நாடி பிடித்து பார்ப்பது எப்படி?
சித்த வைத்தியத்தின் அடிப்படையே நாடி பிடித்துப் பார்ப்பது தான். நாடி பார்ப்பது சித்த வைத்தியத்தின் அடிப்படை மட்டுமல்ல. அதன் சிறப்பும் கூட. அத்தகைய நாடி பார்க்கும் நாமும் முறையாக எப்படி அறிந்து கொள்வது?
மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். சிடி ஸ்கேன் செய்ய முடியாததைக்கூட இந்த நாடி பார்க்கும் முறையைப் பயன்படுத்தி, டாக்டருக்குப் படிக்காத கிராமத்துப் பாட்டி கூட சொல்லிவிட முடியும். நாடியைப் பெரும்பாலும் கை மணிக்கட்டில் பார்ப்பது தான் சிறந்தது. இதைத்தான் டாக்டர்கள் பல்ஸ் ரீடிங் என்று சொல்வார்கள்.
நாடி தலையில் இருந்து கீழ்நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டுகொள்ள முடியும். நாடி பார்க்க கட்டை விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் தான் பயன்படுத்த வேண்டும்.
- வாதநாடி,
- பித்த நாடி,
- கப நாடி,
- ஆத்ம நாடி,
- பூத நாடி,
- குரு நாடி,
- பிராண நாடி எனப் பல வகையுண்டு.
நாடி என்பது என்ன?
ஆங்கில மருத்துவத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்முடைய முன்னோர்கள் இதைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர்.
மனித உடலில் உண்டாகும் அத்தனை வியாதிகளுக்கும் வாதம், கபம், பித்தம் என்ற மூன்றும் தான் காரணம், அவற்றைக் கட்டுப்படுத்தினாலே போதும். ஏராளமான நோய்களிலிருந்து விடுபட முடியும்.
உடலில் ரத்த ஓட்டத்தின் ஆதார மையமாக இருப்பது இதயம். இதயத்தின் செயல்பாட்டைப் பொருத்துதான் ரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொருத்துதான் அமையும். இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப உருவாவது தான் நாடி.
நாடி பார்க்கும் முறை
மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு விரல்களை மாறி மாறி அழுத்தியும் தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
30 விநாடிகள் வரை துடிப்பை கவனித்து அதை 2 -ஆல் பெருக்கி வருவது தான் நமது இதயத்துடிப்பின் எண்ணிக்கை.
18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு சராசரியாக 70 - 100 / நிமிடம் அளவு இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு சராசரியாக 60 - 100/நிமிடம் என்ற அளவிலும் துடிப்புகள் இருக்க வேண்டும்.
- த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
மாற்று மருத்துவக் குழுவிடமிருந்து
இவ்விடம்
- த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment