Friday, March 9, 2018

குழந்தைகளின் முக்கிய இரு பருவங்கள்

குழந்தைகளின் முக்கிய இரு பருவங்கள்


உங்கள் திருமண வாழ்வின் அத்தாட்சியாக குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தை வாழ்வில் பல பருவங்களைக் கடந்து வயோதிகத்தை அடைகிறது. ஆணோ பெண்ணோ எந்த ஒரு குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் பிறப்பதில்லை. தனது உடற்கூறுகளில் ஏதோ ஒரு சில குறைபாடுகளுடன் தான் பிறக்கிறது.  பெற்றோர்களின் உடலில் உள்ள குறைபாடுகள் தான் இதற்கு காரணம். 

இவர்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தை அடைய பெண்களுக்கு சுமார் 14 வருடமும் ஆண்களுக்கு 16 வருடமும் ஆகிறது. அந்த 14ம் வயதில் பெண் பூப்படைகின்றாள். 16ம் வயதில் ஆணுக்கு அரும்பு மீசை முளைக்க ஆரம்பிக்கிறது. பிறகு குரலில் மாற்றம் ஏற்படுகிறது.

குழந்தை பருவம் முழுமையடைந்த ஏழாவது வயதில் பெண்களுக்கும், எட்டாவது வயதில் ஆண்களுக்கும் பற்கள் விழ ஆரம்பிக்கும்.

எந்த வயதில் பற்கள் விழுகிறதோ அதன் இரண்டாவது மடங்கான 14ம் வயதில்  பெண் பூப்படைகின்றாள். 16ம் வயதில் ஆண் வாலிபப் பருவத்தை அடைகின்றான்.

உங்கள் குழந்தை பிறந்தது முதல் வாலிபப் பருவத்தை அடையும்வரை  உள்ள இந்த காலகட்டம்  மிக முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எந்தவிதமான  உடல் மன ரீதியான நெருக்கடியும் இருக்கக்கூடாது. 

இந்த காலகட்டம் தான் உங்கள் பிள்ளைகளின்  உடல்,  தாய் தந்தையர்களிடமிருந்து அவர்களுக்கு வரும் பரம்பரை நோய்களை (Genetic Diseases) தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் முக்கியமான தருணமாகும்.

இந்த காலகட்டத்தில் பயம், பதற்றம், படிப்பு சம்மந்தப்பட்ட நெருக்கடி, டிவி இன்டர்நெட் போன்றவற்றால் ஏற்படும் எண்ணச்சிதரல் மற்றும் தவறான பழக்கவழக்கங்கள், குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், தவறான உணவுமுறை போன்றவைகள் பெற்றோர்களிடமிருந்து, பிள்ளைகளுக்கு  வரும் நோய்களை தீராத பரம்பரை நோய்களாக மாற்றிவிடும். குழந்தைகளுக்கு தீராத நாள்பட்ட நோய்கள் வர பெற்றோர்களே முக்கியமான காரணமாகும்.

உங்கள் குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும்போது  அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்காக  சீக்கிரம் சீக்கிரம் என்று எப்போது அவசரமாக  எழுப்புகின்றீர்களோ, அப்போது தான் உங்கள்  குழந்தையின் இதயத்தில் பயமும், பதற்றமும் உண்டாகிறது. இதயத்தில் ஏற்படும் இந்த தாக்கம் அவர்களின் சீரான இரத்த ஓட்டத்தில்  தடைகளை ஏற்படுத்தி உடல் உள்ளுறுப்புகளில்  நோய்களை உண்டாக்குகின்றது. மேலும் பெற்றோர்களிடமிருந்து  வந்த நோய்களையும் குணப்படுத்த முடியாமல் உடல் தடுமாறுகிறது. அதுவே நாள்பட்ட நோயாக தங்கிவிடுகிறது.

ஏழு வயதிற்கு முன்பாக  பற்கள் விழுதலும், 10, 11 வயதில் மார்பகம் வளர்ச்சியடைதலும், உங்கள் மகள் பூப்பெய்தலும்,  மகனுக்கு 13, 14  வயதில் அரும்பு மீசை வருவதும், அவர்களின் அதிகமான உடல் உயரமும், வளர்ச்சியும் உங்கள் குழந்தைகளின் சிறுநீரகம் தேவைக்கு மீறின அவசரத்தில் இயங்கிக் அவர்கள் சிறுநீரகத்தின் உயிர்ச் சக்தி வீனாக விராயமாகி கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். 

குழந்தை பருவம் முதல் வாலிபப் பருவம் வரை உள்ள காலகட்டத்தில்  உங்கள் குழந்தைகளின் சிறுநீரகம் உடல் உறுப்பில் உள்ள பலவீனத்தை சரிசெய்து பரம்பரை நோய்கள் என்று சொல்லப்படும் நீரிழிவு, ஆஸ்துமா, பார்வை கோளாறுகள், தோல் வியாதிகள், சைனஸ் போன்ற பல  நோய்களை நீக்கக் கூடிய வேலையை செய்கிறது.

மேலும் சிறுநீரகத்தின் உயிர்சக்தி  வருங்கால சந்ததிகளை உண்டாக்கக்கூடிய, புதிய உயிர்களை தோற்றுவிக்கும் விந்தனுக்களையும், சினைமுட்டைகளையும் உருவாக்கக் கூடிய மிக உன்னதமான வேலையை செய்து கொண்டிருகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் சிறுநீரகத்தின் சக்தி எக்காரணத்தைக் கொண்டும் வீனடிக்கப்படக் கூடாது.

உதாரணமாக ஒருவருக்கு பயமும், பதற்றமும்  இருக்கும் போது அவர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை காணலாம். குழந்தைகளை பயமுறுத்தினாலும் அவர்கள் சிறுநீர் கழித்துவிடுவர்கள்.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் உயிரோட்டச் சக்தி பாதிக்கப்பட்டு தடுமாற்றத்துடன் இயங்குவதே இதற்குக் காரணமாகும்.

சிறுநீரக உயிர்சக்தியில் மாற்றம் ஏற்பட்டு முறையற்று இயங்கும்போது ஏழு வயதிற்கு முன்பாகவே பற்கள் விழ ஆரம்பிக்கும். அவர்கள் எழுலும்புகளின் உயிர்சக்தியில் தாக்கம் ஏற்பட்டு விரைவாக நெடுநெடுவென உயரமாக வளருவார்கள்.  ஆனால் எலும்புகளில் உறுதித்தன்மை  இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து காணப்படுவார்கள்.   இவர்களுக்கு நடுத்தர வயதிலேயே மூட்டுக்களில் வலிகள் ஏற்படும். உங்கள் குழந்தைகளின் இந்த விரைவான வளர்ச்சி உங்களுக்கு கவலையை ஏற்படுத்த வேண்டும்.

இது பிற்காலத்தில்  மாதவிடாய் கோளாறுகள், கர்பப்பை, சினைப்பை கட்டிகள், ஆண்மை பெண்மை குறைபாடுகள், பிள்ளைப் பேறு தள்ளிப்போதல், ஹார்மோன்கள் குறைபாடு,  இளவயது  வழுக்கை, திக்குவாய், பயம், பதற்றம், கோழைத்தனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

சுமார் 16ம் வயதில் ஆண்களுக்கு குரல் உடைந்து முதிர்ச்சி அடையும். ஆனால் மன பதற்றத்தின் காரணமாக சிறுநீரகத்தின் முறையற்ற இயக்கம் தொடர்ந்தால், குரல் முதிர்ச்சி அடையாமல் பெண் தன்மையுடன் கூடிய கீச்சு குரல் ஏற்பட்டுவிடும். 

யாருக்கு சிறுநீரகத்தின் உயிர்சக்தி உறுதித் தன்மையுடன் இருக்கின்றதோ அவர்களின் குரல் வலிமையுடனும், உறுதியுடனும் இருக்கும். இவர்கள் பேச்சாற்றல் உடையவர்களாகவும், தலைமை பொறுப்புக்கு (Commanding Power) தகுதியானவர்களாகவும் காணப்படுவார்கள்.

உங்கள் குழந்தைகள் மீது திணிக்கப்படும் அவசரத்தன்மை, அதிரடியாக எழுப்பி, பசியில்லாத நிலையிலும் அவசர அவசரமாக அவர்கள் வாயில் ஏதோ உணவைத் தினித்து  பரபரப்புடன் பள்ளிக்கு அனுப்புதல், மற்றவர்களை விட அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்கிற உந்துதல், போட்டி பொறாமை எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்தல் போன்ற அனைத்தும் அவர்கள் சிறுநீரகத்தின் உயிர்சக்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஒரு பெண் வயதுக்கு வந்ததும் அவள் உறவுக்கு தகுதியனவளாக ஆகிவிடுகிறாள். ஆனால் ஒரு கருவை சுமக்கக் கூடிய தகுதியையும் மன முதிர்ச்சியும் தனது 21வது வயதில்தான் அவள் பெறுகின்றாள். அந்த வயதில் தான் கர்பப்பை முழு வளர்ச்சியடைகிறது.  அதனால் தான் பெண்ணின் திருமண வயது 21 என கணக்கிடப்படுகிறது.

ஒரு குழந்தை கருத்தரிக்கப்படும் போது தாய் தந்தையரில் யாருடைய சிறுநீரகம் உறுதித் தன்மையோடு  இருக்கின்றதோ அவர்களின் முக சாயலைக் கொண்டு தான் குழந்தைப் பிறக்கும். இருவருடைய சிறுநீரகமும் தேவையான உயிரோட்டதைப்  பெற்றிருந்தால் தாய் தந்தை இருவரின் சாயல்களையும்,  குணாதிசயங்களையும் பெற்றிருக்கும்.

பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை தரத்தை பற்றி மட்டும்தான் யோசிக்கின்றீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை. 

காலையில் பரபரப்புடன் எழுவதை விட உடலுறுப்புகளுக்கும், சீரான மனநிலைக்கும் பாதகத்தை விளைவிக்கும்  செயல் எதுவும் இருக்க முடியாது.

ஆஸ்துமா, வீசிங் என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒரு நோய். அதிகாலையில் ஆஸ்துமா நோயாளிகள் கஷ்டப்படுவதை  பார்திருப்பீர்கள்.
அந்த அதிகாலை நேரத்தில் ஏன் ஆஸ்துமா நோய் அவர்களை எழுப்பிவிடுகிறது?

சீன அகுபங்சர் மருத்துவத்தின் தத்துவப்படி  நமது   உடல்   உள் உறுப்புகள்  ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அதிகப்படியான  இயக்க நேரம் உள்ளது. (Biological Clock). 

மனிதன் நாள் முமுவதும் சுவாசித்தாலும் அவனது நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். நமது நுரையீரல் நாள் முழுவதும் இயங்குவதற்கான எனர்ஜியை அந்த நேரத்தில் தான் இந்த பிரபஞ்ச சக்தியிலிருந்து கிரகித்துக் கொள்கிறது. இந்த நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவார்கள்.

வெளிப் புறத்திலிருந்து  பிரபஞ்ச சக்தியை கிறகித்து நுரையீரல் தன்னை புதுப்பித்து கொண்டு ஆஸ்மா, வீஸிங் போன்ற நோயை குணப்படுத்திக் கொள்ள முயல்கிறது.

நாம் தூங்கும்பொது ஐம்புலன்களும் முமுமையாக இயங்காமல் இருக்கும். தூக்க நிலையில் நமது நுரையீரல் இயங்குவதை விட  விழித்திருக்கும் போது இயங்கும் சுவாசமானது நுரையீரலை நன்முறையில் புதிப்பிக்கின்றது. 

9 மணிக்குள் தூங்கி அதிகாலை 4 மணிக்கு எழுவதை பழக்கப் படுத்துவது ஒன்றே உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும்,  சுபிச்சமான  வாழ்க்கைக்கும், அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கும், நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.

அதிகாலை நேரத்தில் ஏழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் இல்லாமலும்,  பரப்பில்லாமலும், சிறப்பாகவும் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களை  செய்ய முடியும்.

இரவு 11 முதல் 3 மணிவரை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான, மன முதிற்சிக்கு தேவையான அனைத்து முக்கியமான ஹார்மோன்களும் சுறக்கப்படுகின்றன. 

இந்த நேரத்தில் வெளிச்சமில்லாமல் நன்றாக தூங்குவது, ஒரு குழந்தை கர்ப்பப் பையில் அனைத்து சக்திகளையும் பெற்று நன்கு வளருவது போலாகும். 

அதிகாலையில் பதற்றம் இல்லாமல் நிதானமாக எழும்போது மனதில் அமைதியும், தெளிவும் இருக்கும். அந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, ஹோம்வொர்க் செய்வது அனைத்தும் எளிதாக மனதில் பதியும். 

பெரியவர்களும்  இரவில் விரைவாக தூங்கி, அதிகாலையில் எழுந்து மற்ற அலுவல்களை செய்வது உங்கள் உடல் நலனுக்கும், மன அமைதிக்கும் சிறப்பானதாக அமையும். 

Dr. Gouse. MD (Tcm, Acu)., Singapore.

இத்தகவல்கள் மாற்று மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவர் குழுவினரிடமிருந்து பெறப்பட்டது....

இவ்விடம் பதிவிடுவது 
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment