டம்ஸ் தெரிந்தது, ஆனால் எதுவும் செய்யவில்லை. 2005ல் உடல் சோர்வு மிக அதிகமாகவே, சுகர் பார்த்த போது 400க்கு மேல் இருந்தது. உடனடியாக இன்சுலின் ஆரம்பிக்கப்பட்டு, ஆறே மாதத்தில் சுகர் அளவுகள் நன்றாக கட்டுக்குள் வந்தன.
"இன்சுலின் நிறுத்துகிறேன் பேர்வழி" என்று யார் சொன்னதையோ கேட்டு, சுமாரான அக்குபஞ்சர் டாக்டர் ஒருவரிடம் பார்த்திருக்கிறார். அவர் "இன்சுலின் எல்லாம் வேண்டாம்" என நிறுத்தி விடவே, 80கிலோ இருந்தவர் நான்கு வருடங்களில் 50கிலோவானார். சுகர் 500க்கும் மேல்.
2010ல் அலோபதி டாக்டரைப் பார்த்து மறுபடி இன்சுலின் ஆரம்பித்து கொஞ்சம் சுகரை கட்டுக்குள் கொண்டு வந்தார். பத்து கிலோ எடை கூடி கொஞ்சம் பார்ப்பதற்கு நன்றாக் இருந்திருக்கிறார்.

மறுபடி அவருடைய ஆராய்ச்சி பேய் தலை தூக்கவே இன்சுலினை நிறுத்தி ஹெர்பல் மருந்துகள், அக்குபஞ்சர் என பாலோ செய்ய போகவே, சுகர் மறுபடி மேலே சென்றது. அவர் அக்குபஞ்சர் டாக்டர் ஒவ்வொரு முறையும் சொல்வாராம், "சுகர் லெவல் பாக்காத, வியாதி சரியாயிடும்" என்று.  

2015ல் கண்ணில் நரம்பு மண்டல பாதிப்பு வந்து மறுபடி இன்சுலின் ஆரம்பித்து இருக்கிறார். பின்னர் பேலியோ டயட் எடுக்கலாம் என இன்சுலினை நிறுத்தி, டயட் எடுக்கும் போது கொஞ்சம் கண்ட்ரோல் வந்தது. பின்னர் அரைகுறையாக பேலியோ தொடரவே, சுகர் கூடி, 2018ல் கண்ணில் ரத்தக் குழாய் வெடித்து, 25% பார்வை போனது. இன்னும் இரண்டு நாளில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறி விட்டார். அல்லது கண் பார்வை போய் விடும். 

நாளைக்கு ஆபரேஷன் என டாக்டர் சொல்லவே, இன்றைக்கு என்னிடம் வந்திருக்கிறார்.
பதினாறு வருஷ சுகர், உருப்படியாக மருந்து எடுத்தது ஆறு மாதங்கள், முப்பது கிலோ எடையிழப்பு, கண் மண்டல பாதிப்பு. இதே வகை ஆராய்ச்சிகளை அவர் தொடர்ந்தால், அடுத்த வருடம் இதய பிரச்சினை, இரண்டு வருடத்தில் கிட்னி பிரச்சினை.
யார் மேல் தவறு? யோசிக்கவும். அடுத்தவனுக்கு ஆயிரம் அட்வைஸ் தரலாம். நம் உடலை ஆராய்ச்சி கூடமாக்கக் கூடாது.
"2016ல பேலியோ டயட் பற்றி தெரியும்ல, அப்பவே என்கிட்ட வரவேண்டியது தானே?", அதற்கு அவர் பதில், "உங்க அட்ரஸ் கிடைக்கல சார்". பேஷண்டிடம் கோபப் படக் கூடாது. இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாரே என மிக வருத்தமாக இருந்தது. 

அவருக்கு இரண்டு வாரம் டயம் தந்திருக்கிறேன். முதல் வாரம் மருந்துகள் + பேலியோ. பதினைந்து வருட uncontrolled sugar. அது அவர் கணையத்தை பாதித்திருந்தால் மருந்துகள் வேலை செய்யாது. இன்சுலின் தான் வழி. சுகர் குறையாவிட்டால் அடுத்த வாரம் மருந்துகள் + இன்சுலின் + பேலியோ. அதற்கு மேலும் சுகர் குறையாவிட்டால் கண்ணைக் காக்க ஆபரேஷன் செய்து விட்டு வாழ்நாள் முழுக்க பேலியோ + மருந்துகள், தினமும் சுகர் செக் செய்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை என்று இருக்க வேண்டும்.     

அவர் நலம் பெற ஆண்டவனை வேண்டுவோம்.
அவர் கதையைப் பார்த்து படிப்பினை கற்போம். சுகர் பேஷண்டுகள் தினமும் சுகர் செக் செய்வோம். சுகர் லெவலை எப்படியாவது 100 அல்லது 110க்குள் வைப்போம்.



★★★★★★★★★
★★★★★
★★★

"வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை"
என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.



ஒரே ஒரு புள்ளி | பல நோய்களுக்கு தீர்வு

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/httpsyoutubegs92utfu3r8.html?m=0

இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



TNPSC TAMIL - இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

TNPSC TAMIL -
இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் 


இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் 
தேர்வில் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.

மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும்.

1. நாற்படை - தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்ப்படை 

2. பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா 

3. ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி 

4. ஐஞ்சிறுங்காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் 

5. ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்

6. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் 

7. ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் 

8. ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை 

9. ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்

10. பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்

11. சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை 

12. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்

13. பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் 

14. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம் 

15. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்



Friday, October 26, 2018

லாரிகளில் ஏன் இந்த பெரிய பொம்மை

லாரிகளில் ஏன் இந்த பெரிய பொம்மை




13 வகையான சாபங்கள்

13 வகையான சாபங்கள் 


சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!

1) பெண் சாபம், 
2) பிரேத சாபம், 
3) பிரம்ம சாபம், 
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம், 
6) கோ சாபம், 
7) பூமி சாபம், 
8) கங்கா சாபம், 
9) விருட்ச சாபம், 
10) தேவ சாபம் 
11) ரிஷி சாபம் 
12) முனி சாபம், 
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.

பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும்.

எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.👇
~~~

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...



 நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

 மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 இயற்கையின் மருத்துவம்:

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.


கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

 முடி உதிர்தல்:

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

 நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

 காது வலி:

 காது வலிக்கு  வில்வ  இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.

உடல் சோர்வு:

வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.

 வாய் புற்றுநோய்:

இந்த வில்வ இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள வேதி பொருட்கள் நம் வாயில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது வாய் நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.

மேலும் சில நன்மைகள்:

வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.

இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.

மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

★★★★★★★★★★
★★★★★
★★★

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...??...

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/10/blog-post_25.html?m=0


தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்படுமா?

https://kavimalaravan.blogspot.com/2018/10/blog-post_3.html?m=0


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்